Followers

Sunday, September 25, 2016

இந்து முன்னணி நபர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு



இந்து முன்னணி நபர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...

உங்க ஆளுங்க நேற்று புரட்டாசி மாசம்ன்னு கூட பார்க்காம "அஜிம் பாய் கடைல இருந்த "பிரியாணி"யை குண்டா ஓட திருடிட்டு போய் தின்னு இருக்கானுவ...

களவாண்டவர்கள் எங்கு இருந்தாலும் குண்டாவை திருப்பி தர சொல்லும் படி கேட்டு கொள்கிறோம்......


-பாசிச எதிர்ப்பாளர்களின் குரல்

4 comments:

Dr.Anburaj said...

முஸ்லீம் அன்பா்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
ஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்
September 29, 2016
- தேவ்

இந்திய விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் இந்துக்களோடு இணைந்துவாழ விரும்பாத கடும்போக்கு கொண்ட இஸ்லாமியர்கள் (குறிப்பாக மேல்தட்டு மற்றும் மேல்மத்தியதர வர்க்கத்தவர்கள்) முஸ்லிம் லீக் கட்சியின் தலைமையின் கீழ் அணிதிரண்டனர். இந்திய நிலப்பரப்பைப் பிரித்து அதிலிருந்து ஷரியா சட்டம் அமலிலிருக்கும் ஒரு சுதந்திர இசுலாமிய நாட்டை உருவாக்கி அதில் ஒன்று சேர்ந்து வாழலாம் என்று திட்டமிட்டனர்; அக்கருத்தியலின் பெயர் “தாருல் இஸ்லாம்”. அதன் விளைவே பாகிஸ்தான்.

அல்லாஹ்வின் அருளை நாடியவராய், ஷரியா சட்டத்தின்பால் உள்ள நம்பிக்கையால் கனவுலக மிதப்புக்களோடு பாகிஸ்தான் சென்று, இறுதியில் தார் அல் இஸ்லாம் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல், போன மச்சான் திரும்பிவந்த கதையாக பாரதம் மீண்டுவந்து செட்டிலான கடந்த நூற்றாண்டின் பிரபலங்கள் பலரின் கதைகள் நம்மில் பலர் அறியாத செய்தி.

1. புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி இசைப் பாடகர் உஸ்தாத் படே குலாம் அலிகான் ஸாஹப் 1947 தேசப் பிரிவினையின் போது லாகூர் மாகாணத்திலுள்ள தனது சொந்த ஊருக்குக் குடிபெயர்ந்தார். ஆனால் அங்கிருந்த சூழலைப் பொறுக்க முடியாமல் 1957ல் நிரந்தரமாக இந்தியாவுக்குத் திரும்பினார். அன்றைய மும்பை மாகாண முதலமைச்சராக இருந்த மொரர்ஜீ தேசாய் அவர்களின் உதவியோடு மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் குடிபுகுந்தார். ‘பத்ம விபூஷண்’ விருதும் பெற்றார்.

2. புகழ் பெற்ற கவிஞர் ஸாஹிர் லுதியான்வியும் பாகிஸ்தானில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப் படுவதால் பாரதம் திரும்பினார்; மும்பையில் குடியேறிய இவர் ஹிந்தித் திரைப்பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றார்.

dalit_jogendranath_mandal_pakistan_law_minister3. ஜோகேந்திர நாத் மண்டல் தாழ்த்தப்பட்டோர் தலைவராகவும், முஸ்லிம் லீக் சார்புடையராகவும் இருந்தவர் [நம் திருமா அண்ணாச்சியைப்போல]. இஸ்லாம் குறித்த டாக்டர் அம்பேத்கரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் பிரிவினைக்குப் பின் கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) சென்றார். பாகிஸ்தான் அமைச்சரவையிலும் பொறுப்பேற்றார். பாகிஸ்தான் இவருக்கு காஃபிர் எனும் மரியாதையையே தந்தது. மனக்கசப்புற்ற மண்டல் ஜீ சில ஆண்டுகளுக்குள்ளேயே மீண்டும் பாரதத்தில் புகலடைந்தார். டாக்டர் அம்பேத்கர் தம் தந்தைக்கு எழுதிய கடிதத்தை, மறைந்த ஜோகேந்திர நாத் மண்டலின் மகன் ஜகதீஷ் மண்டல் வெளியிடுகிறார் – வீடியோ இங்கே.

தான் ஏன் இஸ்லாமிய நாடான கிழக்கு பாகிஸ்தானை விட்டு வெளியேறினேன் என்பதை விளக்கி ஜோகேந்திர நாத் மண்டல் எழுதிய விரிவான கடிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கடிதத்தின் தமிழ் மொழியாக்கம் இங்கே.

4. ”ஆக் கா தரியா” எனும் புகழ்பெற்ற உருது மொழி நாவலை எழுதிய ’குர் அதுல் ஐன் ஹைதர்’ சிறந்த பெண் எழுத்தாளர் (இந்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘அக்னி நதி’ என்ற பெயரில் சாகித்திய அகாதமி வெளியீடாக வந்துள்ளது). லக்னோவைப் பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமிய பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1947ல் பாகிஸ்தான் உருவானபோது அங்குக் குடி பெயர்ந்தார். அகண்ட பாரதத்தின் பழைய வரலாற்றையும் இஸ்லாமியப் படையெடுப்புகள் நிகழ்த்திய வன்முறைகளையும் இவர் உள்ளபடியே தனது எழுத்துக்களில் எடுத்துரைத்ததால் பாகிஸ்தானிய மொகமதியரின் வெறுப்புக்கு ஆளானர். அமைதியையும் பாதுகாப்பையும் வேண்டி சில ஆண்டுகளிலேயே இந்தியாவில் புகலடைந்து குடியுரிமையும் பெற்றார். இவரது இலக்கியப் புலமை, சுதந்திர இந்தியாவில் தான் முழுமையாக வெளிப்பட்டது. உருது இலக்கியப் பங்களிப்புக்காக ஞானபீட விருதையும் பின்பு ‘பத்ம பூஷண்’ விருதையும் பெற்றார்.

இத்தகையவர்களின் பட்டியல் இன்னும் நீளும்.

1942ல் தோன்றிய எஸ் பி சிங்கா தலைமையிலான அகில இந்தியக் கிறிஸ்தவர் கூட்டமைப்பு பாக். பிரிவினைக்கு முழு ஆதரவு தந்ததோடு, பஞ்சாப் மாநிலம் முழுவதும் பாகிஸ்தானோடு இணைய வேண்டும் என்றும் போராடியது. இன்று பாகிஸ்தானில் கிறிஸ்தவரின் நிலைமை என்ன ? அதனை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

விசா நீட்டிப்புச் செய்து பாரதத்திலேயே தங்கிவிட முனையும் பாகிஸ்தானியர் இருப்பதாகவும் தெரிகிறது.

முஸ்லிம் நாடுகளின் வம்சாவளியைச் சேர்ந்த பாடகர் அத்னன் சாமி (அவரது தந்தை ஆஃப்கானிய பஷ்தூன் இனத்தவர். தாய் காஷ்மீரி). அவர் தற்போது இந்தியக் குடியுரிமையைத் தேர்வு செய்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆமிர் கான் போன்றோர் பாகிஸ்தான் போய்விடுவேன் என்று உதார் விடுவதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாம். அவர்கள் ஒருநாளும் இந்தியாவை விட்டுப் போக மாட்டார்கள். இங்கு துருக்கர் அனுபவிக்கும் சொகுசும், சுதந்திரமும்,சலுகைகளும் வேறெந்த நாட்டிலும் கிடைக்காது.

Dr.Anburaj said...

கிழக்குப் பாகிஸ்தான் ரத்தக்களரிக்குப்பின் 1971ல் பங்களா தேசமாகப் பிரிந்தது. ஹிந்துவான ரவீந்திரநாத் டாகூர் இயற்றிய “ஆமார் ஸோனார் பங்களா..” பங்களா தேஷின் தேசிய கீதமானது. ஒவ்வொரு வரியிலும் வாழும் நாட்டை அன்னையாகப் போற்றும் அப்பாடலை ஏற்பதில் அன்றைய வங்க முஸ்லிம்களுக்குச் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் வங்க தேசத்திலேயே தங்கிவிட்ட வங்க மொழி தெரியாத, உர்துவைத் தாய்மொழியாகக் கொண்ட பிஹாரி முஸ்லிம்களின் நிலைமையோ இன்னும் பரிதாபத்துக்குரியது. பங்களா தேஷ் பிரிவினைக் காலத்தில் வங்க முஸ்லிம்களால் பல பிஹாரிகள் கொலையுண்டனர்; பிஹாரி முஸ்லிம் பெண்கள் வன்புணர்வுக்குள்ளாயினர். பலர் மேற்கு வங்கத்தில் ஒட்டிக்கொண்டனர். பாகிஸ்தானும் இவர்களுக்குப் பொறுப்பேற்கவில்லை. எஞ்சிய 1,60,000 பிஹாரி முஸ்லிம்கள் வங்க தேச அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இது குறித்த காணொளி இங்கே.

வங்கதேசம் உருவாகப் பாடுபட்ட வங்க அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானைக் குடும்பத்தோடு அழித்து மயான காண்டம் பாடிய பணியைச் செய்தவர்கள் வங்கதேச இஸ்லாமிய ராணுவத் தலைவர்கள், 1975ல். இந்தப் போர்க் கொடுமைகள் குறித்த காணொளி இங்கே.

தற்போது பலோச் விடுதலைப்படை பாக். நிலப்பகுதியில் செம்பாதியைத் தனியாகப் பிரித்து பலோசிஸ்தான் என்ற சுதந்திர நாடாக்க வேண்டும் என்று முனைந்து போராடிக் கொண்டிருக்கிறது.

இந்நூற்றாண்டின் முதல் பதின்மத்தில் மட்டுமே குண்டு வெடிப்பு, தீவிரவாதத் தாக்குதலால் மடிந்த பாகிஸ்தானியரின் எண்ணிக்கை 35,000க்கும் மேல்.

PARTITION_MIGRATIONஹிந்து வெறுப்பால் பாகிஸ்தான் என்ற கனவுலகை நோக்கிச் சென்ற முஸ்லிம்கள், கடைசியில் அடிமையானது அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியே போன்ற எதேச்சாதிகார சக்திகளுக்கு மட்டுமே. அந்த சக்திகள் பாகிஸ்தானையும் அதன் மக்களையும் தங்கள் வியூகங்களின் ஒரு பகுதியாகப் பகடைக்காயாகப் பயன்படுத்தி சில எலும்புத்துண்டுகளை வீசி எறிகின்றன. அந்த நிலையிலேயே வாழ வேண்டிய அளவுக்கு இஸ்லாமிய மதவெறியும் அடிப்படைவாதமும் அந்த நாட்டை இட்டுச் சென்றுள்ளன. முன்னேற்றமும், குறைந்தபட்ச நிம்மதியான வாழ்க்கையும் கூட பாக். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களுக்கு அமையவில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை.

அதே இஸ்லாமிய மதவெறியால் ஒடுக்கப்பட்டு தினம்தினம் கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகும் சிறுபான்மை ஹிந்துக்களும், சீக்கியர்களும் பாகிஸ்தானிலிருந்தும், பங்களா தேசத்திலிருந்தும் பாரதத்தில் தஞ்சமடைவது அன்றாட நிகழ்வு.

Dr.Anburaj said...

தார் அல் இஸ்லாம் ஒரு கானல் நீர் என்பதைப் பாக். வசமுள்ள காஷ்மீர் (POK) முஸ்லிம்கள் கடைசியில் உணர்ந்து கொண்டனர்; பாகிஸ்தானுக்கு எதிராகக் கூக்குரல் எழும்பியுள்ளது. விமானக் கடத்தல் புகழ் – மாஜி ஜிஹாதி ஹஷிம் குரேஷி இப்போது உண்மைகளை வெளிப்படை ஆக்குகிறார்.

செல்வம் கொழிக்கும் இஸ்லாமிய அரபு நாடுகள் சிரிய முஸ்லிம் அகதிகளுக்கு இடமில்லாமல் கை விரித்தது அண்மைய நிகழ்வு.

கலிமாவை ஏற்ற மாந்தரிடையே எந்த நிற – மொழி – இன – பிராந்திய வேற்றுமையும் கிடையாது; எல்லாரும் சகோதரரே; தோளோடு தோள் உரசிக்கொண்டு தொழலாம் என்னும் பம்மாத்துகள் எல்லாம் எந்த அளவு உண்மை என்பதை இனியாவது அப்பாவி இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாகப் பாகிஸ்தானையும் அரபு எதேச்சாதிகார இஸ்லாமிய நாடுகளையும் தொடர்ந்து ஆதரிக்கும் ஒரு சாரார் இந்திய முஸ்லிம்களிடையே உள்ளனர். அவர்கள் உண்மையை உணர்ந்து அந்த ஆதரவு நிலைப்பாடுகளைத் துண்டித்து, இந்திய தேசியத்தையும் அரசியலைப்புச் சட்டத்தையுமே முழுமையாக ஆதரிக்க வேண்டும்.

Dr.Anburaj said...


காஷ்மீாில் பாக்கிஸ்தானின் இசுலாமிய அரேபிய மத காடையா்கள் மீது இந்திய ராணுவம்

நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து எந்த செய்தியையும் வெளியிடாத சண்டாளன்

சுவனப்பிாியன் மட்டும்தான். இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்ற பாக் அமைச்சாின் கூற்றுக்கு கண்டனம் தொிவிக்காத குருடன் சுவனப்பிாியன்.