Followers

Saturday, December 27, 2014

தந்தை பெரியார் ஏக இறைவனை மறுத்தாரா?



திரு ஜெயபாரதன்!

//அப்படியானால் கடவுளை நம்பிய திருவள்ளுவர், இளங்கோ வடிகள், கம்பர், காளிதாசர், ஆண்டாள், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், பாரதியார், அருணகிரிநாதர், வள்ளலார், மீரா, காரைக்கால் அம்மையார், ஏசுநாதர், அன்னை தெரேசா, நபிநாயகம் ஆகியோரெல்லாம் முட்டாளா ?//

பெரியாரின் கருத்துக்களை தவறாக விளங்கிக் கொண்டதால் பலருக்கு இதில் தெளிவு கிடைக்கவில்லை. பெரியார் சொல்வதைக் கேளுங்கள்.

"கடவுளை மக்களிடையே பரப்பினவனை ஏன் அயோக்கியன் என்கின்றோம் என்றால், கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை, பற்றற்றவர், எங்கும் நிறைந்தவர், எல்லாமுமானவர் என்பது தெரிந்தும் அதற்கு மனிதனைப் போல உருவம் அமைத்து மனிதனுக்குள்ள ஆசாரபாசங்கள் யாவும் அதற்கு உண்டு என்று கதை எழுதி, அதற்கும் பொண்டாட்டி, பிள்ளைக்குட்டி, கோயில் என்பதெல்லாம் உற்பத்தி செய்து, அதற்குச் சோறு, பூசை என்றும், அவனைக் கொன்றது - இவனைக் கொன்றது என்றெல்லாம் எழுதி அதை மக்களிடையே பரப்பி, மக்களையும் அறிவற்ற முட்டாள்களாக - மூட நம்பிக்கைக்காரர்களாக ஆக்கியதால் கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்கின்றோம்."

- பெரியார்
('விடுதலை', 29.01.1969)

கற்பனை செய்ய முடியாத அந்த கடவுளுக்கு உருவத்தைக் கொடுத்து அதற்கு மனைவியையும் உண்டாக்கி அந்த கடவுளுக்கு குழந்தைகளையும் உருவாக்கி அதன் மூலம் காணிக்கை வசூலிக்கும் புரோகிதத்தனத்தை வெறுத்ததனால் எழுந்த வார்த்தைகளே இவை. கடவுள் இருக்கிறான் என்பதை பெரியாரும் உணர்ந்தே இருந்தார்.

No comments: