
"மாநிலங்களின் ஒத்துழைப்பால் எல்லா பள்ளிகளிலும் கழிப்பறை அமைக்கும் திட்டம் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவேறியுள்ளது." என்று வழக்கமான பல பொய் தகவல்களோடு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை நேற்று டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது. மோடியின் பின்னால் கம்பீரமாக இஸ்லாமிய கட்டட கலை மற்றும் மொகலாயர்களின் நினைவுச் சின்னங்களும் உலகுக்கு இந்தியாவில் முஸ்லிம்களின் பங்களிப்பை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை முற்றாக ஒழிப்பதையே சங் பரிவாரங்கள் தங்கள் கொள்கைகளாக கொண்டுள்ளன. ஆனால் சுதந்திர தின உரையிலும் இஸ்லாத்தை அவர்களால் புறந் தள்ள முடியவில்லை.
எனது நாடு இன மொழி மத சாதி மோதல்கள் அற்ற சிறந்த தேசமாக மிளிர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment