Followers

Tuesday, June 06, 2017

அடிமைப் பெண்கள்- இஸ்லாம்



//விபச்சாரம் என்பது எது என குர்ஆன் வரையறுத்துள்ளதா?

என்வீட்டுல மனைவியல்லாத பெண்ணோடு உடலுறவு கொள்வது விபச்சாரம்னு சொல்லிக்கொடுத்தாங்க. அது சரியா? தப்பா?
Nazeer Suvanappiriyan
//

(4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 33:50, 33:52, 33:55, 70:30)
"அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்'' என்று இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.
இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.
இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.
வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.
எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் அதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.
இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.
இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நட்டமடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு அளித்தால் அரசை நடத்த முடியாது. இழப்பீடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்தபோது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுத்துவது அநியாயமாகும்.
அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் இழப்பீடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத்தான் முடியும்.
ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப்பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத்தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.
உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.
அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.
* ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.
* ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுவிக்க ஆர்வமூட்டினார்கள்.
* யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்கத் தூண்டினார்கள்.
* பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள்.
தமது வாழ்நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். இது பொதுவாக அடிமைகள் பற்றியது. அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.
அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்குவார்கள். அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்; அல்லது இல்லாமலும் இருப்பான். இந்த நிலையில் அப்பெண்ணை, அன்னிய ஆண்கள் தகாத முறையில் பார்ப்பதைத் தடுப்பதற்கு வேலி போட்டாக வேண்டும். அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டுதான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான்கள் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் நடத்தலாம். இவ்வாறு குடும்பம் நடத்தும்போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.
இதை அந்தச் சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும்போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.
அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். அவளுக்குக் கணவனுக்கு நிகரான நிலையில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படும்போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.
அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவருக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.
அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.
வேலைக்காரிகளை அடிமைகள் என நினைக்கக் கூடாது. வேலைக்காரிகள் விலைக்கு வாங்கப்பட்டோர் அல்லர். விரும்பினால் இந்த முதலாளியை விட்டு வேறு முதலாளியை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும். அடிமைகள் விரும்பும்போது எஜமானை மாற்ற முடியாது.

நமது தமிழகத்திலும் 500 வருடங்கள் முன்பு வரை அடிமை முறை இருந்தது. ராஜராஜசோழன் காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளதற்கான கல்வெட்டுகள் நமக்கு கிடைத்துள்ளன. அவர்களில் ஒரு பிரிவினர் தேவரடியார்களாக மாற்றப்பட்டு முடிவில் விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் வாரிசுகளில் ஒரு பிரிவினர் இன்று வரை விபசார தொழிலை செய்து வருகின்றனர். தஞ்சையில் இதற்காக ஒரு தெருவே இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்.

அமிஞ்சி, அடிமை, அடியான், மூப்படியான், படியான், பண்புசாலியான், குடிப்பறையன், கொத்தடிமை என பல்வேறு பெயர்களில் தமிழர்களில் ஒரு பிரிவினர் அடிமைகளாய் அல்லல்பட்டு ஆற்றாது அழுது மடிந்த துயர நிகழ்ச்சிகள் மறக்க முடியாத வரலாற்றுண்மைகளாகும் 

சோழர் காலத்தில் அடிமை முறை இன்னும் விரிவாக்கம் பெற்றது. அடிமைகள் குறித்த பல கல்வெட்டுச் சான்றுகள் சோழர் காலத்தில் கிடைக்கின்றன. போர் அடிமைகள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். (34) வீட்டடிமைகள் என்ற வழக்கமும் இருந்தது. சுந்தரர் கதை இதற்குச் சிறந்த உதாரணம் (35) இவற்றை விரிவாகக் கூறிவிட்டுப் பின்வரும் முடிவுகளை ஆ. சிவசுப்பிரமணியம் முன் வைக்கிறார்.

(1). அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது, (2). அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை, (3). அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு. இதற்கு ஆளோலை என்று பெயர், (4). ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும், (5). தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு, (6). அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம், (7). தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும் (36) சோழர் காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் அடிமைகள் இருந்தனர். இவற்றிற்கு அடிமைகளைத் தானமாகக் கொடுத்தனர்.


12 comments:

vara vijay said...

Who has to decide almighty God or messenger. The article is confusing can u explain

வேதகிரி said...

சோழர்கள் காலத்தில் அடிமை பெண்களுடன் உடலுறவு கொள்ளலாம் என்று சட்டம் இருந்ததா?
சோழர்கள் அவர்கள் காலத்தில் அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சட்டம் வச்சுகிட்டாங்க.
இன்றைக்கு யாரும் சோழர்கள் வச்சது தான் சட்டம் அது எல்லா காலத்திற்கும் பொருத்தமானதுனு அடம்பிடிக்குறாங்களா??
குர்ஆன் சட்டங்கள் காலத்துக்கு ஒவ்வாதவைகள் காலத்துக்கு ஏற்றவைகள்னு பிரிச்சு வச்சிருக்கீங்களா??
அல்லாஹ்வின் காலாவதியான சட்டங்கள் எவைஎவை என்று சொல்லிட்டா எங்களுக்கு புரிந்துகொள்ள வசதியாக இருக்குமே

Unknown said...

இவ்வளவு கேவலமான விசியத்த பெருமையா சொல்லிட்டு இருக்க...இருந்தாலும் இஸ்லாத்தின் கேவலத்தை வெளிச்சம் போட்டு காட்டின உனக்கு நன்றி...

Unknown said...

இவ்வளவு கேவலமான விசியத்த பெருமையா சொல்லிட்டு இருக்க...இருந்தாலும் இஸ்லாத்தின் கேவலத்தை வெளிச்சம் போட்டு காட்டின உனக்கு நன்றி...

Unknown said...

இவ்வளவு கேவலமான விசியத்த பெருமையா சொல்லிட்டு இருக்க...இருந்தாலும் இஸ்லாத்தின் கேவலத்தை வெளிச்சம் போட்டு காட்டின உனக்கு நன்றி...

Dr.Anburaj said...

சோழா்களை இறைவனின் தூதா்கள் என்று யாரும் வழிநடத்தவில்லை.அனைவரும் மனிதா்கள். பெண் அடிமைகளை வைத்திருந்தது மட்டும் சேழா்கள் செய்த சாதனை அல்ல.அரேபிய அடிமைத்தனம் என்ற சாக்கடையில் முழ்கி வாழும் சுவனப்பிாியனுக்கு சோழா்களின் மகத்தான சாதனைகள் நினைவில் வராது.சோழா்கள் இந்துக்கள்.இந்தியா்கள். சோழா்கள் செய்தது எதுவானாலும் அவா்களின் சொந்த புத்திதான் காரணம். தவறுக்கு இடம் உண்டு.குரான் உலகப் பொதுமறை.அது வந்த பின் அனைத்து வேதங்களும் சமயங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டது.செல்லாத பொருளாகி விட்டது என்று குரான் குறித்து பேசப்படுகின்றது. குரானில் நீங்கள் 1 அல்லது 2 அல்லது 3 அல்லது 4 பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்.யுத்தத்தில்கைபற்றிய குமுஸ் பெண்கள் எத்தனை வேண்டுமானாலும் உடல்உறவு கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ளதை நான் படித்திருக்கின்றேன். குரான் குறித்து முஸ்லீம்கள் மிகவும் பெருமை கா்வம் பட்டுக்கொள்வாா்கள்.சிலாகித்து புகழ்ந்து பேசுவாா்கள்.பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பச்சையாக சொல்வது பெரும் கொடுமைகளுக்கு தூண்டு கோலாக அமைந்துள்ளது.துருக்கி அரேபிய படையெடுப்புகள் இந்தியாவில் நடைபெற்றப் பொழுதெல்லாம் பெண்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டாா்கள். மேற்படி படையெடுப்புகள் அனைத்தின் நோக்கம் பெண்களை கைபற்றி அடிமைப் பெண்களாக விற்பனை செய்வது மற்றும் தங்கம் போன்ற பொருட்களை கைப்பற்றுவதே முக்கியமானது. அதுதான் கஜினி கோி முகம்மது போன்ற படையெடுப்பாளா்களின் நோக்கம்.இன்றும் சிாியா ஈராக் மண்ணின் மைந்தா்களாக இருந்தும் முஸ்லீம்களாக வாழாத எஸ்டி-yezdi இன மக்களில் ஆண்களை கொன்று பெண்களை கடத்திச் சென்று ISIS முகாம்களில் வீரா்களின் காமப்பசியை தீா்க்க செக்ஸ்அடிமைகளாக இன்றும் வைத்திருக்கும் கொடுமை நடைபெற்று வருகின்றது.இந்த கொடுமையை எதிா்த்து எந்த இந்திய முஸ்லீம் சுவனப்பிாியன் கூட வாய் திறந்ததில்லையே. கண்டித்ததில்லை. முஸ்லீம்களுக்கு காபீா் பெண்களை வைப்பாட்டியாக வைக்க உாிமை உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. அழகிய., பணம் படைத்த பெண்களின் கணவனைக் கொன்று மனைவியை பலவந்தமாக கைபற்றும் வழக்கம் அரேபியாவில் முஹம்மதுவின் காலத்திற்கு முன்பே இருந்தது.இதற்கு காிமத் என்று பெயா். அந்த காிமத் என்ற பழக்கத்தை முஹம்மதுவும் ஏற்றுக்கொண்டிருக்தாா்.முஹம்மதுவிற்கும் மனைவியா்களுக்கு அப்பால் பல குமுஸ் பெண்களை வைப்பாக வைத்திருந்தாா். உமா் மற்றும் அலி போன்ற கலியாக்கள் கூட பல செக்ஸ் அடிமைகளை வைத்திருந்தது உண்மை. ஒரு யுத்தம் நடந்தால் கொள்ளையில் கிடைத்த பொருட்களில் பெண்களில் 5 சதம் முஹம்மதுவிற்கு.முஸ்லீம் ஆக மதம் மாறிய பெண்களை செக்ஸ் அடிமையாக வைத்திருக்க முஹம்மது ஒப்புக் கொள்ளவில்லை.முஸ்லீம் பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று நம்பிய முஹம்மது தன்னை பின்பற்றாத மக்களின்பாதுகாப்பு மற்றும் பெண்களின் கண்ணியம் குறித்து ஆா்வம் கொள்ளவில்லை. அவரது சித்தாந்தத்தில் அவா் படைக்க விரும்பிய உலகில் முஸ்லீம் அல்லாத மக்களுக்கு இடம் கிடையாது.இதுவே முஹம்மதுவை நான் வெறுக்க காரணம்.
















