Followers

Wednesday, December 17, 2014

பெஷாவர் தாக்குதலுக்கு தாலிபான்கள் கண்டனம்!

பெஷாவர் தாக்குதலுக்கு தாலிபான்கள் கண்டனம்!



பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியான சம்பவத்திற்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அப்பாவிக் குழந்தைகளைக் கொல்வது இஸ்லாமுக்கு விரோதமானது என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.

வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு பதிலடியாகவே ராணுவப் பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தாலிபான் அமைப்பு கூறியிருந்தது.

இதனையடுத்து ஆப்கான் தாலிபான்கள் தனது கண்டனத்தில் கூறும் போது, “ஆப்கான் இஸ்லாம் அமிரகம் அப்பாவி குழந்தைகள், மற்றும் மக்களைக் கொல்வதை எதிர்க்கிறது.

அப்பாவி மக்கள், குழந்தைகளை வேண்டுமென்றே கொல்வது இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமானது. ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், இயக்கமும் அடிப்படை சாராம்சத்தின் படி நடக்க வேண்டும்.

ஆப்கான் இஸ்லாமிய அமிரகம், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாவதற்கு பிரதானமான காரணம் தாலிபான்கள் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களே என்று ஐ.நா. ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதையடுத்து இன்று பெஷாவர் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்து நாளிதழ்
17-12-2014

தாலிபான்கள் இதனை கண்டித்திருந்தாலும் சில இடங்களில் இவர்களும் பொது மக்களை குறி வைத்து தாக்குகின்றனர். அப்பாவி பொது மக்களை யார் தாக்கினாலும் இன மதம் கடந்து அனைவரும் எதிர்க்க ஆரம்பித்தால் இவர்கள் கூடிய விரைவிலேயே சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்படுவார்கள்.

பெஷாவர் துப்பாக்கி சூட்டில் தப்பி பிழைத்த மாணவர்கள் சொல்கின்றனர்.

“தீவிரவாதிகள் சுடுவதற்கு முன் எங்களை குர்ஆனிலிருந்து ஓதும்படி ஆணையிட்டார்கள்”

அடிபட்டு மருத்துவமனையின் தீவிரப் பிரிவில் இருந்த ஷாருக் கான், “எங்களை பெஞ்சுகளுக்கு அடியில் படுத்து ஒளிந்து கொள்ளச் சொல்லி யாரோ கத்தினார்கள். ஆனால் எங்கள் முன் தீவிரவாதிகள் தோன்றி ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தியபடி சுட ஆரம்பித்து விட்டனர்

இதிலிருந்து என்ன தெரிகிறது? இதன் மூலம் இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்று இந்த செய்தியை கேள்விபடுபவர்கள் உணர வேண்டும் என்ற ஆவல் இந்த காட்டுமிராண்டிகளிடம் மேலோங்கியிருப்பது தெரிகிறது.. எனவே இந்த கொடியவர்கள் இஸ்லாமிய எதிரிகளால் தயாரிக்கப்பட்டு மூளை சலவை செய்யப் பட்டவர்கள் என்பது நன்கு விளங்குகிறதல்லவா?

இது போன்ற மனித மிருகங்கள் இந்த உலகத்திலிருந்தே அழிந்து போகட்டும்.....

ஆங்கில செய்தியில் ஒரு வாசகர் எழுதிய கவிதை

mustafa faisal.....

Mom! prepare me for school, as today is my last day
Mom! love me and kiss me, as today is my last day

Mom! give me the love of all siblings, as today is my last day
Mom! love me and kiss me, as today is my last day

Mom! don't count me tomorrow, as today is my last day
Mom! love me and kiss me, as today is my last day

Mom! forgive me for all the misbehavior, as today is my last day
Mom! love me and kiss me, as today is my last day

Mom! God bless you and take care forever, as today is my last day
Mom! kiss me for the last time, as today is my last day


No comments: