Followers

Tuesday, December 30, 2014

பெங்களூரு பாம் வைத்ததில் இந்து மாணவனுக்கு தொடர்பு!



இந்து மதத்தைச் சார்ந்த பள்ளி மாணவன் 'அப்துல் கான்' என்ற பெயரில் ட்விட்டரில் அக்கவுண்ட் திறந்துள்ளான். அந்த அக்கவுண்ட் மூலமாக ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் சர்ச் தெருவில் நடந்த குண்டு வெடிப்பை தானே செய்ததாகவும் இது போல் மேலும் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்றும் ட்விட் செய்துள்ளான். முன்பு கைதான மெஹ்தி பிஸ்வாஸையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கொரிக்கை வைத்துள்ளான்.

"I am Abdul the one behind Bangalore blast yesterday. In 2 days 2 more blast. I challenge catch me if you can. Police my foot. ISIS (Sic.)"

இந்த ட்விட்டை பெங்களூரு சிட்டி போலீஸூக்கும் உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கும் ஃபார்வேர்ட் பண்ணியுள்ளான் இந்த பள்ளி மாணவன். இது பற்றி க்ரைம் பிராஞ்ச் அபிஷேக் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது 'பையனின் பெற்றோர் எங்களை சந்தித்தனர். இவர்களது மகன் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளான் என்றும் ஒன்றும் அறியாத அப்பாவி என்றும் கூறுகின்றனர். பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இந்த மாணவன் இது போன்ற காரியத்தை செய்துள்ளான். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். பாதுகாப்பு காரணம் கருதி அவனது பெயரை மறைத்துள்ளோம்' என்றார்.

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்
30-12-2014

கள்ள ஐடி திறந்து முஸ்லிம் சமூகத்தை மாட்டி விட வஞசகமாக வேலை செய்த இந்த பள்ளி மாணவன் மன நலம் பாதிக்கப்பட்டவனாம். எப்படி இருக்கிறது கதை. காந்தியை கொன்ற கோட்சே இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு வந்ததை நாம் மறந்து விட முடியாது. அந்த வழி முறை வாழையடி வாழையாக இந்த பள்ளி மாணவனையும் சென்றடைந்துள்ளது. இவனை முறையாக விசாரித்தால் இதற்கு பின்னால் மறைந்துள்ள இந்துத்வா அமைப்புகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். மடங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற அரசு முயற்சிக்கும் போதுதான் பிரச்னையை திசை திருப்ப குண்டை வைத்திருக்கின்றனர். அப்பாவி பெண் ஒருவரும் இறந்துள்ளார். இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ்ஸாகவும் இந்தியன் முஜாஹிதாகவும் செயல்படுவது யார் என்பது இப்போது தெரிந்திருக்கும்.

அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வரும் இந்து முஸ்லிம் கிருத்துவர்களை எப்படியாவது பிரித்து விட இந்துத்வா ஆட்கள் பல முனைகளிலும் வேலை செய்கின்றனர். நான் உளமாற நேசிக்கும் எனது தாய் நாட்டை இந்த காட்டு மிராண்டி கும்பலான இந்துத்வாக்களிடமிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

http://www.hindustantimes.com/india-news/bangalore-blast-mentally-disturbed-hindu-boy-sent-out-terror-threats/article1-1301556.aspx

No comments: