Followers

Saturday, December 14, 2013

பாரதியின் ஆரியப் பற்றும் சாதி வெறியும்!



தமிழ் மொழியின் கவிதைகள் என்று வந்தால் அங்கு பாரதிக்கு தனி இடமே உண்டு. எளியவரும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வண்ணம் பாரதியின் ஆக்கங்கள் இருக்கும். வார்த்தைகள் இவரிடம் துள்ளி விளையாடும். ஆனால் இவ்வளவு அழகிய கவிதை ஆற்றல் உள்ளவரிடம் ஆங்காங்கே ஆரியர் மேலானவர் மற்றவர் கீழானவர் என்ற பார்பன பொது புத்தியும் ஆங்காங்கே தலை காட்டத் தயங்குவதில்லை. இனி ஒரு சில கவிதைகளை பார்ப்போம்.

மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநில மீதது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே 1


மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை நாடே 2

இவ்வளவு அழகாக தாய் நாட்டின் பெருமைகளை சொல்லி வரும்போது கூடவே ஆரிய மேலாண்மையும் தலைகாட்டுகிறது. அதையும் பார்ப்போம்.


இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும்இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்?-எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்

சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஓங்கிவிட் டால்-துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்

ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே”

“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்”.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும்.நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற வர்ணாஸ்ரம தர்மத்தை தூக்கிப் பிடித்த பாரதி பாடுகிறார்

நாலு குலங்கள் அமைத்தான் – அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி

இவ்வவளவு நச்சுக் கருத்துக்களையும் சொல்லி விட்டு சாதிகள் இல்லை என்று உடனே பிளேட்டை மாற்றிப் போடுகிறார் பாரதி!

சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண்டே இவன் சைவன்-இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க

'சூத்திரனுக்கோர் நீதி தெண்டச் சோறுண்ணும்

பார்ப்புக்கு ஒரு நீதி என்று

சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமல்ல'

என்று தனது இனத்தை தட்டிக் கேட்கவும் தயங்கவில்லை.

இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும் கஞ்சாவை உள்ளே அடிக்கடி தள்ளிக் கொள்வார் என்றும் படித்திருக்கிறேன். போதை தலைக்கேறாத போது ஒரு பாரதியாகவும், போதை தலைக்கேறியவுடன் ஆரியப் பித்து பிடித்து அலைந்த ஒரு கவியாகவும்தான் நான் பாரதியை பார்க்கிறேன்.

இதிலிருந்து கவிஞர்களின் கருத்துக்களையும், கவி புனையும் திறன்களையும் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தெளிவாகிறது. எனவே தான் வைரமுத்து கூட 'கவிதைக்கு பொய்யழகு' என்று பாடினாரோ!

16 comments:

Unknown said...

ரொம்ப சரி சுவனம். ஆரிய இனம் சூழ்ச்சி மிக்கது

Anonymous said...

கெஜ்ரிவாலின் வெற்றி மோடியின் பிரதமர் கனவை ஓரளவு களைத்து விட்டதாகவே கொள்ளலாம். மத்திய பிரதேசத்தில் பெற்ற வெற்றியானது சௌகானின் திறமை மிக்க ஆட்சியாலேயே! ராஜஸ்தானை பொருத்த வரை ஐந்து வருடம் ஒரு முறை ஆட்சியை மாற்றியே முடிவை தருவது அந்த மக்களின் வழக்கம். எனவே இந்த இரண்டு மாநில வெற்றிகள் மோடியினால் வரவில்லை என்பதை மோடியே ஒத்துக் கொள்வார்.

அடுத்து கெஜ்ரிவால் களம் இறங்கப் போவது குஜராத்தில். மோடியின் முதல்வர் நாற்காலியையே ஆட்டிப் பார்க்க கெஜ்ரிவால் துணிந்து விட்டது அவரது அசாத்திய துணிச்சலையே காட்டுகிறது. கெஜ்ரிவாலின் குஜராத் வெற்றியையும் ஆவலோடு எதிர் பார்ப்போம். நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெறுவதையே விரும்புவர்.

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//ரொம்ப சரி சுவனம். ஆரிய இனம் சூழ்ச்சி மிக்கது//

சரியாக சொன்னீர்கள்! சூழ்ச்சிகள் செய்வதில் ஆரியர்கள் தங்களின் மூதாதையர்களான யூதர்களையே மிஞ்சி விட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

suvanappiriyan said...

க்ருஷ்ணகுமார், சேவற்கொடியோன், ஆர். எஸ். ஐயர் போன்றோர்களின் அதீத சாதிப் பற்றுதான் இஸ்லாம் தமிழகத்தில் மிக வேகமாக வளர உறுதுணையாய் இருக்கிறது. நாங்கள் பிரசாரம் பண்ணாமலேயே தினம் பத்து பேர் அவர்களாகவே சென்னையிலும், மற்றும் தமிழக மாவட்டந்தோறும் உள்ள தவ்ஹீத் ஜமாத் அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். அதற்கு காரணம் மேலே சொன்ன நபர்களின் சாதிப் பற்றும், இனப்பற்றும் என்றால் மிகையாகாது.

அநீ! நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தானோ! :-)

Anonymous said...

//
=>மசூதி இருந்த இடத்தில் மசூதிதான் என்றெல்லாம் எல்லோரும் வார்த்தைகளால் பசப்பிக் கொண்டிருந்தபோது... ஒரே ஒருவர்தான், “குற்றச் செயலின் பலன்களாக (fruites of the crime) அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் கொட்டகையையும் சிலைகளையும் முதலில் உடைத்து எறியுங்கள்” என்று கூறும் துணிச்சலைப் பெற்றிருந்தார். அவர்தான் ஜோதி பாசு.

=>இவர் ஒன்றும் நாத்திகரோ கம்யூனிஸ்டோ அல்ல. இந்து மதத்தைப் பின்பற்றுபவர். இராமனை வணங்குபவர். “ஏகப்பட்ட பொய், ஏமாற்று, அப்பட்டமான வன்முறை ஆகியவற்றின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இதற்குள் கடவுள் இருக்க மாட்டார்” என்று கூறி உள்ளே செல்லாமல் அந்த இடத்தை விட்டகன்றார் டாக்டர் மாதவ் கோட்போல் IAS

=>நல்லவேளை, செப் 30, 2010க்கு முன்னேயே பால்கிவாலா இறந்து போனார், இல்லாவிட்டால் அலகாபாத் தீர்ப்பைக் கேட்டு மாரடைத்துச்செத்திருப்பார்.

ஒவ்வொரு டிசம்பர் 6 லும் பாபர் மசூதியை நினைக்கும்போது இந்த மூவர், ஜோதி பாசு, மாதவ் கோட்போல், பால்கிவாலா என் நினைவில் தோன்ற மறப்பதில்லை.
//
நன்றி சகோ. அ.மார்க்ஸ்.

Dr.Anburaj said...

வீர சிவாஜியின் உரை படித்து உங்களுக்கு பாரதியாா் மேல் கடுப்பு.அதான் இந்த நயவஞசகமான கட்டுரை. பாரதியைக்குறித்து இப்படிஎழுதிய முதல் நபா் தாங்களே.குரான் படித்தால் இப்படித்தான் சிந்தனை வரும் என்ன

ஆனந்த் சாகர் said...

//Dr. அன்புராஜ் :
//வீர சிவாஜியின் உரை படித்து உங்களுக்கு பாரதியாா் மேல் கடுப்பு.அதான் இந்த நயவஞசகமான கட்டுரை. பாரதியைக்குறித்து இப்படிஎழுதிய முதல் நபா் தாங்களே.குரான் படித்தால் இப்படித்தான் சிந்தனை வரும் என்ன//

சரியாக சொன்னீர்கள், Dr.அன்புராஜ்.

ஆனந்த் சாகர் said...

ஜெய் சங்கர் ஜெகநாதன்,

//ஆரிய இனம் சூழ்ச்சி மிக்கது//

ஜெய் சங்கர் ஜெகநாதன்,

ஆரிய இனம் என்ற ஒரு இனம் இல்லை. ஆர்ய என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ''கண்ணியமான'' (Noble / Dignified) என்பதே பொருள். இந்த பொருளில்தான் ஆர்ய என்ற வார்த்தை வேதங்களிலும், இதிகாசங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது இனத்தை குறிக்கிற பொருளில் குறிப்பிடப்படவில்லை. ஆரிய இனம், திராவிட இனம் என்ற கோட்பாடு 19 ஆம் மேற்கத்தியர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. அது உண்மை இல்லை.

சூழ்ச்சி செய்வது என்று வரும்போது, சூழ்ச்சி செய்பவர்கள் எல்லா சமூக மக்கள் மத்தியிலும் இருக்கிறார்கள். பார்ப்பனர்கள் தங்களை மேலானவர்கள் என்று நினைத்துக்கொள்வதால், அவர்கள் மற்ற ஜாதியினர் முன்னேறுவதை பிடிக்காமல் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபடுகிறார்கள். அதனால் தான் பார்ப்பனீயம் ஆபத்தானது, ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. இதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

suvanappiriyan said...

அன்புராஜ்!

//பாரதியைக்குறித்து இப்படிஎழுதிய முதல் நபா் தாங்களே//

இந்துத்வா தளங்களுக்கு மட்டுமே செல்லாமல் பொதுத் தளங்களுக்கும் நீங்கள் சென்றிருந்தால் இந்த கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள். பாரதியின் சாதிப் பற்றை எனக்கு முன்னால் பலரும் இணையத்தில் எழுதியுள்ளார்கள்.

அதற்கு ஆதாரமாக அவரது கவிதைகளையே கொடுத்தும் அதனை மறுப்பதிலிருந்து உங்களின் ஆரியப் பற்றும் நன்றாகவே விளங்குகிறது. :-)

suvanappiriyan said...

ஆனந்த் சாகர்!

//ஆரிய இனம் என்ற ஒரு இனம் இல்லை. ஆர்ய என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ''கண்ணியமான'' (Noble / Dignified) என்பதே பொருள். இந்த பொருளில்தான் ஆர்ய என்ற வார்த்தை வேதங்களிலும், இதிகாசங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. //

ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த திராவிடர்களுடன் போரிட வேண்டிய நிர்பந்தத்தால் போரிட்டு திராவிடர்களை அடிமையாக்கினர்.

தங்களுடன் போர் தொடுத்த திராவிடர்களை திட்டி , கேவலபடுத்தி , பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் .-ரோமேஷ் மஜும்தார் (பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆம் பக்கம்

-----------------------

ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன .-Dr. ராதாகுமுத முகர்ஜி Phd (இந்து நாகரீகம் பக்கம் 69)

----------------------

வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6

--------------------

நான் மேலே கொடுத்த ஆதாரங்கள் இந்துக்களாலேயே தரப்பட்டுள்ளது. இதற்கு மேல் நீங்கள் தான் விளக்கம் தர வேண்டும்.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த திராவிடர்களுடன் போரிட வேண்டிய நிர்பந்தத்தால் போரிட்டு திராவிடர்களை அடிமையாக்கினர்.//

ஆடு,மாடு மேய்த்துக்கொண்டு மத்திய ஆசிய பகுதியிலிருந்து நாடோடிகளாக வந்தவர்கள் நாகரிகம் அடைந்து நகரங்களில் வாழ்ந்த பூர்வீக மக்களை(திராவிடர்கள் என்பது தவறு) போரில் தோற்கடித்தார்கள் என்பது அறிவுபூர்வமாக ஏற்புடைய வாதம் அல்ல. நகரங்களில் வாழ்ந்தவர்கள்தான் சிறந்த ஆயுதங்களை தயார் செய்து வைத்திருப்பர். அவர்களால்தான் ஆயுதம் தரிக்காத நாடோடிகளை தங்களுடைய ஆயுதங்களை கொண்டு எளிதில் போரில் வெற்றி கொள்ள முடியும். இதுதான் அறிவுக்கு ஏற்புடையது. இதற்கு முரணாக, ஆரிய படையெடுப்பு கொள்கை நாகரிக நகர்வாழ் மக்கள் நாடோடிகளால் தோற்கடிக்கப்பட்டு தங்கள் பூர்வீக பிரதேசங்களை(வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியா) விட்டு வெகு தூர பிரதேசத்துக்கு(தென் இந்தியா) விரட்டப்பட்டனர் என்று கூறுகிறது. இது அறிவுக்கு புறம்பான அப்பட்டமான கற்பனை என்பது தெள்ளத்தெளிவு ஆகிறது.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//தங்களுடன் போர் தொடுத்த திராவிடர்களை திட்டி , கேவலபடுத்தி , பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் .-ரோமேஷ் மஜும்தார் (பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆம் பக்கம்

-----------------------

ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன .-Dr. ராதாகுமுத முகர்ஜி Phd (இந்து நாகரீகம் பக்கம் 69)

----------------------//

மேற்கத்தியர்கள் எழுதிய ஆரிய படையெடுப்பு கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டவர்களும் கம்யூனிச சார்பு உள்ளவர்களும் எழுதிய நூல்கள் நிறைய இருக்கின்றன. அதில் ஒன்றிரண்டை நீங்கள் மேற்கோள் காட்டியுள்ளீர்கள். அவ்வளவுதான்.

C.Sugumar said...

இந்துக்களில் முட்டாள்களுக்கு அதுவும் படித்து பட்டம் பெற்று அடிப்படை அறிவு இன்றி தங்களின் சுயநலத்திற்கு உடனடி லாபத்திற்கான கட்டுரை எழுதுபவர்களுக்கு என்னப் பஞ்சம். உலகில் பல நாகரீகங்கள் தோன்றி வளா்ந்துள்ளது. ஆாியா்கள் யாா் என்றுப் பிாித்து காட்டுங்களேன் என்று சுவாமி விவேகானந்தாின் கேள்வி இன்னும் யாராலும் விடை அளிக்கப்படாமல் உள்ளது. பிறாமணா்கள் என்றால் பல சாதி மக்களால் உருவானதுதான் பிறாமண வேளாள சாதி. வேதகாலத்தில் இந்தியாவில் சாதி கிடையாது. சாித்திர சமுக பொருளாதாரம் மற்றும் சமூக புகோளம் காரணமாக பலவித இனக்குழுக்குள் உருவானது. குரானிலும் உங்களை அடையாளாம் காண்பதற்கு பல கோத்திரங்களாகப் படைத்தோம் என்று சொல்லப்பட்டுள்ளதை சுவனப்பிாியன் மறந்து விடுகிறாா். பலசாதிகள் இணைந்து பதிய சாதிகள் உருவாகிக்கொண்டேயிருக்கின்றது. இந்தியாவின் வரலாறு தொியாத மடையா்கள்தான் ஆாிய திராவிடா்கள்என்று பிதற்றித் திாிகின்றனா். இந்துக்களை காபீா் என்று இழிவு செய்யும் அரேபியவல்லாதிக்க சிந்தனை கொண்டவரான அரேபிய வல்லாதிக்க ஆவணமான குரானை இறைவனின் வேதம் என்று பொய் சொல்லி ஏமாற்றும் சுவனப்பிாியனுக்கு ஆாிய-திராவிட சா்ச்சையில் ஈடுபடும் யோக்கியதை இல்லை.

Dr.Anburaj said...

பாரதி அப்பளுக்கற்ற தேச பக்கதன். சமூக நல்லறிஞன். மக்களின் நண்பன். இந்து பண்பாட்டில் ஆழந்த நம்பிக்கை கொண்டவன். அச்சமூகம் தன்தை திருத்துி யமைக்க பாடுபட்டவன். வழி காட்டியவன். அவனதுதாக்கம் மிக அதிகம். பாரதிபோன்ற சீா்திருத்தவாதிகளின் தொண்டினால் அரேபிய சமயம்பணி பொலிவிழந்து போனது எனவே அரேபிய அடிமை சுவனப்புத்திரனுக்கு எாிச்சல். சுவனப்புத்திரரே உமக்கு அல்லா 72 கோாீஸ் பெண்களை வைப்பாட்டியாக அளிப்பாா் சொா்க்கத்தில். ஆம் முமீன்களாக வாழும் பெண்களக்கு எத்தனை கோர்ிஸ் ஆண்கள் கிடைப்பாா்கள் ?பதில் மஅளிப்பீரா?

C.Sugumar said...

கனகலிங்கம் என்பவருக்கு புணுரல் போட்டு மகிழ்ந்தவர் பாரதி.கனகலிங்கம் ஆரியரா ? எல்லா மக்களையும் வேறுபாடு இன்றி மதித்து நடந்தவர் பாரதி. தங்கள் மனதில் என்ன ”மலம் ” தான் உள்ளதோ! இவ்வளவு அசிங்கமான கட்டுரையை எழுதியுள்ளீர்கள்.

C.Sugumar said...

சொர்க்கத்தில் ஆண்களுக்கு 72 ஹோரீஸ் பெண்களை உடல் உறவுக்கு அளிப்பார் என்று முகம்மது குரானில் கூறுகின்றார். பாலியல் சுகம் சொர்க்க வாழ்க்கையில் முக்கியமானது என்ற குரான் வழிக் கருத்தில் பெண்களுக்கு எத்தனை ஹோரீஸ் ஆண்களை அல்லா சொர்க்கத்தில் கொடுப்பார் ? இந்த கேள்வியை அலிசேனா என்ற ஈரான் முன்னாள் முஸ்லீம் கேட்கிறார்.நானும் கேட்டுள்ளேன் ? இன்றுவரை பதில் வரவில்லையே ஏன் ? அலிசேனா சொல்கிறார் -