Followers

Thursday, December 19, 2013

துபாய் இந்திய தூதரக பெண்ணின் மன மாற்றம்!



இந்த காணொளியில் ஜாகிர் நாயக்கிடம் கேள்வி கேட்கும் ஹிந்து பெண் படிக்காத பாமரர் அல்ல. துபாய் இந்திய தூதரகத்தில் பணியாற்றக் கூடிய மெத்த படித்த பெண். அந்த பெண் வைக்கும் கேள்விகளும் மிக சாதுர்யமானவை. அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அழகிய முறையில் பதில் அளிக்கிறார் ஜாகிர் நாயக். தெளிவு கிடைத்தது. அந்த கூட்டததிலேயே இந்த பெண் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொள்கிறார். மேலும் தனக்கு இறைவனை இஸ்லாமிய முறையில் எவ்வாறு தொழுவது என்று தெரியாது என்றும் அதற்கு யாரையாவது ஏற்பாடு செய்து தர முடியுமா? என்றும் கேட்டார். அந்த கூட்டத்திலேயே அதற்கும் ஒரு பெண்மணியை அந்த அரங்கம் ஏற்பாடு செய்து கொடுத்தது.

பலரது விமரிசனம் 'இஸ்லாமியர்கள் பணம் கொடுத்து மத மாற்றம் செய்கின்றனர்' என்பது. ஆனால் இங்கு அந்த பெண்ணுக்கு பணம், பதவி ஒரு பொருட்டே அல்ல. இறைவனின் தேடுதலால் அலை பாயும் அவரது மனதுக்கு ஜாகிர் நாயக்கின் இந்த நிகழ்ச்சி ஒரு வடிகாலாக அமைந்துள்ளது. உடன் சத்திய இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கிறார். அதிகமான மன மாற்றங்கள் ஏற்படுவது இவ்வாறே.

மொகலாயர்கள் காலத்தில் வேண்டுமானால் பணத்துக்காகவும், பதவிக்காகவும் ஒரு சிலர் மன மாற்றம் அடைந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் ஆள்வோர்களால் இஸ்லாமியர்கள் மிரட்டப்படுகின்றனர். பல இடங்களில் சொத்துக்கள் திட்டமிட்டு சூரையாடப்படுகின்றன. மோடி தலைமையில் நடந்த குஜராத் இனப் படுகொலைகளை இந்த உலகம் அவ்வளவு சுலபமாக மறந்து விடாது. காவல் துறை பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தவராக இருப்பதால் அங்கும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பதில்லை. நீதி மன்றங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பட்டமாக இஸ்லாமியருக்கு எதிராகவே செயல்படுகிறது.



திருச்சியில் பாலமுருகன் என்ற சகோதரர் 4 வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்று தன் பெயரை இஸ்மாயில் என்று கெஜட்டில் பெயர் மாற்றம் செய்தார். தன்னுடைய பள்ளி மார்க் ஷீட், TC, பேங்க் பாஸ்புக், முதற்கொண்டு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, IT CARD முதற்கொண்டு பதினைந்திற்கும் மேற்பட்ட ஆதாரங்களை வைத்து இருக்கிறார்..

அவர் சமீபத்தில் பாஸ்‌போர்ட்டிற்காக விண்ணப்பித்து இருந்தார். பாஸ்போர்ட் தயாராகி தற்பொழுது திருச்சி GH காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்துள்ளது.

அவர் பெயர் மாற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்கள் மற்றும் புதிய பெயர் உள்ள அனைத்து ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரும் திருச்சி GH காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ளார்.

மேலும் இவர் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர் என்பதால் IB ( Intelligence Bureau ) பிரிவிற்கு பாஸ்‌போர்ட் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமின்றி விசாரணைக்கு வீட்டிற்கு வந்த போலீஸார் இவருக்காக சாட்சி கூறிய அண்டை வீட்டுக்காரரை நோக்கி, " இவர் இஸ்லாத்தை ஏற்று உள்ளார்.. இவரால் ஏதேனும் பிரச்சினையானால் நீதான் மாட்டுவாய்" என்றும் கூறி மிரட்டியுள்ளனர்.

ஒரு இந்திய குடிமகன் இஸ்லாத்தை ஏற்பது இவ்வளவு பெரிய குற்றமா? எந்த அளவு ஆளும் வர்க்கத்தால் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம். இவ்வளவு மிரட்டல்கள் வந்தும் அனைத்தையும் எதிர்கொண்டு 'நான் இஸ்லாமியனாகவே இருப்பேன்' என்று சவால் விட்டு இன்று வரை வாழ்ந்து வருகிறார். இவருக்கு பாஸ்போர்ட் கிடைத்து விட்டதா என்ற விபரம் தெரியவில்லை. இப்படித்தான் புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களை மிரட்டி அடி பணிய வைக்கப் பார்க்கின்றனர். ஆனால் இத்தனை தடைகளையும் மீறி இஸ்லாம் தனது கொள்கைகளை பட்டி தொட்டிகளெல்லாம் கொண்டு சென்று கொண்டே இருக்கிறது.

அவர்கள் இறைவனின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும், இறைவன் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

குர்ஆன் 61:8

2 comments:

C.Sugumar said...

இந்துவாக வாழ்பவன் மட்டுமே இந்தியனாக வாழ்கிறான். முஸ்லீம்களின் உடல் இந்தியாவில்.ஆனால் எண்ணத்தாலும் அபிமானத்தாலும் அரேபியா்கள்தான்.அரேபிய பெயா்கள்,அரேபிய தலைவா்களின் மேல் காதல் யுதர்களை ஒழிக்க ஆா்வம் அரேபிய பழங்கதைகள் பேசி அரபு மக்கள் அறிவிலும் பண்பாட்டிலும் வீரத்திலும் கல்வியுலும் சிறந்தவா்கள் என்று புகழாரம் போடுவது இப்படி எத்தனை எத்தனை? தஞ்சை பெருவுடையாா் ஆலயம் தமிழனின் பாரம்பாியச்சிறப்புக்கு எடுத்துக்காட்டு என்று இந்து தமிழன் மட்டும் அல்ல தி.க தமிழன் கம்யுனிஸ்ட் தமிழா் .... போன்ற அனைவரும் கருதுகின்றனா். ஆனால் முஸ்லீம்களுக்கு (கிறிஸதவர்களும்) மேற்படி ஆலயம் சாத்தானின் ஆலயம் காபீா்களின் ஆலயம் வழிகேடா்களின் முாஷிக்களின் ஆலயம் என்பதுதானே கருத்து. காஷ்மீாில் கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு ஏற்படும் நிலைமை குறித்து என்றாவது ஒருநாள் ஒரு கட்டுரை எழுதாத குருடன் நீ. உனக்கெல்லாம் பொருத்தமானது குரான் என்ற அரேபிய வல்வாதிக்க பத்தகம் தான். வலக்கரம்கைப்பற்றிய பெண்களை வைப்பாட்டிகளாக வைக்கச் சொல்லும

suvanappiriyan said...

//தஞ்சை பெருவுடையாா் ஆலயம் தமிழனின் பாரம்பாியச்சிறப்புக்கு எடுத்துக்காட்டு என்று இந்து தமிழன் மட்டும் அல்ல தி.க தமிழன் கம்யுனிஸ்ட் தமிழா் .//

தமிழனனின் பெருமையை இந்த கோவில் பறை சாற்றுகிறது என்பதை எந்த முஸ்லிமும் மறுக்கவில்லை. ஆனால் அங்கு இறைவன் இருக்கிறான்: அங்கு வந்து கும்பிடு போடு. அப்படியே அங்கு வேதம் ஓதிக் கொண்டிருக்கும் பார்ப்பனருக்கும் ஒரு கும்பிடு போடு என்றால் அதனை ஒரு முஸ்லிம் செய்ய மாட்டான்.

ஏனெனில் 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு' என்று குர்ஆன் தெளிவாக சொல்லி விட்டது.