Followers

Thursday, June 01, 2017

நெகிழ வைத்த நிகழ்வு - 10

ஒவ்வொரு மாதமும் கடைசி வாரங்களில் வியாழக்கிழமைகளில் சகோதரர்கள் தங்கியுள்ள அறைகளுக்கே சென்று மார்க்க விளக்கங்கள் அளிப்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த வகையில் சென்ற வாரம் ஒரு இந்து மத சகோதரரின் அறைக்கு சென்றோம். 'மார்க்க விளக்கங்கள் நடத்திக் கொள்ள அனுமதி தர முடியுமா?' என்று கேட்டதற்கு உடன் அனுமதி கொடுத்தார். மற்ற நண்பர்களின் அறைகளில் நடக்கும் கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொள்வார். அருண் குமார் என்ற அந்த சகோதரரின் இறை தேடலானது எனக்குள் ஆச்சரியத்தை தந்தது.

நோன்பு என்ற தலைப்பில் சகோ மவுலவி உபைதுல்லாஹ் அவர்கள் சிறந்த சொற்பொழிவை 45 நிமிடங்கள் நிகழ்த்தினார். சொற்பொழிவு முடிந்தவுடன் விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் உள்ள தியாக துருவம் என்ற கிராமத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்காக சகோதரர்களிடம் வசூல் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே கிட்டத்தட்ட 600 ரியாலுக்கு மேல் வசூலானது. சகோ அருண்குமார் தானாகவே முன் வந்து 25 ரியால் பள்ளிவாசல் கட்டிட நிதிக்காக கொடுத்தார்.

முஸ்லிம்களை எந்நேரமும் வம்புக்கிழுக்கும் ஹெச்.ராஜா போன்றவர்களும் இந்துக்கள்தான். மார்க்க சொற்பொழிவு நடக்க இடமும் கொடுத்து பள்ளிவாசல் கட்ட நிதியும் கொடுத்த அருண்குமார் போன்றவர்களும் இந்துக்கள்தான்.

ஹெச். ராஜா இந்துத்வாவை சேர்ந்தவர். அருண் குமார் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இந்து மதம் வேறு: இந்துத்வா வேறு என்பதை இந்நிகழ்வுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.









2 comments:

A.Anburaj Anantha said...

கண்களை கலஙக வைத்த நிகழ்வுகள்

01இசுலாமிய ஆட்சி நடைபெறும் எகிப்தில் கிறிஸ்தவா்கள் ஆலயத்தில் வெடிகுண்டுதாக்குதல் நடத்தப்பட்டு 22 கிறிஸ்தவா்கள் படுகொலை செய்யப்பட்டாா்கள். குரான் படித்தவா்களின்ன சாதனை இதுதான்.
02.ஆப்கானிஸதானில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி 80 போ்கள் கொலை செய்யப்பட்டுள்ளாா்கள். 300 பேருக்கு மேல் படுகாயம். பலபோ்களில் உயிா்ஊஞசலாடும் படு பயங்கரம்.குரான் படித்து வெறி பெற்ற தலிபான்கள் -முஸ்லீம்களின் காடைத்தனம் இது.

முஹம்மது அவா்களின் போதனைகளில் ஆரம்ப கால போா்களில் அவா் சொன்ன கருத்துக்கள் தற்காலிக குணம் கொண்டவைகள் என்பதை என்று முஸ்லீம்கள் அனைவரும் உணரப் போகின்றாா்களோ அன்று பயங்கரவாதம் நின்று விடும்.

Dr.Anburaj said...

இசுலாம் என்பது அரேபியன் அரேபிய கலாச்சாரம் உலகை ஆள வேண்டும்.உலகம் அரேபிய

மயமாக்கப்பட வேண்டும் என்ற ஒற்கைக் கலாச்சாரத்தை வெறித்தனமாக பின்பற்ற வேண்டும்

என்ற கொள்கைதான் இசுலாம். அதுதான் இசுலாம் போகும் இடமெல்லாம் பிறமத

கலாச்சாரங்களை அழிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும். அதுதான்

குரானும் முஹம்மதுவும் இருக்கும் இடங்களில் இரத்தக்களறி இருந்தே தீரும்.உலக வரலாறு இதற்கு ஆதாரம். இசுலாம் என்றால் சமாதானம் என்பதெல்லாம் சாியான ஏமாற்று வேலை.பிற மத கலாச்சார மக்களை ஏமாற்றும் நயவஞ்சக நாடகம்.