Followers

Monday, August 10, 2015

டாக்டர் ருவேதா சலாம் முதல் பெண் ஐபிஎஸ் காஷ்மீரிலிருந்து!



காஷ்மீர் பள்ளத்தாக்கின் குப்வாரா என்ற குக்கிராமத்தில் பிறந்து பல போராட்டங்களுக்குப் பிறகு காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் ஆபீஸராக பொறுப்பேற்றுள்ளார் டாக்டர் ருவேதா சலாம்! ருவேதா சலாம் ஒரு மருத்துவரும் கூட. ஸ்ரீநகர் மெடிக்கல் காலேஜில் மருத்துவ படிப்பு படித்து மருத்துவராகவும் உள்ளார். 2013 ல் யுபிஎஸ்எஸி தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்வு பெற்றார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தரப் பட்டியலில் 878 ஆவது இடத்தில் உள்ளார் டாக்டர் ருவேதா சலாம்.

Assistant Commissioner of Police (ACP) ஆக நமது சென்னையில் பொறுப்பேற்றுள்ளார் ருவேதா சலாம். இது பற்றி அவர் கூறும்போது 'இள வயதில் ஏசிபியாக பணியாற்றுவது என்பது மிகவும் சிக்கலான வேலை. சென்னை வாழ் மக்கள் காவல்துறைக்கு மிகவும் மதிப்பளிக்கக் கூடியவர்கள். அவ்வாறான இடத்தில் நான் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது' என்கிறார்.

இந்த சகோதரியைப் போல் பல துறைகளிலும் நமது பெண்கள் பரிணமிக்க ஊக்கமளிப்போம்.

No comments: