Followers

Monday, December 09, 2013

ஆரியர் செய்த அக்கிரமம் - அறிஞர் அண்ணா!

டாக்டர் அத்பேத்காரும் மற்றும் இன்று தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப்படும் ஏனையோரும் இந்தியப் பூர்வ குடிகளின் சந்ததிகளே. ஆதிகாலத்தில், அந்தப் பூர்வ குடி மக்களே நாட்டுக்கு, அதிபதிகளாக சுதந்திர வாழ்வு நடத்தி வந்தார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த இந்தியப் பூர்வகுடி மக்கள் பிற்காலத்து வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு கூட்டத்தாருக்கு அடிமைப்பட்டு சுதந்திரத்தையும், மானத்தையும் இழந்து மிருகங்கள் அனுபவிக்கும் சாமானிய சுதந்திரங்களுமில்லாமல் உயிர்ப் பாரம் தாங்கும் படி நேர்ந்திருக்கிறது. இது போன்ற சம்பவத்தை உலக சரித்திரத்திலேயே காண முடியாது.

குடி புகுந்த ஆரியர்கள் பூர்வ குடிகளை விட பளபளப்பான வர்ண முடையவர்களா யிருந்தனர். எனவே, வெள்ளையர்களான ஆரியர்கள் கறுப்பர்களான அதி இந்தியர்களை விட உயர்ந்தவர்கள் என ஒரு ஐதீகம் ஏற்பட்டது. அன்று முதற் கொண்டே வர்ண பேதக் கொடுமை ஆரம்பமாயிற்று. வர்ண பேதக் கொடுமையினால் இந்தியாவைப் போல் கஷ்டப்படும் நாடு உலகத்திலேயே வேறு இல்லை என்று சொல்லலாம். ஆரியர்கள் ஆதி இந்தியர்களைச் சந்தித்தபோதே அவர்களுக்கு `கறுப்பர்கள்’ என்ற இழிபெயரைச் சூட்டினார். போர்க் கடவுளான இந்திரனை ஒரு ஆரிய வீரன் பாராட்டிப் புகழ்வதைக் காண்க.

ஆரியர் சட்டத்துக்குக் கீழ்ப்படியாதவர் களைத் தண்டித்து கறுப்பர்களை மனுவுக்கு அடிமைப்படுத்தி மற்றும் நூற்றுக்கணக்கான உதவிகள் புரிந்து இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றினான். (ரிக் வேதம் முதல் மண்டலம் 30-வது மந்திரம் 8-வது ஸ்லோகம்.)

ஆரியர் கொடுமை

ஆரியர்களுக்கும் ஆதி இந்தியர்களுக் கும் நடைபெற்ற போரைப் பற்றியும் ஆரியர் செய்த பற்பல கொடுமைகளைப் பற்றியும் வேதங்களில் பல குறிப்புகள் காணப்படுகின்றன. வெள்ளை ஆரியர்கள் கறுப்புப் பூர்வ குடிகளை எவ்வளவு குரூரமாக இம்சித்தார்கள் என்பதைக் கீழ்வரும் உதாரணங்களால் ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம்.

1

ஓ! உலகம் போற்றும் இந்திரனே! ஸுஷ்ரூ வனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றி யொன்பது படைகளையும் நீ உன் தேர் சக்கரத்துக்கு இரையாக்கி நசுக்கிக் கொன்று ஆரியர்களுக்கு உதவி புரிந்தாய்.

(ரிக் வேதம் மண்டலம் 1, மந்திரம் 53. ஸ்லோகம் 9)

2
ஓ! இந்திரனே! பிப்ரு மிருகய அசுர அரசர்களை ஆரிரிய மன்னனான விதாதின் பத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப் படுத்தினாய்! ஐம்பதினாயிரம் கறுப்புப் படைகளை செயித்தாய். முதுமை உயிரை மாய்ப்பது போல் அனேக கோட்டைகளையும் பாழாக்கினாய்.

(ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 16 ஸ்லோகம் 18)

3
ஆரிய அரசன் தாபிதியின் தன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திரச் சக்தியி னால், ஓ! இந்திரனே! யமனுலகுக்கு அனுப்பினாய்!

(ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 30 சுலோகம் 21)

4
``ஓ தீரனான இந்திரனே! உன் வலை பிரம்மாண்டமானது, மஹா பலாட்டியமானது, ஆயிரக்கணக்கானவர்களைச் சிக்க வைக்கும் ஆற்றலுடையது, ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாகப் பெருகும் சக்தியுடையது. அத்தகைய வலையில் தாசப் படையைச் சிக்க வைத்து நூற்றுக்கணக் கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கானவர் களைக் கொன்றாயே!

(அதர்வண வேதம் தாண்டம் 8 மந்திரம் 8 ஸ்லோகம் 7)

மேலே கூறிய உதாரணங்களால் ஆதி இந்தியர்கள் லட்சக்கணக்காகக் கொல்லப் பட்டதையும் சித்திரவதை செய்யப்பட்டதையும் ஊகித்து அறிந்து கொள்ளலாமல்லவா? எஞ்சிய ஆதி இந்தியர்கள், மீது ஆரியர்கள் கொண்டி ருந்த வெறுப்பும், வஞ்சகமும் அம்மா பெரிது! பெரிது!!
கீழ் வருவன ரிக் வேதம் 7-வது படலம் 104-வது மந்திரத்திலும் அதற்கான வேதம் கண்டம் 8, 4வது ஸ்லோகத்திலும் காணப்படுகின்றன.

ஸ்லோகம் 1

இந்திரனே ஸோமனே ராட்சகர்களை எரி, எரி! நசுக்கு, நசுக்கு! இடவனாந்திரங்களில் ஒன்று நூறாய் பெருகிவரும் அந்தக் கூட்டங்களை அடக்கு, அடக்கு! பின்னப்படுத்து, மடையர்களை அக்னி சுவாலையால் சுட்டுப் பொசுக்கு, வதை செய்! துண்டு துண்டாக வெட்டு!

ஸ்லோகம் 2

இந்திரனே, ஸோமனே, அரக்கக் கூட்டத்தை, துரோகிகளை, தீமையில் உருவான வர்களை, அக்னி குண்டத்தில் வைத்து, நீர் பானையில் வேகவைப்பது போல் அவித்துக் கொல்! துரோகிகளான அந்த பச்சை மண்ணைத் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி இம்சிப்பாயாக!

ஸ்லோகம் 3

குகைகளிலும் வனாந்திரங்களிலும் அந்த சண்டிகளை கீறி, பிளந்து அரித்து சித்திரவதைச் செய்! இருண்ட காடுகளில் மறைந்து கிடக்கும் அவர்களுக்கு ஒரு உதவியும் செய்யாதே! அந்த வனாந்திரங்களில் அவர்கள் மீளாமல் போவார்களாக. பயங்கர பலத்தால் அவர்களை அடக்கி ஒடுக்குவீர்களாக!

ஸ்லோகம் 4

ஓ இந்திரனே, ஓ ஸோமனே. மேல் மண்டலத்திலிருந்து கொடியவர்களை கீழே சொரிவீர்களாக! அதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆரியர் கிளம்புமாறு கருணை புரிவீர்களாக! தினமும் பெருகிவரும் இந்தக் கூட்டங்களை எதிர்ப்பதற்காகவே வானிலிருந்து லட்சக்கணக் கான அஸ்திரங்கள் தோன்றும்படியாக செய்வீர்களாக!

ஸ்லோகம் 11

அசூரர்கள் ஒழிக! பிள்ளை குட்டிகள் நசிக்க! பிற்கால சந்ததிகள் அசூரக் கூட்டங்களை விழுங்கி விடட்டும்.


-- அறிஞர் அண்ணா - ”திராவிட நாடு”, 29-11-1942

நமது பாரத நாடு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இறை வணக்கத்திலும், மனிதர்களை மதிக்கும் பண்பிலும், ஏற்றத் தாழ்வற்ற சிறந்த சமூகமாகவும், அறிவியல், கணிதம் போன்றவற்றில் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாகவுமே வாழ்ந்துள்ளனர். பின்னால் கைபர் போலன் கணவாய் வழியாக எகிப்து, ஈரான், ஐரோப்பாவின் சில பகுதிகளில் குடியிருந்த ஆரியர்கள் ஒன்றாகி நமது பாரத தேசத்தின் மீது படையெடுத்து நம்மை வென்றனர். அந்த போர்க் களக் காட்சிகளே ஆரியர்களின் வேத நூல்களில் காணப்படுகிறது. அன்றைய மக்கள் ஆரியர்களிடம் எந்த அளவு சித்தரவதைகளை அனுபவித்திருப்பர் என்பதை இந்த வேத வசனங்கள் மூலம் நம்மால் அறிய முடிகிறது. அன்று ஆரியர்களிடம் அடிமைப்பட்ட இநதிய பூர்வ குடிகள் இன்று வரை எழும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். ஆரியர்களின் கலாசாரத்திலிருந்து என்னையும் எனது சுற்றத்தார்களையும் விடுதலை செய்த எனது முன்னோர்களையும் அதற்கு காரணமான இஸ்லாத்தையும் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

18 comments:

Anonymous said...

இது தான் இஸ்லாம்.....!! பரமக்குடியில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தமுமுகவின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர்... தமுமுக நிர்வாகிகளை தொடர்புகொண்டு, ஒரு விபத்து நடந்து விட்டதாகவும், உங்களது ஆம்புலன்ஸை சம்பவ இடத்திற்கு செல்ல சொல்லுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் தமுமுகவின் ஆம்புலன்ஸ் அவ்வழியே மின்னல் வேகத்தில் சம்பவ இடத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. முன்பு நம் ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்த அதே காவல்துறை அதிகாரிகள் ஆச்சர்யத்தில் உறைந்த்தனர். கள்ளக்காதலில் செத்தவனுக்கு கூட பந்த் நடத்தி வாகனங்களை உடைத்து பொதுமக்களுக்கு இடையுறு ஏற்படுதிவிட்டு... மனம் உடைந்திருக்கிறது, அதனால் வாகனங்கள் உடைக்கப்பட்டிருக்கிறது என அறிக்கை விடும் காவி கயவர்களுக்கு மத்தியில்... எங்கள் மனம் ரணகளப்பட்டிருக்கும் வேளையிலும், இது என் பூமி, என் மக்கள் என்று மனிதநேயத்தோடு தொண்டாற்றும் முஸ்லிம் இளைஞர்களின் பனி மகத்தானது. இஸ்லாமியர்கள் சகிப்புதன்மையற்றவர்கள் என்ற பொய்யர்களின் புரட்டு வாதம் இப்படி ஒவ்வொருமுறையும் பொடிப் பொடியாக்கப்படுகிறது. தூற்றுவோர் தூற்றினாலும் உலகத்துக்கே தெரியும் இது தான் இஸ்லாம் என்று... அல்லாஹ்வே போதுமானவன்... Thanks to Mohamed Ali MSW

Anonymous said...

சுவனப்ப்ரியரின் உளறல்களுக்கு எல்லையே இல்லை போலும். அவர் நன்றாக தமாஷ் செய்து வருகிறார். அவருடைய கோமாளி தனத்துக்கு அண்ணாவை வேறு துணைக்கு அழைக்கிறார். அண்ணா எதையாவது சொன்னால் அதற்கு அப்பீலே கிடையாதா? அண்ணாவுக்கு அவரை சார்ந்தவர்கள் அறிஞர் பட்டம் கொடுத்துவிட்டால், அவர் சொல்வதை எல்லாம் அப்படியே அறிவுப்பூர்வமானது என்று அறிவுள்ளவர்கள் எடுத்துக்கொள்வார்களா?

ஆனந்த் சாகர் said...

சுவனப்ப்ரியரின் உளறல்களுக்கு எல்லையே இல்லை போலும். அவர் நன்றாக தமாஷ் செய்து வருகிறார். அவருடைய கோமாளி தனத்துக்கு அண்ணாவை வேறு துணைக்கு அழைக்கிறார். அண்ணா எதையாவது சொன்னால் அதற்கு அப்பீலே கிடையாதா? அண்ணாவுக்கு அவரை சார்ந்தவர்கள் அறிஞர் பட்டம் கொடுத்துவிட்டால், அவர் சொல்வதை எல்லாம் அப்படியே அறிவுப்பூர்வமானது என்று அறிவுள்ளவர்கள் எடுத்துக்கொள்வார்களா?

suvanappiriyan said...

ஆனந்த் சாகர்!

//சுவனப்ப்ரியரின் உளறல்களுக்கு எல்லையே இல்லை போலும். அவர் நன்றாக தமாஷ் செய்து வருகிறார். //

நான் உளறி தமாஷ் பண்ணுகிறேனா அல்லது அதைச் செய்வது நீங்களா என்பதை பதிவை படிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.


//அவருடைய கோமாளி தனத்துக்கு அண்ணாவை வேறு துணைக்கு அழைக்கிறார். அண்ணா எதையாவது சொன்னால் அதற்கு அப்பீலே கிடையாதா?//

அண்ணா சொன்னால் அதற்கு அப்பீல் உண்டு. ஆனால் உங்கள் வேதமான அதர்வண வேதம் சொன்னால் அதற்கு எங்கு சென்று அப்பீல் போடுவது? இதைத்தானே ஒவ்வொரு வீடுகளிலும், கோவில்களிலும் ஓதி வருகிறீர்கள்? அரக்கர்கள் என்றும் அசுரர்கள் என்றும் திராவிடர்களை இழிவு படுத்துவதை மறுக்க முடியுமா?

திராவிடனான ராவணனின் தங்கை சூர்ப்பனகை காதல் கொண்ட ஒரே காரணத்துக்காக அவளின் மூக்கை அறுத்த ஆர்ய ராமன் உங்களுக்கு கடவுள். அதை தட்டி கேட்ட ராவணன் உங்கள் பார்வையில் வில்லன்.

//அண்ணாவுக்கு அவரை சார்ந்தவர்கள் அறிஞர் பட்டம் கொடுத்துவிட்டால், அவர் சொல்வதை எல்லாம் அப்படியே அறிவுப்பூர்வமானது என்று அறிவுள்ளவர்கள் எடுத்துக்கொள்வார்களா?//

அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொண்டதால்தான் அவரை முதலமைச்சராக்கி அழகு பார்த்தார்கள். இன்று வரை அதே அண்ணாவின் பெயரைச் சொல்லித்தான் ஜெயலலிதாவும் ஆட்சி செய்கிறார்.

Unknown said...

சுவனபிரியரே,
ஆரியர்கள் எந்த மன்னரின் தலைமையில், எப்போது படையெடுத்து வந்து
இந்தியர்களை வென்றார்கள் என்ற சரித்திர விஷயத்தை சொன்னால் அது ஆராய்ச்சி
செயபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே. மேலும் மும்மீன்கள் இந்த நாடடின்
மீது படை எடுத்து வந்து இந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்து,
இந்தியர்களை கொலை செய்து ஆட்சி செய்து சென்ற வரலாறுகளை சிறுவர்களின் பள்ளி
பாட புத்தகங்களிலேயே நீங்கள் பார்க்கலாம்.

suvanappiriyan said...

//மேலும் மும்மீன்கள் இந்த நாடடின்
மீது படை எடுத்து வந்து இந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்து,
இந்தியர்களை கொலை செய்து ஆட்சி செய்து சென்ற வரலாறுகளை சிறுவர்களின் பள்ளி
பாட புத்தகங்களிலேயே நீங்கள் பார்க்கலாம்.//

முன்பெல்லாம படையெடுப்பதே செல்வங்களை கொள்ளையடிக்கத்தான். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அழிக்காத கோவிலா? அல்லது அங்கிருந்து கொள்ளையடிக்கவில்லையா? பெண்கள் குழந்தைகள் என்று ஈவிரக்கமின்றி கொல்லவில்லையா? அது அன்றைய நடைமுறை.

அடுத்து வெளியிலிருந்து வந்த மொகலாயர்கள் இந்நாட்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு புது கலாசாரத்தை உண்டாக்கி இந்த மண்ணின் மைந்தராகினர். பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அகண்ட பாரதத்தை உண்டாக்கி விட்டு சென்றனர்.

மேலும் நமது வராறுகள் அனைத்தும் பார்பனர்களால் எழுதப்பட்டது. அவை எந்த அளவு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வரலாற்றாசிரியர்களும் நன்கு அறிவர்.

//ஆரியர்கள் எந்த மன்னரின் தலைமையில், எப்போது படையெடுத்து வந்து
இந்தியர்களை வென்றார்கள் என்ற சரித்திர விஷயத்தை சொன்னால் அது ஆராய்ச்சி
செயபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே.//

பலவற்றை திட்டமிட்டு அழித்து விட்டீர்கள். இருந்தாலும் ஒன்றிரண்டு ஆதாரங்கள் தற்போது வெளி வந்த வண்ணமே உள்ளது.


http://www.youtube.com/watch?v=DesPF-6-WCE

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//நான் உளறி தமாஷ் பண்ணுகிறேனா அல்லது அதைச் செய்வது நீங்களா என்பதை பதிவை படிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.//

ஆமாம். உங்கள் பதிவுகளை படிக்கிற அறிவுள்ள எவரும் நீங்கள் எப்படிப்பட்ட தமாஷ் பேர்வழி என்பதை நன்கு அறிந்து கொள்வார்கள்.

//அண்ணா சொன்னால் அதற்கு அப்பீல் உண்டு.//

அண்ணாவின் சிஷ்யர்களை தவிர மற்றவர்கள் ஆரியம்,திராவிடம் என்ற வெள்ளையர் உருவாக்கிய பொய்யை நம்பவில்லை, ஏற்கவில்லை.

// ஆனால் உங்கள் வேதமான அதர்வண வேதம் சொன்னால் அதற்கு எங்கு சென்று அப்பீல் ோடுவது? இதைத்தானே ஒவ்வொரு வீடுகளிலும், கோவில்களிலும் ஓதி வருகிறீர்கள்?//

வேதங்களை நிராகரிப்பதற்கு, அதற்கு எதிரான கருத்துக்களை கூறுவதற்கு இங்கே அனுமதி உண்டு. குரானையும் சுன்னாவையும் எதிர்க்க, நிராகரிக்க உங்கள் மூமின் நாடுகளில் அனுமதி கிடைக்குமா? குறிப்பாக உங்கள் கனவு தேசமான சவூதி அரேபியாவில் அனுமதிப்பார்களா?

//திராவிடனான ராவணனின் தங்கை சூர்ப்பனகை காதல் கொண்ட ஒரே காரணத்துக்காக அவளின் மூக்கை அறுத்த ஆர்ய ராமன் உங்களுக்கு கடவுள். அதை தட்டி கேட்ட ராவணன் உங்கள் பார்வையில் வில்லன்.//

அதாவது ஒரு பெண் மற்ற பெண்ணின் புருஷன் மேல் ஆசைப்படலாம், அதில் தவறு ஏதும் இல்லை என்று கூறுகிறீர்கள். அது உங்கள் மூமின் புத்தி. திராவிட ராவணனா? நல்ல தமாஷ்?

// அரக்கர்கள் என்றும் அசுரர்கள் என்றும் திராவிடர்களை இழிவு படுத்துவதை மறுக்க முடியுமா?//

ஆரிய இனம், திராவிட இனம் என்பதே கட்டுக்கதை. இல்லாத ஒரு இனத்தை இழிவு படுத்துவதாக புலம்புவது தமாஷ் தானே, சுவன(ஹூரி) பிரியன்?

///அண்ணாவுக்கு அவரை சார்ந்தவர்கள் அறிஞர் பட்டம் கொடுத்துவிட்டால், அவர் சொல்வதை எல்லாம் அப்படியே அறிவுப்பூர்வமானது என்று அறிவுள்ளவர்கள் எடுத்துக்கொள்வார்களா?//

//அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொண்டதால்தான் அவரை முதலமைச்சராக்கி அழகு பார்த்தார்கள்.///

திராவிடம் பேசியவர்களின் பொய்களை நம்பி ஏமாந்தவர்கள் வாக்கு செலுத்தியதால்தான் அண்ணா ஆட்சிக்கு வர முடிந்தது. பொய்களை நம்புவது அறிவுடைய
செயல் இல்லை.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//முன்பெல்லாம படையெடுப்பதே செல்வங்களை கொள்ளையடிக்கத்தான். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அழிக்காத கோவிலா? அல்லது அங்கிருந்து கொள்ளையடிக்கவில்லையா? பெண்கள் குழந்தைகள் என்று ஈவிரக்கமின்றி கொல்லவில்லையா? அது அன்றைய நடைமுறை.//

அந்த கால மன்னர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை விரிவு படுத்துவதற்காக மற்ற நாடுகளின் மேல் படை எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் குடிமக்களின் செல்வங்களை கொள்ளை அடிப்பது, பெண்களை கற்பழிப்பது, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைதனத்தில் தள்ளுவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடவில்லை. இந்த நோக்கத்திற்காக அவர்கள் மற்ற நாடுகளின் மேல் போர் தொடுக்கவும் இல்லை. அவர்களில் ஒரு சிலர் வேண்டுமானால் இந்த ஈன செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் பெரும்பாலான மற்றவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை.

உங்கள் நபி முகம்மது நடத்திய போர்கள் அந்த கால, இந்த கால போர் விதிமுறைகளுக்கு மாறான அதிரடி பயங்கரவாத திடீர் தாக்குதல்களே. பத்ரு, மற்றும் அகழ் போர்கள் மட்டும் விதிவிலக்கு. மற்ற அனைத்தும் முஹம்மது நடத்திய பயங்கரவாத தாக்குதல்களே. இதன் நோக்கம் இஸ்லாத்தை பரப்புவது, காபிர்களின் செல்வங்களை கொள்ளை அடிப்பது, இளம் பெண்களை கற்பழிப்பது, பெண்களையும், குழந்தைகளையும் அடிமை படுத்துவது மட்டுமே. முகம்மதுவின் இப்படிப்பட்ட இழிவான, கேடுகெட்ட செயல்களை நியாயபடுத்துவதற்காக அந்த கால மன்னர்களின்மேல் அவதூறு கூறுகிறீர்கள். இது உங்களுடைய ஈமான்தாரி ஈன புத்தியையே காட்டுகிறது.

Unknown said...

இன்னும்
எத்தனை காலத்திற்கு இந்த ஆரிய, திராவிட பாட்டை பாடிக்கொண்டிருக்க
போகிறீர்கள் சுவனபிரியர். அப்படியே ஆரியர்கள் இங்கே வந்திருந்தாலும்
நீங்கள் அக்கால மன்னர்களின் வழக்கங்களை கூறியது போல. நாடு விட்டு நாடு
செல்வது மக்களின் வழக்கம், இக்காலத்தில் கூட பாலைவன நாடுகளின் ஈமாந்தாரிகள்
பிழைப்பதற்கு வளமான நாடுகளுக்கு செல்வதில்லையா, உமது கூட்டம் செல்லும்
நாடுகள் எல்லாம் தரித்திரம் பிடித்து பிரச்சனைகளில் சிக்கி
தவிக்கவில்லையா? ஏன் உமது கூட்டம் ஆரியர்கள் ஆரியர்கள் என்று ஓவராக
ஊளையிடுகிறது. துலுக்கர்களுக்கு என்ன வேண்டும். சரி, ஒன்று சொல்லுங்கள்
ஆரியர்களை என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்
இங்கே ஏக தெய்வம் இருந்தது என்று முழங்குகிறீர் அதற்கான ஆதாரத்தை கேட்டால்
வாயை மூடிக்கொள்கிறீர். இந்து சமயம் என்பது இந்த நாட்டின் அடையாளம் மற்றும்
பண்பாடு. அதில் குறைகள் இருந்தால் அதை நாங்கள் சரி செய்து கொள்வோம், அதில்
தலையிட துலுக்கன் யார். என்ன ஒரு ஈன புத்தி இந்த துலுக்க கூட்டத்திற்கு.

suvanappiriyan said...

//அப்படியே ஆரியர்கள் இங்கே வந்திருந்தாலும்
நீங்கள் அக்கால மன்னர்களின் வழக்கங்களை கூறியது போல. நாடு விட்டு நாடு
செல்வது மக்களின் வழக்கம்,//

தங்குவது பிரச்னை இல்லை. ஆனால் இந்த நாட்டு பூர்வீக குடிகளை சூத்திரர்கள் என்றும் பார்ப்பனர்களாகிய நீங்கள் 'பிராமணர்கள்' அதாவது தலையில் பிறந்தவன் என்றும் மக்களை இழிவு படுத்துவதையே எதிர்க்கிறோம். இன்று கூட பார்பனர்களின் எச்சில் இலையில் இந்நாட்டு பூர்வ குடிகளாகிய திராவிடர்கள் உருளுவதை பதிவாக இட்டுள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அநியாயம் எந்த நாட்டிலாவது இந்த காலத்திலும் நடக்குமா?

http://suvanappiriyan.blogspot.com/2013/12/blog-post_7672.html

//துலுக்கர்களுக்கு என்ன வேண்டும். சரி, ஒன்று சொல்லுங்கள்
ஆரியர்களை என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள், //

ஒன்றும் செய்ய வேண்டாம் தாராளமாக இங்கேயே இருந்து கொள்ளட்டும். பொது சிவில் சட்டம், மாமிசம் தின்பதை தடுப்பது, இஸ்லாமியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் கிடைக்கும் இட ஒதுக்கீட்டை எதிர்பது, இஸ்லாமியர்களையும், திராவிடர்களையும் மோத விட்டு வேடிக்கை பார்ப்பது போன்ற யூதர்களின் செயல்களை (பார்பனர்களும் யூதர்களின் ஒரு கிளை பிரிவே) நிறுத்திக் கொண்டால் எங்களுக்கும் பார்பனர்களுக்கும் ஒரு பிரச்னையும் இல்லை. ஒரு பிரச்னையும் இல்லை.

//2000 ஆண்டுகளுக்கு முன்
இங்கே ஏக தெய்வம் இருந்தது என்று முழங்குகிறீர் அதற்கான ஆதாரத்தை கேட்டால்
வாயை மூடிக்கொள்கிறீர். //

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு திரு மூலர் திரு மந்திரத்தில் பாடிச் சென்றுள்ளாரே அதன் அர்த்தம் புரியுமா உமக்கு?

//இந்து சமயம் என்பது இந்த நாட்டின் அடையாளம் மற்றும்
பண்பாடு. அதில் குறைகள் இருந்தால் அதை நாங்கள் சரி செய்து கொள்வோம், அதில்
தலையிட துலுக்கன் யார். என்ன ஒரு ஈன புத்தி இந்த துலுக்க கூட்டத்திற்கு.//

இந்து என்ற பெயரை உங்களுக்கு தந்ததே மொகலாயர்களும், பிரிட்டிஷாருமே! இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது. சமீபமாக அடையாளத்துக்காக நமது அரசு சூட்டிய பெயரே இந்து. அல்லது உங்கள் வேதத்திலிருந்து இதற்கு ஆதாரத்தைக் காண்பிக்கவும்.

இஸ்லமியர்களாகிய நாங்கள் இந்நாட்டின் பூர்வீக குடிகள். எனது தொப்புள் கொடி உறவான இந்த திராவிடர்கள் ஆரிய மாயையில் வீழ்ந்து கிடப்பதை எங்களால் எவ்வாறு பார்த்துக் கொண்ருக்க முடியும்?

ஒருவன் சாப்பிட்ட எச்சில் இலையில் புரண்டு வருவதுதான் உங்கள் மதத்தின் கொள்கையா? அதை தட்டிக் கேட்கக் கூடாதா? முதலில் நீங்கள் அவ்வாறு ஒருவன் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளுவீரா?

http://suvanappiriyan.blogspot.com/2013/12/blog-post_7672.html



Anonymous said...

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லாது அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே

என்கிறாரே நம்மாழ்வார்.

Unknown said...

//தங்குவது பிரச்னை இல்லை. ஆனால் இந்த
நாட்டு பூர்வீக குடிகளை சூத்திரர்கள்
என்றும் பார்ப்பனர்களாகிய நீங்கள் 'பிராமணர்கள்' //
சுவன அண்ணாச்சி, உங்கள் இனத்திற்கே அறிவு குறைவு என்பது உலகுக்கே தெரியும்,
அதை நிருபிக்காதீர்கள். முன்பே உமது பதிவு ஒன்றில் எனது பெயர் கிருஷ்ண
பாபு,
எனது தகப்பனார் பெயர் அனந்தன் நாடார் என்று கூறி உள்ளேன். பார்ப்பனர்கள்
மட்டுமே இங்கே இந்துக்கள் அல்ல. //அதாவது தலையில் பிறந்தவன்
என்றும் மக்களை இழிவு படுத்துவதையே எதிர்க்கிறோம்//
தாராளமாக இழிவு படுத்துவதை
எதிர்க்கலாம். அதுதான் மனித தன்மையும் கூட, ஆனால் அதையே காரணம் காட்டி எனது
மதத்திற்க்கு வா என்று மதமாற்றம் செய்வது சுத்தமான சாக்கடைத்தனம், அந்த
இழிவு செயலைத்தான் நாங்களும் எதிர்க்கிறோம்.

suvanappiriyan said...

//எனது தகப்பனார் பெயர் அனந்தன் நாடார் என்று கூறி உள்ளேன். பார்ப்பனர்கள்
மட்டுமே இங்கே இந்துக்கள் அல்ல.//

இருக்கட்டும். பார்பனர்களுக்கு அடுத்த இடத்தில் வருவீர்களோ! எனனதான் இந்து மத சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கினாலும் உங்கள் சாதி பார்பனர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது. :-)

//எதிர்க்கலாம். அதுதான் மனித தன்மையும் கூட, ஆனால் அதையே காரணம் காட்டி எனது
மதத்திற்க்கு வா என்று மதமாற்றம் செய்வது சுத்தமான சாக்கடைத்தனம், அந்த
இழிவு செயலைத்தான் நாங்களும் எதிர்க்கிறோம்.//

கிறித்தவர்கள் வேண்டுமானால் திட்டமிட்டு மத மாற்றத்தை நிகழ்த்தி வருகின்றனர். முஸ்லிம்களிடம் அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை.

ஏ.ஆர்.ரஹ்மானையும், பெரியார்தாசனையும யார் அழைத்தார்கள். அவர்களாக புரிந்து இஸ்லாத்தை ஏற்றனர். தமிழகத்தில் நடக்கும் இஸ்லாமிய மத மாற்றம் அனைத்தும் விரும்பி எடுப்பதே. கட்டாயப் படுத்தி மத மாற்றம் செய்தால் அரசும் சும்மா விடாது. அவ்வாறு கட்டாயப் படத்தி மத மாற்றம் செய்ததாக ஒரு சம்பவத்தை காட்ட முடியுமா?

Unknown said...

//ஒன்றும் செய்ய வேண்டாம் தாராளமாக இங்கேயே இருந்து கொள்ளட்டும்.//

அடேயப்பா, அனுமதி கொடுத்து விட்டார். துலுக்கர்கள் அனுமதி கொடுத்து தான் இந்துக்கள் இங்கே இருக்க வேண்டுமா? நன்றாக இருக்கிறதே //பொது சிவில் சட்டம்,// அட என்னங்க அண்ணாச்சி, அல்லா முன்னால் எல்லாரும் சமம் தானே, அது போல சட்டத்தின் முன் சமமாக இருக்க உங்களுக்கு ஏன் கசக்கிறது. அப்படி தனி சட்டம் வேண்டுபவர்கள் இருக்க வேண்டியது இங்கல்ல, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாகிஸ்தானில். //மாமிசம் தின்பதை தடுப்பது,// தவறுதான்,எதுவோ எதையோ தின்றுவிட்டு போகிறது என்று சும்மா இருப்பது தான் நியாயம்

//இஸ்லாமியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் கிடைக்கும் இட ஒதுக்கீட்டை எதிர்பது, // இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஏமாற்று வேலை, எந்த அரசு அல்லது சமுதாயம் உமது கூட்டத்திற்கு கல்வி வேலை வாய்ப்பு கிடைக்காமல் தடுத்தது. உமது கூட்டத்தை விட கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் குறைவுதானே, அவர்கள் இப்படி இட ஒதுக்கீடு, என்று புலம்பி கொண்டிருக்கவில்லையே, முஸ்லிம்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் இந்த நாட்டில் இல்லையா? உமது கூட்டம் படிக்காமல் வேலைக்கு போகாமல் இருந்தால் அதற்கு அரசும் பார்ப்பனர்களுமா பொறுப்பு. முதலில் மதம், அழைப்பு பணி தூதரு என்று 24 மணி நேரமும் புலம்பி கொண்டிருப்பதை விட்டு விட்டு உமது கூட்டத்தை படிக்க சொல்லும் தன்னால் முன்னேற்றம் வரும். இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் என்ன சாதித்து விட போகிறீர்கள், இதுவரை செய்யாததை.

//இஸ்லாமியர்களையும், திராவிடர்களையும் மோத விட்டு வேடிக்கை பார்ப்பது போன்ற யூதர்களின் செயல்களைநிறுத்திக் கொண்டால் எங்களுக்கும் பார்பனர்களுக்கும் ஒரு பிரச்னையும் இல்லை//



சுவனரே, இங்கே பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே உமது கூட்டத்தின் மத மாற்ற நடவடிக்கைகள் தான். முதலில் அதை நிறுத்துங்கள், மற்றவை தானாக நிற்கும். உமது. அதை நிறுத்தாதவரை மற்றவை நிற்க வாய்ப்பே இல்லை. நிற்கவும் வேண்டாம்.

Unknown said...

//
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு திரு மூலர் திரு மந்திரத்தில் பாடிச் சென்றுள்ளாரே அதன் அர்த்தம் புரியுமா உமக்கு?//

எல்லா அர்த்தமும் முன் எனக்கு புரியும் அறிவிலியே. ஒரே பாட்டை பாடி கொண்டிருக்காமல் அந்த பாட்டிற்கு விளக்கம் தான் உம்மிடம் கேட்டேன். 2000 ஆண்டுகளுக்கு இந்த இரண்டு வரிகளை பாடிகொண்டா தங்கள் வணக்க வழிபாடுகளை செய்தனர், அதை விளக்க முடிந்தால் விளக்கும். இல்லை என்றால் பொத்திக்கொண்டு இரும். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதீர். ஒரே பாட்டை திரும்ப பாடுவது ஆதாரம் கிடையாது. தமிழர்கள் தங்கள் இறை வணக்கத்தை எப்படி செய்தனர் என்று ஒரு பதிவு நீர்தான் இட்டிருக்கிறீர், அது போல ஒரே இறைவனை எப்படி வணங்கினர் என்று விளக்கும்.


http://suvanappiriyan.blogspot.in/2013/10/blog-post_7.html

C.Sugumar said...

அண்ணாத்துரை அறிஞா் என்றால் மா.பொ.சிவஞானம் திரு வரதராசனாா் மாணிக்கவாசகா் கிவா.ஜெகந்நாதன் போன்ற நுாற்றுக்கணக்கான தமிழ் அறிஞா்களை என்ன என்று அழைப்பது ? அண்ணாத்துரை ஒரு கூட்டத்தினை கூட்ட சாதுா்யமாக சொற்பொழிவு வெய்வதில் வல்லவா்.அவவ்வளவுதான். இவரையெல்லாம் அறிஞா் மேதை என்றால் ... அதுதான் தமிழகம் தாழ்ந்து கிடக்கின்றது.துக்ளக் பத்திாிகையில் நெல்லை ஜெபமணி அவர்கள் எழுதிய கண்டு கொள்வோம் கழகங்களை என்ற தொடா் கட்டுரையைப்படியுங்கள்.

Dr.Anburaj said...

2000 -5000 வருடங்களுக்கு முன் எது நடந்தாலும் மிக சிறப்பாக எதையும் நிருபிக்க யாராலும் முடியாது.ஆரியா்களும் திராவிடா்களும் பிறாமணா்களும் ஏனையோா்களும் இறண்டறக்கலந்து பதிய சாதிகள் உருவாகி விட்டது இந்தியாவில். அதைத்தான் சுவாமி விவேகானந்தா் கூறுகின்றாா். ஆாியா்களையும் திராவிடா்களையும் பிாித்து காட்ட யாரால் முடியும் என்று ? ஆாிய -திராவிட வாதம் எத்தா்களின் வாதம். விண் வெட்டிவேலை. தமிழனை உருப்பட விடக்கூடாது என்ற சில துரோகிக் கூட்டங்களின் வேலை.திராவிடன் என்று அதிகம் பேசுகிறவா்களது யோக்கியதை பத்திாிகைகளில் உள்ளது. சா்காாியா கமிஷண் 2-G கொள்ளை என தமிழனின் சொத்துக்களை கொள்ளையிட்டு விட்டு திராவிடம் வாழ்க தமிழ் வாழ்க என்று ஒப்பாாி வைத்து தமிழை ஏமாற்றிக் கொண்டிருப்பவா்கள் தாம் ஆாிய -திராவிடக் கதை கதைக்கின்றாா்கள்.
21ம் நூற்றாண்டு இந்தியா எல்லோருக்கும் சமத்துவம் என சட்டங்கள் வந்தாகி விட்டது. கல்வி வளர வளர மூடநம்பிக்கை குறைந்து போய்விிடும். சுவாமி விவேகானந்தரை ஒவ்வொரு இளைஞனுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். நல்ல இந்துவாக இந்தியனாக வாழ அது வழிகாட்டும். ஆாியதிராவிட சா்ச்சைகளை மக்கள் முற்றிலும் மறந்து விடுவாா்கள். மனித வளம் ஓம்பப்படும்.பண்பாடு ஒங்கும். இந்தியா வாழும்.இநதியா்கள் வாழ்வாங்கு வாழ்வாா்கள்.

Dr.Anburaj said...

ஐயங்காா் பிறாமணா்கள் இறைவனுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றும் நம்வாழ்வாா் பிறப்பில் பாா்ப்பனா் -ஐயா்-ஐயங்காா் - இல்லை. நம்மாழ்வாா் வாழ்க்கை குறிப்புக்களை ஆய்ந்து பாா்ததால் அவர் நாடாா் சமூகத்தை சோ்ந்தவா் எனக் கருதுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.ஸ்ரீராமானுஜா் ஒரு பாா்ப்பனசாதி அல்லாத ஒருவரை வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தாா்.ஆனால் ஸ்ரீராமானுஜரால் உாிய நேரத்தில் வீட்டுக்கு வர இயலவில்லை. வீட்டிற்கு வந்த விருந்தினரை அவர் பிறாமணா் அல்லாதவா் என்பதால் தெரு திண்ணையில் வைத்து உணவு அளித்து சாப்பிட்ட இலையை விருந்தினரையே எடுத்துப்போட்டுவிட்டு விருந்தினா் அமா்ந்த இடத்தை சாணி போட்டு மெழுகு சுத்தம் செய்தாா் -ராமானுஜாின் மனைவி. இச்செயலுக்கு பொிதும் மனைவியைக் கண்டித்த ஸ்ரீராமானுஜா் மனைவியைத் திருத்த முயன்றாா் இமுடியவில்லை.எனவே மனைவியைப்பிாிந்தாா். சாதி துவேசம் பிடித்த மனைவியை சமூக நீதிக்காக துறந்த பாா்ப்பனா் ஸ்ரீராமானுஜா். சுவனப்பிாியனே? அரபு அடிமையே இபபோது சொல்லுங்கள் பிறாமணமா்கள் ஆாியா்களா , பிறாமணா்கள் துரோகப்புத்தி உடையவா்களா ?