Followers

Monday, December 02, 2013

பிறந்த குழந்தை வாயில் புகையிலை - பெண் சிசுக் கொலை!



மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது தற்போது. பெண் குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு தெரிவிக்காமலேயே குடும்பத்தவரே கழுத்தை நெறித்து கொல்வது, சாக்கு துணியால் முகத்தை மூடி கொல்வது, புகையிலையை பிறந்த குழந்தையின் வாயில் திணிப்பது (நமது ஊர் சேலத்தில், உசிலம்பட்டியில் அரிசியை திணிப்பது, கள்ளிப்பால் ஊற்றுவது) என்று பல வழிகளை கையாள்கின்றனர்.

பெண் குழந்தை பிறந்தால் அதை வளர்ப்பது, அதை படிக்க வைப்பது, அடுத்து அந்த பெண்ணை பல லட்சம் வரதட்சணை கொடுத்து திருமணம் முடித்து கொடுக்க வேண்டும். அந்த பெண்ணும் மருமகளாக வேறொரு குடும்பத்துக்கு சென்று விடுவாள். இதனால் எங்களுக்கு என்ன லாபம் என்று நான்கு பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு ஆண் தைரியமாக கேமராவுக்கு முன்னால் சொல்வதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

'எனது மூத்த மகளை ஒரு லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்து மேலும் பல பாத்திரங்களை சீதனமாக கொடுத்து அனுப்பி வைத்துள்ளேன். இன்னும் மூன்று பெண்கள் திருமணத்துக்கு தயாராக உள்ளனர். இப்படி திருமணத்துக்காக எங்களின் வயல் வெளிகளை விற்று விட்டால் பிறகு எங்களுக்கு வாழ்வு தருவது யார்? எனவே தான் இத்தனை பிரச்னைகளை சமாளிப்பதற்கு பதில் பிறந்தவுடனேயே சிலர் கொன்று விடுகின்றனர்' என்று சர்வ சாதாரணமாக பேட்டி கொடுப்பதை பார்க்கிறோம்.

மற்றொருவர் தனது கருத்தாக கூறும்போது 'மாதத்தில் 10 அல்லது இருபது தற்கொலைகள் பல இடங்களில் நடப்பதை பத்திரிக்கைகளில் பார்க்கலாம். திருமணம் ஆகாத விரக்தியிலும், வறுமையினாலும் பல பெண்கள் சர்வ சாதாரணமாக தற்கொலைகளை நாடுகின்றனர். இது இங்கு பழகி விட்டது.சில குடும்பங்களில் மருமகளை கொன்று விட்டு, வெறொரு பெண்ணை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில் இங்கும் அவர்களுக்கு வரதட்சணை என்ற பெயரில் பல லட்சங்கள் கிடைக்கிறதல்லவா!" என்கிறார்.

ஒரு வயதான மூதாட்டியிடம் பேட்டி எடுப்பவர் கேட்கிறார் 'அம்மா! படித்த பெண்கள் எந்த அளவு சமூகத்துக்கு உறுதுணையாக உள்ளனர். உங்கள் கிராமத்திலேயே இதோ ஒரு படித்த பெண் வேலைக்கு செல்கிறார்?'

அந்த பாட்டி சொல்கிறது 'என்னதான் நடந்தாலும் நாங்கள் எங்கள் பெண் பிள்ளைகளை படிக்க அனுப்ப மாட்டோம். எங்கள் மரியாதை அதனால் போய் விடும்' என்கிறார்.

ஆங்கிலமும் ஹிந்தியும் தெரிந்தவர்கள் இந்த காணொளியை இன்னும் தெளிவாக பார்த்து நமது நாட்டின் நிலைமையை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

வரதட்சணை கொடுமை தமிழக முஸ்லிம்களிடத்திலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோரதாண்டமாடியது. தவ்ஹீத் சிந்தனை இளைஞர்களுக்கு வர ஆரம்பித்தவுடன் முன்பு வாங்கிய வரதட்சணையை பெண்ணின் தகப்பனிடம் திருப்பி கொடுத்த நிகழ்ச்சி பல கிராமங்களில் நிகழ்ந்துள்ளது. இன்று வரதட்சணை வாங்குவதையே கேவலமாக இளைஞர்கள் நினைக்கின்றனர். ஆனால் இங்கும் பெண்ணுக்கு பெண் எதிரி என்பது போல் மாப்பிள்ளையின் தாயாரும் சகோதரிகளும் இவனுக்கு தெரியாமல் வேறு வகைகளில் வரதட்சணையை வாங்குவதை ஆங்காங்கு இன்றும் பார்க்கிறோம். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். பெண்ணுக்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் மஹர் கொடுத்து திருமணம் முடிப்பதுதான் நபியவர்களின் வழிமுறை. அதை பேணாது ஐந்து வேளை தொழுது ஹஜ்ஜூம் செய்து விட்டால் நேரே சொர்க்கத்துக்கு சென்று விடலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம் என்று வரதட்சணை வாங்கும் இஸ்லாமியர்களை எச்சரிக்கிறோம்.

டிஸ்கி: சமீபத்தில் காஷ்மீருக்கு சென்ற நரேந்திர மோடி அங்குள்ள பெண்கள் கொடுமைபடுத்தப்படுவதாக நீலிக் கணணீர் வடித்துள்ளார். இஸ்லாமிய பெண்கள் வறுமைக்கு பயந்து பெண் மக்களை கொல்வதில்லை. எனவே அங்கு காட்டும் பரிவை தனது மக்களின் பக்கம் மோடி திருப்பினால் தினம் செத்து மடியும் இளம் பிஞ்சுகள் உலகை பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். மத்திய பிரதேசம், குஜராத், உபி, ஹரியானா, பீகார் போன்ற மாநிலங்களிலேயே இந்த கொடுமைகள் அதிகம் நிகழ்கின்றன.

“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, அதைத் தீயதாகக் கருதி அந்தக் கெடுதிக்காகத் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா? என்று குழம்புகிறான்; அவர்கள் இவ்வாறெல்லாம் தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?”

குர்ஆன் 16:58-59

"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை வினவப்படும் போது"

குர்ஆன் 81:8-9

அன்றைய மெக்கா சிலை வணங்கிகள் தங்கள் பெண் குழந்தைகளை கொல்வதை இந்த குர்ஆன் வசனம் எடுத்துக் காட்டுகிறது. அன்றைய நிலை இன்று நமது நாட்டில் அரங்கேறுவது நமக்கு கேவலம் அல்லவா?

2 comments:

Anonymous said...

இந்த ஒரு விசயத்தில் மட்டும் ஹிந்து முஸ்லீம் என்ற பாகுபாடு இல்லை.
இந்தியாவில் பிறந்த பெண்குழந்தைகளை
கொலை செய்கிறார்கள்.
தங்களது புண்ணிய புமியாகிய பாகிஸ்தானில் பெண்குழந்தைகளை பெற்றெடுத்த பெண் தாய்மார்களைக் கொலை செய்துவிடுகிறார்கள்.

suvanappiriyan said...



"ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்'' என்று இறைவனின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 2320

ஒரு ஆன்மீகவாதி கண்டிப்பாக இயற்கையை அழித்து அதில் தனது வளத்தை பெருக்க முயற்சிக்க மாட்டார். அரசு தக்க நடவடிக்கை எடுத்து அழியும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.