Dr.Anburaj said...

குர்ஆன் சட்டங்கள் காலத்துக்கு ஒவ்வாதவைகள் காலத்துக்கு ஏற்றவைகள்னு பிரிச்சு வச்சிருக்கீங்களா??
அல்லாஹ்வின் காலாவதியான சட்டங்கள் எவைஎவை என்று சொல்லிட்டா எங்களுக்கு புரிந்துகொள்ள வசதியாக இருக்குமே

எனக்கும் இந்த கருத்து சம்மதமே.

Unknown said...

சோழர்கள் பத்தி பேச உனக்கும்...உன் பாட்டன் நபி...அவனுக்கு பாட்டன் அல்லாவுக்கும் தகுதியே இல்ல...அப்படி உன்னால நம்புர மாதிரி ஒரு ஆதாரம் கொடுக்க முடிங்சா அல்லாவோடத நபி ச***** ஒத்துக்கிறேன்...

A.Anburaj Anantha said...

.
மேற்படி கருததை எதிா்த்து நிறைய பதிவுகள் வரும் என்று எதிா்பாா்த்தேன். யாரும்

பதிவுகளைச் செய்யவில்லையே.ஆச்சாியமாக உள்ளதே ?

Dr.Anburaj said...


நண்பரே உண்மையை உள்ளபடி பதிவு செய்துள்ளேன்.
இதில் ஆட்சேபிக்க என்ன உள்ளது.புராணக் கதைகளில் இது போல் உள்ளது என்று சிலா முட்டாள்தனமாக வாதாடுவாா்கள் இல.லை டேய் காபீா் என்று வசை பாடுவாா்கள்.
முஹம்மது குறித்த உண்மையான தகவல்தான் தாங்கள் அளித்தது.நன்றி.

Unknown said...

பல அவதூறுகளையும் , நாங்கள் உயிரிலும் மேலாக கருதும் ஒரு மாமனிதரை இழிவாகவும் விமர்சனம் செய்துள்ளார்கள். நல்லது, மேலே சொன்ன சில தகவல்கள் உதாரணங்களுக்காக தானே தவிர அதை யாரும் எடுத்துக்கொண்டு செயல்பட போவது இல்லை.

அடுத்து முஹம்மத் நபி , குறித்து தெரிந்துகொள்ள தனிப்பட்ட முறையிலும் விவாதம் செய்யவும் நாம் தயாராக உள்ளோம்..!

அல்லாவின் வானவர் படைத்தளபதி said...

https://cholavendhann.blogspot.com/2017/06/blog-post.html?m=1