Followers

Sunday, December 29, 2013

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி ......!



உண்மைதான் வார்ததைகளால் விவரிக்க முடியாத வலி ஏற்படத்தான் செய்தது !

கோத்ரா ரயில் நிலையத்து பிளாட் பாரத்தில் கருகிய பிணங்கள் கிடந்தன ! உடனடியாக பிரேத பரி சோதனையினை அந்த பிளாட்பாரத்திலேயே நடத்த வேண்டும் என்று முதலமைசர் உத்திரவிடுகிறார் !

மக்கள் முன்னாள்,அவர்கள் பார்வையில் நடக்கிறது ! இப்படி செய்ய வேண்டாம் என்று கூறிய சில அதிகாரிகள் உதாசினப்படுத்தப்படுகிறார்கள்! மக்கள் இதனைப் பார்த்தால் உணர்ச்சி வசப்படக் கூடும் என்பதால் அவ்ர்கள் கூறுகிறார்கள்! உள்துறை அமைச்சர் நரேன் பாண்டியா எதிர்க்கிறார் ! முதல்வர் அலுவலகம் பகிரங்கமாக பரிசோதனை மக்கள் பார்வைபட நடக்க வேண்டுமென்று உத்தரவு இடுகிறது!

பஜ்ரங் தள தலைவர்கள் வருகிறார்கள்! அகமதாபாத்தில் ஊர்வலம் நடத்தவேண்டும் என்கிறார்கள்! உடலை அறுத்து பரிசோதன முடிந்த சடலங்களை போட்டலமாகக் கட்டி தாருங்கள்! அதனை ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்!" ஊர்வலத்தில் சடலங்களைக் கொண்டு போகக்கூடாது ! மக்கள் உணர்ச்சி வசப்பட்டு மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு கெட்டு விடும்" என்கிறார் உள் துறை அமைச்சர் நரேன் பாண்டியா! முதல்வர் அலுவலகம் தலையிடுகிறது! சடலங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதியளிக்கிறது!

ஏழை எளிய முஸ்லீம்கள் ஆணும்பெண்ணும் குழந்தைகளுமாக உயிருக்குப் பயந்து ஜாப்ரி வீட்டில் தஞ்சமடைகிறார்கள்! கலவரக்காரர்கள் அவர் வீட்டை சூழ்ந்து கொள்கிறார்கள்! உள்ளே புகுந்து படுகொலை நடத்தும் நோக்கத்தோடு!

ஜாப்ரி முதலமைசரோடு தொலை பேசியில் பாதுகாப்பு கோரி மன்றாடுகிறார்! "முஸ்லீம்கள் இந்துக்களை படுகொலை செய்யும் போது நீங்கள் எங்கு இருந்திர்கள்" என்று பதில் வருகிறது ! மனம் நொந்து ஜாப்ரி வீட்டின் முன்னே இருக்கும் கலவரக்காரர்களிடம் " என்னை எடுத்துக் கொள்ளுங்கள் ! அப்பாவி ஜனங்களை விட்டு விடுங்கள் " என்று கதறுகிறார்!

கலவரக்காரர்கள் அவரை எடுத்துக்கொண்டார்கள்! கண்ட துண்டமாக வெட்டினார்கள்! தஞ்சம் புகுந்த மக்களையும் வெட்டி வீட்டிற்கு தீவைத்து அநத நெருப்பில் போட்டார்கள் !மாண்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாக 68 பேர்!

இதனைத் தடுக்க விரும்பிய நரேன் பாட்டியா குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் அரசு தலைமைச் செயலகத்தின் முன்பு பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்!

வார்தைகளால் விவரிக்க முடியாத வலி எனக்கு ஏற்படுகிறது!

இதனைப்படிக்கும் உங்களுக்கும் ஏற்படும்!!

சில நாய்களுக்கும் ஏற்பட்டுள்ளதாம்!!!

http://kashyapan.blogspot.com/2013/12/blog-post_29.html

நன்றி: காஸ்யபன்.

காஸ்யபன் போன்ற நல்லுள்ளம் கொண்ட நடுநிலையாளர்கள் எனது நாட்டில் உள்ள வரை மக்களுக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணி ஆட்சி அதிகாரத்தை பிடித்து விட எண்ணும் குறுமதியாளர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

5 comments:

Anonymous said...

venu's pathivukal said...

அன்பின் காஸ்யபன் அவர்களுக்கு

வகுப்புவாதம் என்னென்ன செய்யும் என்பதை உண்மை நிகழ்ச்சிகளின்மீது சத்திய ஆவேசத்தோடு பதிவு செய்துள்ளீர்கள்...

ஏற்படும் வலி சாதாரணமானது அல்ல..

குரானை மட்டுமல்ல, இந்துக்கள் வேத புத்தகங்களையும், கீதை உள்ளிட்டவற்றையும் கூட தனது நூலகத்தில் பேணிப் பாதுகாத்த இஸ்லாம் பெரியவரை வெட்டிச் சாய்த்த அராஜகவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள், உண்மையில்...அவர்கள் சுட்டெரித்த பட்டியலில் தங்களது வேத புத்தகங்களும் அடங்கும் என்பது கூட அறியாத வெறித்தனமும் மடமையும் அவர்களுள் ஆட்சி செய்திருக்கிறது...உண்மைக் கயவாளிகள், குற்றவாளிகள் இந்துத்துவ மத அடிப்படைவாதிகள்..

அதன் எதிர்வினையாக உருப்பெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகள்...நவீன தாராளமயம், இந்த நிலபிரபுத்துவ சிந்தனைகளை வெட்டிச் சாய்க்காமல் தூபம் போட்டுவிடுவது ஏகாதிபத்திய நலன்களைக் காப்பதற்கு...

சவால்கள் நிறைந்த காலம் இது...

வரலாற்றை மறுப்பவர்கள் மீண்டும் அதே பிரச்சனைகளில் சிக்கி உழல்வதைத் தவிர வேறு வழியில்லை...எனவேதான் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை இவற்றுக்கு இடதுசாரிகள் முன்னுரிமை அளிப்பது


எஸ் வி வேணுகோபாலன்

December 29, 2013 8:10 AM

Anonymous said...

“If Modi had said ‘Stop’ [the riots] would have stopped but he did not. And now he says he felt pain. He is a liar. He has written this letter to fool people but people are not idiots. More and more Hindus also see he is a liar now.”

http://www.thehindu.com/.../modis-blog.../article5512951.ece

Anonymous said...

எஸ்.பி.முதலியார் அவர்களே..

உங்க கருத்து செம்ம காமெடியா இருக்கு...இந்து மதத்த பத்தி நா குறை ொல்லல...ஆனா...ஆபிரஹாமிய மதங்கள் இங்க வர்றதுக்கு முன்னாடி அமைதியா இருந்த நாடுன்னு சொன்னீங்க பாருங்க...அதான் அநியாய காமெடி...புத்தனும் ..சமணனும் எப்புடி இங்க இருந்து காணாம போனாங்க?மதுரை கோவில் எத்தன மொற சூறையாட பட்டு இருக்கு..?அதுக்கெல்லாம் ஆபிரஹாமிய மதங்கள் தான் காரணமா?சாளுக்கியணும்..ஹர்ஷனும்...பல்லவனும் அடுச்சுகிட்டதுக்கு ஆபிரஹாமிய மதங்கள்தான் காரணமா?சேரனும்..சோழனும்..பாண்டியனும் கோல பண்ணி கொள்ளயடுச்ச்சதுக்கு ஆபிரஹாமிய மதங்கள்தான் காரணமா?இல்ல தெருவுல நடக்க கூடாது..கெணத்து தண்ணீர பயன்படுத்த கூடாது...பெண்கள மேலாட அணிய கூடாது..சரிசமமா பக்கத்துல உக்கார கூடாதுன்னு சொன்னதுக்கெல்லாம் ஆபிரஹாமிய மதங்கள்தான் காரணமா?சொல்லுங்க நண்பரே..சொல்லுங்க...மனசாட்சி
யோட சொல்லுங்க..

-face book comment

Anonymous said...

காரைக்காலில் நடந்த ஒரு துயர சம்பவத்தை இந்துத்துவா தீவிர மதவாதிகள், உண்மையை மறைத்து அல்லது திரித்து, திட்டமிட்டோ அல்லது திட்டமிடாமலோ, இதை இஸ்லாமிய மதத்திற்கு எதிரான பிரச்சினையாகவும், மற்றொரு தாழ்த்தப்பட்ட இனத்திற்கு எதிராகவும் திசை திருப்பி அனைவரையும் முட்டாள்களாக ஆக்கி இருக்கிறார்கள் ..
இவர்களின் இந்த செயல், பாரதிய சனதா கட்சி ஒரு தீவிர இந்துத்துவா மதவாத RSS, விஸ்வ இந்து பரிசத், சிவசேனை போன்றவர்களால் நடத்தப்படுகிறது என்பதை மீண்டும் உறுதி செய்கிறது ...
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இன்னும் பல மசூதி இடிப்புக்களையும், குஜராத்தில் நடந்தது போன்ற இஸ்லாமிய இனப் படுகொலைகளையும், இந்தியா முழுவதும் நடத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை ...

தமிழகத்தில் இந்துத்துவா தீவிர மதவாத அமைப்புகளை வேரூன்ற அனுமதிக்க கூடாது ...

என்னுடைய நட்பு வட்டத்தில் இருக்கும் பாரதிய சனதா கட்சி எஸ் முதலியார் அவர்கள், திரு நசீம் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பதிவு செய்ததற்கும், சம்பந்தம் இல்லாத இஸ்லாமிய சகோதரிகளின் புகைப்படத்தை பதிவு செய்ததற்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் ...

-Manicka vasakam from face book

suvanappiriyan said...

//துபாயில் சவூதி இளவரசர் சல்மான் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரபியரை கொலை செய்துள்ளார்.//

“There is no difference between big and small, rich and poor. The powerful are weak before God’s law until others get their rights from them while the weak are powerful until their rights are protected.

Nobody is allowed to interfere with the judiciary’s decision. This is the tradition of this state. We are committed to following the Shariah.”

The victim was a Saudi citizen and King Abdullah reportedly issued a royal decree stating that capital punishment would be enforced if the reconciliation process between the prince and the victim’s family failed.

The victim’s father issued a statement saying he was not ready to pardon the prince and claimed the reconciliation committee was not fair to him.

http://www.arabianbusiness.com/saudi-prince-be-executed-532621.html

பாதிக்கப்பட்டவர்கள் சமாதானத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லையாதலால் அனேகமாக அந்த இளவரசரின் தலை வெட்டப்படலாம். ஜனநாயக நாடான நம் நாட்டில் கூட ஆள்வோரின் வாரிசுகள் தவறு செய்தால் இந்த அளவு தண்டிக்க மாட்டோம். அதுதான் ஷரியா!