Followers

Friday, December 06, 2013

பாப்ரி மஸ்ஜித், சில கேள்விகளும் பாடங்களும் - அக்பருத்தீன் ஒவைஸி!|



பாப்ரி மஸ்ஜித், சில கேள்விகளும் பாடங்களும் | அக்பருத்தீன் ஒவைஸி | மஸ்ஜித் தாருஸ்ஸலாம், ஹைதராபாத் | டிசம்பர் 2013
-------------------------------------------------------------

21 வருடங்கள் ஆனபின்னும் ஷஹீத் ஆன பாப்ரி மஸ்ஜித்தின் மீள்வரவை, ஒவ்வொரு வருடமும் நாம் எதிர்பார்த்த வண்ணமே உள்ளோம். இவ்வருடமும்.

யாரும் இதை எளிதில் மறந்து போயிருக்கலாம். எனினும், பூமியின் மேல் தன்னுடைய சிரத்தைக் கொண்டு வைக்கும் உலகெங்கும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் டிசம்பர் 6, 1992 தேதியை மறக்கவியலாது. இந்திய வரலாற்றின் வலி மிகுந்த பக்கங்களின் ஒன்றாய், இந்தியாவில் முஸ்லிம்களாய் வாழ்கிறோம் என்னும் கர்வத்தைக்கொண்டவர்களுக்கு சாட்டையடியாய், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்னும் மனப்பால் குடித்துக்கொண்டவர்களின் தொண்டையில் விஷமாய், மதச்சார்பின்மையைப் போற்றிப்புகழ்ந்து வாழ்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சியாய் அமைந்த நாள், இந்த நாளே....

21 வருடங்கள் கடந்து விட்ட பின்னும் இன்றும் ஒவ்வொரு முஸ்லிமும் நீதியை எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றான். இத்தனை வருடங்களிலும் இந்திய முஸ்லிமின் பார்வையில் படுவது, மதச்சார்பின்மையற்ற இந்திய நாடென்னும் ஓர் பக்கமும், நிஜ இந்தியாவின் மற்றொரு பக்கமும்தான். இருந்தும் நீதி கிடைக்கும் என்னும் நம்பிக்கை இன்னும் கரைந்திடவில்லை அவனின் கண்களில். நம்பிக்கை, எண்ணங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு முஸ்லிமின் ஈமானிலும் இதே சிந்தனை குடிகொண்டுள்ளது, இன்று வரை: “நமக்கு நீதி கிடைக்கும். இன் ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்கும். மீண்டும் அதே இடத்தில் பாப்ரி மஸ்ஜித் எழுப்பபடும்.”

பாப்ரி மஸ்ஜித்தின் அழிப்பைப் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள் பல இருப்பினும், சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன், இங்கிருக்கும் அனைவருக்கும். பாப்ரி மஸ்ஜித்தை அழிப்பது என்பது ஓரிரு வருடங்களில் சிந்தித்து, வடிவமைக்கப்பட்ட திட்டமல்ல. சுதந்திர இந்தியாவின் முதல் மூச்சிலிருந்தே அந்தத் திட்டமும் தீட்டப்பட்டுவிட்டது. அவர்கள் வெறுமனே அந்த ஓர் நாளுக்காகத்தான் காத்திருந்தார்கள். எப்பொழுது அந்த நாள் வரும், எப்பொழுது நாம் அந்த மஸ்ஜிதை அழிப்போம், எப்பொழுது இந்து ராஷ்டிரத்தின் அடிக்கல்லை நாட்டுவோம்,எப்பொழுது ராமனின் கோவிலை அங்கே கட்டியெழுப்புவோம், எப்பொழுது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமையும் அனுதினமும் மரணப்பிடியில் வாழ்நாளைக் கடத்த வைப்போம், எப்பொழுது முஸ்லிம்களை, அவர்களின் ஆசைகளை, அபிலாஷைகளை, குடும்பத்தை, சொந்தங்களை, உயிரை, உடைமையை பிச்சைப்பொருளாய் மாற்றுவோம் என்னும் சிந்தனையிலேயே காத்திருந்தார்கள். காலம் கனிந்ததும், நேரம் கிடைத்ததும், வாய்ப்பைத் தவறவிடவில்லை அவர்கள், மஸ்ஜிதை ஷஹீதாக்கியே ஓய்ந்தார்கள்.

பாரதீய ஜனதா பார்ட்டியின் நீண்டகாலக் கொள்கையான இந்த அழிவை செய்வதன் மூலம் அல்லது, மதச்சார்பின்மை என்பது பொய், இந்து ராஷ்டிரம் என்பதே மெய் என்னும் கூற்றை நிலைநிறுத்திட வேண்டி ஒவ்வொரு உறுப்பினரும் தம்மால் ஆன வேலைகளை இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் செய்து கொண்டேதான் இருந்தனர், திட்டங்கள் இட்டனர். சிலர் சட்டத்தின் ஓட்டைகளை நாடினார்கள், சிலர் மக்கள் தலைவர்கள் என்னும் முதலைகளை நாடினார்கள், இன்னும் சிலரோ மக்களின் மனங்களிலேயே விதை தூவி வளர்க்க ஆரம்பித்தார்கள்.

இந்த அழிவின் முதல் அடியாக ராமர் சிலைகளை மஸ்ஜிதில் கொண்டு வைப்பதாகட்டும், அல்லது, மூடியிருந்த கதவுகளை மீண்டும் திறந்து இரு சமூகத்தாருக்கும் இறைவழிபாடு செய்ய அனுமதித்ததாகட்டும், இதில் முக்கிய கை, முக்கிய தாக்கம், வேறெவரிடமிருந்தும் இல்லை, மாறாக, ஒவ்வொரு மூச்சிலும் மதச்சார்பின்மை, மதச்சார்பின்மை எனப் பொய்யைக் கூவிக் கூவி விற்கும் காங்கிரஸே இந்த அழிவின் பின்னிருந்த முக்கிய காரணியாகும், ஆம் காங்கிரஸ்தான் இதன் மூலம்.

ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு அறிக்கையிலும், நாங்கள்தான் மதச்சார்பின்மையைக் காக்கிறோம், நாங்கள்தான் மதச்சார்பின்மையை பூஜிக்கிறோம், சுவாசிக்கிறோம் என்று உடலின் அத்தனை அணுவிலும் பொய்மையைக் கொண்ட இதே காங்கிரஸார்தான் பாப்ரி மஸ்ஜித்தினுள் முதன் முதலில் காவிக்கறைகளை கறை படிய விட்டது. மிம்பரின் இடத்தில் மூர்த்திகளை (சிலைகளை) வைத்தது, இதே காங்கிரஸார்தான் இரு சமூகங்களுக்கும் உரிமை (!!) உண்டு என்று சொல்லி வழிபாடுகளுக்கு இடம் தந்தது, இறுதியில் மஸ்ஜித்தை ஷஹீதாக்கிய குரூரமும் காங்கிரஸாரையே சாரும்!

எனக்கு இன்னமும் தெளிவாக நினைவிருக்கிறது, பாப்ரி மஸ்ஜித்தின் ஷஹாதத்திற்கு முன்னே பாஜகவின் லால் கிஷன் அத்வானி தேசம் முழுதும் ரத யாத்திரை மேற்கொண்டது. வழி முழுதும் விஷத்தின் விதைகளை விதைத்துச் சென்றார். ஒவ்வொரு கதவையும் தட்டித் தட்டி ராமனின் ஆட்சிக்கு உதவுங்கள் எனப் பிச்சை எடுத்தபடி சென்றார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் இளைய சமுதாயத்தை இந்து ராஷ்டிரம் அமைக்க அழைத்துச் சென்றார். பிரிவினையும், துவேஷமும் மக்கள் மத்தியில் கொழுந்து விட்டெரிந்தது. எங்கெல்லாம் ரதயாத்திரை தன் காலடியை எடுத்து வைத்ததோ அங்கெல்லாம் அழிவின் பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டனவே அதை எப்படி மறக்க முடியும்?? இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரியாது, ரதயாத்திரையின் மூலம், ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் பரம்பரை பரம்பரையாக, காலம் காலமாக வைரங்களையும், உயர்ரக கற்களையும் விற்று பேரும் புகழும் பெற்றிருந்த முஸ்லிம் வாணிபக்குடும்பங்களை, துணிகளின் தொழிலில் அபிவிருத்தியையும் மனநிம்மைதியையும் பெற்றிருந்த முஸ்லிம் குடும்பங்களை ஒரே இரவில் ஒன்றுமில்லாமல் ஆக்கியதை எப்படி மறக்க முடியும்?? வருடக்கணக்காக வட இந்தியாவில் நேர்மையான தொழிற்பணியின் மூலமும், தீரமான வியாபார சிந்தனையாலும் கோலோச்சியிருந்த முஸ்லிம் குடும்பங்களின் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் கரியில் இட்ட துணியாய் கசக்கிச் சென்றாரே அதை எப்படி மறக்க இயலும்??

மணமுடித்த நம் சகோதரிகளை விதவைகளாக்கிச் சென்ற அந்த யாத்திரை, நீண்ட வாழ்வினை கனவு கூட காணாத இளைய சமுதாயத்தை மிதித்துச் சென்றது. யாத்திரையைச் செய்த அத்வானி மட்டுமல்ல, இந்த விஷத்தையும், துவேஷத்தையும் விதைத்தது, உமா பாரதி ஒரு புறம், அஷோக் சிங்கால் ஒரு புறம், சில சமயம் சாத்வி ரிதம்பராயின் விஷம், என்றால் சில சமயம் கல்யாண்சிங், சில சமயம் பால் தாக்கரே என்றால் சில சமயம் வினய் கடியார்.... இன்றும் அவர்களின் விஷம் நிறைந்த கொடூர பேச்சுக்கள் பதியப்பட்டே உள்ளது. இந்திய தேசத்தின் மதச்சார்பின்மையை கொன்று புதைத்த, கொன்று புதைக்கும் இவர்களின் மீது இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது??? இந்தியாவை சாம்பலாக்குவதற்காகவே புறப்பட்ட ரத யாத்திரை இன்னும் இந்தியாவை அழித்துக் கொண்டுதான்
உள்ளது. எங்கே சென்றார்கள் சட்டத்தைக் காப்பாற்றுபவர்கள்? எங்கே சென்றார்கள் மதச்சார்பின்மையின் பாதுகாவலர்கள்? எங்கே சென்றது சட்டமும் நீதியும்? National Integration Council மூலம் அனைத்து மஸ்ஜித்களும் பாதுகாக்கப்படும் என்று சூளுரைத்தார்களே அந்த வாக்குறுதி என்னவாயிற்று? சுப்ரீம் கோர்ட் வரை சென்று பாப்ரி மஸ்ஜிதின் பாதுகாப்பிற்காக பக்கம் பக்கமாக சட்டங்களை ஏந்தி வந்தார்களே அந்த சட்டங்கள் என்னவாயிற்று?? அன்றைய இந்தியப் பிரதமர் நாட்டு மக்களின் முன்னிலையில் எந்த நிலையிலும் பாப்ரி மஸ்ஜிதை இடிக்க விட மாட்டோம், அதைப் பாதுகாப்போம் என்றாரே அந்த வாக்குறுதி என்னவாயிற்று? கோர்ட் உத்தரவையும் மீறி, பள்ளி வளாகத்தினுள் சென்று பள்ளியை தரை மட்டமாக்கினார்களே, இன்று வரை அவர்களின் மேல், Contempt of court-எனும் ரீதியில் கூட வழக்கு போடப்படவில்லையே ஏன்????????????????

“The people who destructed the Babri Masjid are the anti-national elements of this country..." என்று பார்லிமெண்ட்டில் கூவினாரே, அன்றைய பிரதமர்... அவரிடமும், அவரின் கட்சியிடமும் கேட்கிறேன், இன்று வரை அதில் சம்பந்தப்பட்ட எத்தனை Anti-national / தேசத்துரோகிகளின் மேல் வழக்குகள் பதியப்பட்டது? எத்தனை பேரை கழுவிலேற்றினீர்கள், எத்தனை தேசத்துரோகிகளை சிறையிலடைத்தீர்கள்... எத்தனை தேசத்துரோகிகளை கைது செய்தீர்கள், தண்டனை பெற்றுத் தந்தீர்கள், எதற்கேனும் விடை இருக்கிறதா?? இருபது வருடங்களாக இந்திய முஸ்லிமின் இந்தக் கேள்விக்கு, மதச்சார்பின்மை என்பது மெய்யானால், விடை தாருங்கள்.

மஸ்ஜித் மட்டும் வீழவில்லை அன்று, இந்தியாவின் மானம் வீழ்ந்தது உலகின் முன், மதச்சார்பின்மையின் முகத்திரை கிழிந்தது மக்களின் முன், ஹிந்துத்துவத்தின் கோர முகம் வெளிப்பட்டது மக்களின் முன், அனைத்தையும் கையைக் கட்டி வேடிக்கை பார்த்த அரசு அலுவலர்களாலும், காவல்காரர்களாலும் நீதி செத்துப் போனது அராஜகத்தின் முன்....

என் உரிமையைப் பற்றி நான் கேள்வி எனுப்பினால் நான் தவறு செய்தவனாகிறேன்.... என் கவலைகளைப் பற்றிப் புலம்பினால் நான் தண்டிக்கப்படுகிறேன்.... ஆனால் எவர்கள் என் தேசத்தின் மதச்சார்பின்மைக்கு சவால் விடுகிறார்களோ.... எவர்கள் என் தேசத்தின் இறையாண்மையைக் குழி தோண்டிப் புதைக்கிறார்களோ, எவர்கள் சட்டங்களின் மீது தங்கள் அபிலாஷைகளை பாய் விரிக்கிறர்களோ ... அவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறுங்கள்.... இத்தனை தேசத்துராகிகளையும், வரம்புகளை சட்டங்களை மீறியவர்களையும் என்ன செய்தீர்கள் என்று கூறுங்கள்....

எங்கள் வியாபாரங்களை தகர்த்தால் தோட்டாக்கள் சீறிப் பாய்வதில்லை... எங்களின் வீடுகள் சூறையாடப்பட்டால் தோட்டாக்கள் சீறிப் பாய்வதில்லை.... எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும் மானபங்கப்படுத்தப்பட்டால், வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எறிந்தால் தோட்டாக்கள் சீறிப்பாய்வதில்லை....எங்களின் மக்களையோ, வீடுகளையோ, சகோதரிகளையோ, குழந்தைகளையோ, இறை ஆலயங்களையோ காப்பாற்றத் துடிக்கையில் தோட்டாக்கள் விரைந்து எம்மேலேயே பாய்கின்றன... இதுதான் நியாயமா???? இதுதான் நீதியா??? தூர தூரத்திலிருந்து என் கேள்விகளைக் செவிமடுப்பவர்களிடம் கேட்கிறேன்...என் கேள்விகளுக்கு பதிலுண்டா??? இது என் கவலை மட்டுமல்ல, என் கேள்விகள் மட்டுமல்ல.... என் சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வோர் முஸ்லிமின் கேள்வியும் இதுவே....

உங்களிடம் எங்களுக்காக நேரமோ, பதிலோ எப்பொழுதுமே இருந்ததில்லையே.... இருக்காது உங்களிடம்.... ஏன் இருக்காது....ஏனென்றால் எங்கள் மசூதியைப் பாதுகாக்கும் நோக்கமே உங்களுக்கு இருக்கவில்லை.... அன்றைய இந்தியாவின் பிரதம மந்திரி இதில் இணைந்திருந்தார், லால் கிஷன் அத்வானி இணைந்திருந்தார், மத்திய/மாநில அரசு அதிகாரிகள் இணைந்திருந்தனர், அங்கு நின்று
கொண்டிருந்த காவல்காரர்கள் இணைந்திருந்தனர்... எல்லோருமே இதில் இணைந்திருந்தனர்..... உங்களின் ‘மதச்சார்பின்மை’ என்னும் ஓடி ஓடி இளைத்த பொய்க்கு ஓட்டத்திலிருந்து ஒரு இடைவேளை
தேவைப்பட்டது, மஸ்ஜிதை இடித்த மண்ணில்....

மதச்சார்பின்மை இருப்பது உண்மையானால், இந்தியர்களைப் பிரித்து, சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, இந்திய சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக்கி, மசூதியைத் தரைமட்டமாக்கி ஆக்ரோஷித்தார்களே அவர்களை தண்டனைக்குட்படுத்துங்கள், சட்டத்தின் முன் நிறுத்துங்கள், மசூதியை மீண்டும் எழுப்பித் தாருங்கள் அப்பொழுது ஆறுதல் கொள்கிறோம் நாங்கள், ஆம் இந்தியாவில் மதச்சார்பின்மை இன்னும் இருக்கிறதென்று.... ஆனால் நடந்தது என்ன??? எங்களின் மஸ்ஜிதை தரைமட்டமாக்கிய அதே இரவில், எங்கள் சமூகத்தை நடைப்பிணமாக்கிய அதே இரவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தலைநகரிலும் எத்தனை எத்தனை இளைஞர்களை சிறையிலடைத்தீர்கள்.....தேச அமைதிக்கு களங்கம் விளைந்திடும் என்று.... எத்தனை ஆயிரம் எங்கள் இளைஞர்களை கைது செய்தீர்கள், நாட்டு மக்களையும், நலனையும் பாதுகாக்கிறோம் என்று??? பறிகொடுத்தவர்களையே பலிகடாவாக்க உங்களால்தான் முடியும்.

மதச்சார்பின்மையை பொய்யாக்கி நீங்கள் எங்களை மண்ணில் வீழ்த்தினாலும், மரணத்தின் போது கூட ஒப்பாரி இட இடம் தராமல் எங்களின் வாய்க்குப் பூட்டு போட்டாலும், எங்களின் வாழ்வை சூனியமாக்கினாலும் தெரிந்து கொள்ளுங்கள், நாங்கள் இந்தியர்கள்... சுதந்திரத்திற்கு முன்னரும், அதன் பின்னரும், ஊன், உயிர், உடைமை, உரிமை என எல்லாவற்றையும் தியாகம் செய்து வளர்த்த இந்த தேசம் எங்கள் தேசம்.... இந்தியா எங்களின் தேசம்.... எங்களின் மண்.... எங்களின் மண்ணாகவே இருந்தது, இருக்கிறது, இன்னும் இருக்கும்...!! இந்தத் தேசத்தில் பிரிவினையையும், சமூகத்தில் குழப்பத்தையும், மனித மனங்களில் விரோதத்தையும் உண்டு செய்பவர்கள், நாங்களல்ல.... அவர்களின் பெயர் “பாரதீய ஜனதா பார்ட்டி”யாகும்.... அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய நீங்களோ... பாரத் ரத்னாவை அத்வானிக்குத் தருவதா, வாஜபேயிக்கு தருவதா அல்லது கல்யாண் சிங்கிற்கா என பட்டிமன்றம் நடத்துகிறீர்கள். வாஹ்.....!

எல்லோரும் கேட்கிறார்கள்.... அல்லாஹ்வின் இல்லத்தை அல்லாஹ் காப்பாற்ற மாட்டானா? பாதுகாக்க மாட்டானா....?? நிச்சயமாக அல்லாஹ் அவனில்லத்தைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் இல்லத்தை அவனின் அத்தனை படைப்புக்களும் சேர்ந்து பாதுகாப்பதை விடவும் அல்லாஹ் பாதுகாக்க வல்லவன். உலகில் உள்ள அத்தனைப் படைப்புக்களையும் பாதுகாக்கும் இறைவன், அவனின் இல்லத்தைப் பாதுகாக்க மாட்டானா?? பிறகு ஏன் அல்லாஹ் இந்த மஸ்ஜிதின் ஷஹாதத்தை அனுமதித்தான்??????

அல்லாஹ் இந்த மஸ்ஜிதின் ஷஹாதத்தை நமக்கு ஓர் எச்சரிக்கை ஆக்கியுள்ளான்... இந்தியாவில் வாழும் முப்பது கோடி முஸ்லிம்களின் மனங்களை, உணர்வுகளைத் தட்டி எழுப்பியுள்ளான்....

முஸ்லிம்களே எழுந்து விடுங்கள்...உணர்வு பெறுங்கள்.... பிரிவினையை விட்டுவிட்டு ஒன்று கூடுங்கள்.... உங்களின் சகோதர சகோதரிகளின் பாதுகாப்பிற்காக ஒன்றிணையுங்கள்.... அல்லாஹ்வைத் துதிக்கும் ஆலயங்களைப் பாதுகாக்க அவனின் இல்லங்களில் தோளுடன் தோள் சேர்த்து நில்லுங்கள் என... இது அல்லாஹ்வின் எச்சரிக்கையே ஆகும்....!!

தன்னுடைய இல்லத்தை அழிப்பதைப் பொருந்திக்கொண்டு அல்லாஹ் நம்மனைவருக்கும் எச்சரிக்கை அனுப்பியுள்ளான்... என் இல்லத்தின் அழிவிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்... பெண்களின், குழந்தைகளின், முதியோர்களின் நலனையும், உயிரையும், மானத்தையும், உடைமைகளையும், வாழ்வையும் பாதுகாக்க என் இல்லத்தின் அழிவிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்... தோளுடன் தோள் சேர்த்து தயாராகுங்கள் என்கின்றான்..... இந்த மண்ணில் இன்னும் அழிவுகள் தொடரப்படவிருக்கின்றன ... இப்பொழுதிலிருந்தே ...இந்த மஸ்ஜிதின் அழிவிலிருந்தே பாடம் படிக்க ஆரம்பியுங்கள் என்கின்றான்....

அல்லாஹ், தன் இல்லத்தில் அழிவின் மூலம், தொழுகையில்லாமல் முஸ்லிமாய் வாழ்பவர்களுக்கு தொழுகையைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளான்... இந்தக் கூட்டத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கானோரில் குறைந்தது இருவராவது தொழுகையை சரியாக நிலை நாட்டாதவராக இருப்பீர்கள்... அப்படி எவரேனும் இருந்து அவர் மீண்டும் தொழுகையின் பக்கம் திரும்புவரானால்....என் ஈமானைக் கொண்டு கூறுகிறேன்... இப்படிப்பட்ட்டவர்கள் நிறைய நிறைய, மஜ்லிசும் நிறையும்... மஸ்ஜிதும் எழுப்பப்பட்டு விடும்.... எவரின் சகோதரியோ, தாயோ இனி தீயிலிடப்பட மாட்டார்கள்... தொழுகையை விட்டு விடாதீர்கள்.... தொழுகையை விடாமல் கடைப்பிடியுங்கள்.... அல்லாஹ்வின் இல்லங்களை இறையருள் பூத்துக்குலுங்கும் இடங்களாக மாற்றுங்கள்... தொழுகையின் வரிசைகளில் ஒற்றுமையை உருவாக்குங்கள்.... மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்... கற்ற மார்க்கத்தினைக் கொண்டு உங்களின் வியாபாரங்களிலும், வாழ்விலும், இருள்களை அகற்றி, புதிய விடியல்களையும், புதிய வெளிச்சங்களையும் கொண்டு வாருங்கள்... உலகின் கல்வியோடு, மார்க்கக் கல்வியையும் பூரணமாக்குங்கள்... உங்களில் ஒரு சகோதரர் கவலையுடன் இருந்தால், அவரின் கவலையை அகற்றிட முன்வாருங்கள்... அந்தக் கவலையை உங்களால் அகற்ற முடியாமல் போனாலும், குறைந்தது அவருக்காக இரு கையேந்தி து’ஆ செய்திட முன்வாருங்கள்... ஏனெனில் இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் நபிமொழிகளில் உள்ளது..... எந்த ஒரு முஸ்லிமின் மனதில், இன்னொரு முஸ்லிமின் கவலையின் தாக்கம் சிறிதும் இல்லையோ, அவர் முஹம்மதின் உம்மத்தைச் சேர்ந்தவரல்லர்... முஹம்மதின் உம்மத்தைச் சேர்ந்தவர்களாக நீங்கள் இருந்தால், விசாரணை என்னும் பெயரில், பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் கண்ணீரைத் துடைக்க இரு கையேந்தி இருள் விடியா நேரங்களில் து’ஆ செய்யுங்கள்... அவர்களின் வலியை உணருங்கள்... அஸ்ஸாமின் முஸ்லிம்களுக்காக கண்ணீருடன் து’ஆ செய்யுங்கள்.... முஜாஃபர் நகரின் கேம்பில் வாழ்வை நகர்த்தும் முஸ்லிம்களுக்காக து’ஆ செய்யுங்கள்...

இன்றைய சமூகத்தை உணருங்கள்.... சமூகம் இருக்கும் நிலையை உணருங்கள்.... ஆயிரமாயிரம் மக்களை வெட்டிச் சாய்த்தவனும், ஆயிரமாயிரம் மக்களை வீடில்லாமல், குடும்பமில்லாமல் அகதிகளாக்கியவனும், தேசத்தின் மானத்தையும், மதிப்பையும், இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைத்தவனெல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரியும் காலம் இது. மண் இது. இதையெல்லாம் கண்டு அஞ்சி ஓடுபவர்கள் முஸ்லிம்கள் அல்ல. இன்று இந்த நிலைக்கு நம் சமூகம் தள்ளப்பட்டது ஏன் என்பதைப் படியுங்கள்.... தொழுகைகளின் வரிசைகளில் ஒற்றுமையில்லை.... மஸ்ஜித்களில் ஒற்றுமையில்லை... பெருநாள் கொண்டாட்டங்களில் ஒற்றுமையில்லை.... ஒவ்வொரு ஊரிலும் ஓர் அமீர் இருக்கிறார்கள்.... சில ஊர்களில் தெருவுக்கு ஓர் அமீர் இருக்கிறார்கள்.... எப்பொழுது ஒற்றுமையை

நிலை நாட்டப்போகிறோம்?? அல்லாஹ் ஒருவனே.... இந்த உம்மத்தின் தூதர் ஒருவரே..... நமக்கென அல்லாஹ் அனுப்பிய வேதம் ஒன்றே அப்படி என்றால், இச்சமூகத்தின் அமீரும் ஒரே ஒருவர்தான் இருக்க முடியும், அதற்கு முன், சமூகம் என்பது ஒரே ஜமா’அத்தாக இருக்க வேண்டும்...

என் சகோதரர்களே.... பாப்ரி மஸ்ஜிதையும் தாண்டிய இன்னும் பலப்பல திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.... முஸ்லிம் சமூகத்தின் வேர்களிலிருந்தே வீழ்த்திடும் அத்தனை திட்டங்களிலும் காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.... ஹைதராபாத்தை யூனியன் டெர்ரிடரி ஆக்க முயற்சிகள் நடக்கின்றன.... நம் குரல்கள் சிதைக்கப்படுகின்றன.... மொழிகளில் கூட பாரபட்சம் காட்டப்படும் காலம் இது... தமிழுக்கோ, ஹிந்திக்கோ, தெலுகுக்கோ உள்ள முக்கியத்துவமோ, அங்கீகாரமோ, இன்று வரை உர்தூவிற்கு கிடைக்கவில்லை..... சுதந்திரப் போராட்டத்தின் வேராக இருந்ததோர் மொழி!!!

அதனை தற்போது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவச்செல்வங்களைக் கூட அங்கீகரிக்க மறுக்கின்றீர்கள்... உர்தூவையும், முஸ்லிம்களையும், முஸ்லிம்களின் அடையாளங்களையும் ஒவ்வோர் ஊர்களிலுமிருந்து அகற்றிக்கொண்டுள்ளீர்கள்.... ஆனால் ஹைதராபாத்தில் இது நடக்காது.... அப்படி ஒன்று நடந்தால், எதிர்க்க, புரட்சி செய்யவும் தயாராகுங்கள் சகோதரர்களே.... நம் மண், நம் தேசம், நம் அடையாளம், நம் பாரம்பர்யம், நம் சமூகம் என எல்லாவற்றையும் பாதுகாக்கும் பொறுப்பு, அதற்கென ஜிஹாத் செய்யும் கடமை நம் மீது உள்ளது.

அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாகும் ஆசையும் கனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திலிருந்து அதன் பேரன், அதன் பேரன், அதன் பேரன் என இறுதி முஸ்லிம் வரைக்கும் அடங்காதது. அல்லாஹ் நம் மண்ணை, நம் தேசத்தை, நம் சமூகத்தை, நம் சகோதர சகோதரிகளின் வாழ்வை, உயிரை, உடைமைகளை, பாதுகாக்கும் துணிவையும், அதன் வழி ஷஹாதத்தையும் நமக்குத் தந்தருள்வானாக.

யா அல்லாஹ் எங்களின் சமூகத்தை அநியாயக்காரர்களிடமிருந்தும், அநீதியான ஆட்சியாளர்களிடமிருந்தும் காத்தருள்வாயாக.

யா மாலிக் எங்களை காத்தருள்வாயாக.... எங்களின் மீது அநியாயக்காரர்களின் கை ஓங்கி விடச் செய்திடாதே....

எங்களின் பாவங்களின் காரணத்தால், தவறுகளின் காரணத்தால் எங்களின் மீது அநியாயத்தின் கையை ஓங்கி விடச் செய்து விடாதே....

யா அல்லாஹ்.... எங்களின் பாப்ரி மஸ்ஜித்தை மீண்டும் அதே இடத்தில் எழும்பச் செய்வாயாக.

யா அல்லாஹ் எங்களின் எல்லா மஸ்ஜித்களையும் காத்தருள்வாயாக. பாதுகாப்பாயாக.

யா அல்லாஹ் எங்களின் எண்ணங்களில், செயல்களில், அமல்களில் உன் பொருத்தத்தை அளிப்பாயாக. ஆமீன். ஆமீன். யா ரப்பல் ஆலமீன்.

-உவைசியின் பேச்சை அழகிய முறையில் மொழி பெயர்த்து தந்த சகோதரி உம்மு உமருக்கு நன்றிகள்.

5 comments:

Syed said...

அழகிய பேச்சு!... ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து ஆக்ரோஷமாக உணர்ச்சிப்பூர்வமாக பேசிய முத்தான வார்த்தைகளில் சில!

"உலக வாழ்க்கையுடன் சேர்ந்து மார்கத்தையும் உறுதியாக பற்றி பிடித்து கொள்ளுங்கள்! ஒரு முஸ்லிம் கவலையுடன் இருப்பதை நீங்கள் கண்டால், அவரது கவலையை நீக்க முற்படுங்கள்! உங்களால் அவரது கவலையை போக்க இயல வில்லை என்றால், குறைந்த பட்சம் அவருக்காக கையேந்தி துஆ கேளுங்கள்!

அக்கிரம்க்காரக்ளின் சூழ்சிகளினால் குஜராத் போன்ற மாநிலங்களில் கூடாரங்களில் வசிக்கும் எமதருமை முஸ்லிம் சகோதரர்களே!நீங்கள் எங்கள் ஹைதராபாத்திற்கு வருகை தாருங்கள்! நாங்கள் உங்களை விருந்தினர் போல வரவேற்று உபசரிக்க தயாராக இருக்கிறோம்!"

மாஷா அல்லாஹ்!

Syed said...

அழகிய பேச்சு!... ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து ஆக்ரோஷமாக உணர்ச்சிப்பூர்வமாக பேசிய முத்தான வார்த்தைகளில் சில!

"உலக வாழ்க்கையுடன் சேர்ந்து மார்கத்தையும் உறுதியாக பற்றி பிடித்து கொள்ளுங்கள்! ஒரு முஸ்லிம் கவலையுடன் இருப்பதை நீங்கள் கண்டால், அவரது கவலையை நீக்க முற்படுங்கள்! உங்களால் அவரது கவலையை போக்க இயல வில்லை என்றால், குறைந்த பட்சம் அவருக்காக கையேந்தி துஆ கேளுங்கள்!

அக்கிரம்க்காரக்ளின் சூழ்சிகளினால் குஜராத் போன்ற மாநிலங்களில் கூடாரங்களில் வசிக்கும் எமதருமை முஸ்லிம் சகோதரர்களே!நீங்கள் எங்கள் ஹைதராபாத்திற்கு வருகை தாருங்கள்! நாங்கள் உங்களை விருந்தினர் போல வரவேற்று உபசரிக்க தயாராக இருக்கிறோம்!"

மாஷா அல்லாஹ்!

Syed said...

அழகிய பேச்சு!... ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து ஆக்ரோஷமாக உணர்ச்சிப்பூர்வமாக பேசிய முத்தான வார்த்தைகளில் சில!

"உலக வாழ்க்கையுடன் சேர்ந்து மார்கத்தையும் உறுதியாக பற்றி பிடித்து கொள்ளுங்கள்! ஒரு முஸ்லிம் கவலையுடன் இருப்பதை நீங்கள் கண்டால், அவரது கவலையை நீக்க முற்படுங்கள்! உங்களால் அவரது கவலையை போக்க இயல வில்லை என்றால், குறைந்த பட்சம் அவருக்காக கையேந்தி துஆ கேளுங்கள்!

அக்கிரம்க்காரக்ளின் சூழ்சிகளினால் குஜராத் போன்ற மாநிலங்களில் கூடாரங்களில் வசிக்கும் எமதருமை முஸ்லிம் சகோதரர்களே!நீங்கள் எங்கள் ஹைதராபாத்திற்கு வருகை தாருங்கள்! நாங்கள் உங்களை விருந்தினர் போல வரவேற்று உபசரிக்க தயாராக இருக்கிறோம்!"

மாஷா அல்லாஹ்!

Anonymous said...

also write about demolitions of other religious temples of islamic nations like pak and afgan by islam peoples.and dutch/french demolitions of hindhu/budha temples in and around india.then only you are a secular. other wise you are not eligible to be a secular. you have right to fight for you religious place. as same as for all.this is a fact .
--by sai

Dr.Anburaj said...

அரேபிய அடிமை மன்னா்களின் ஆட்சியில் ஏராளமாக இந்து ஆலயங்கள் நொறுக்கப்பட்டன. முகம்மது காபாவில் உள்ள பல சிலைகளை உடைத்ததுபோல் அரேபிய அடிமை மன்னா்கள் இந்தியாவில் உடைத்தாா்கள். இதற்கு பாவபாிகாரமாக அயோ்த்தி மதுரா காசி இன்னும் சில இடங்களில் உள்ள அரேபிய கலாச்சார வழிபாட்டு இடங்களை இந்துக்களக்கு அளிக்க வேண்டும்.இதனால் முஸ்லீம்களுக்கு நட்டம் ஏதும் யில்லை. வீண் விசும்பு தான் காரணம். சில இடங்களை மட்.டும் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குடிமுழுகிவிடாது. முஸ்லீம்கள் சற்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.பாக்கிஸ்தானில் உள்ள அனைத்து இந்து கோவில்களம் நாசமாகி விட்டது.