Followers

Sunday, August 02, 2015

இராஜகிரி தவ்ஹீத் பள்ளியில் ஒரு அழகிய பயான்!



சில நாட்களுக்கு முன்பு தவ்ஹீத் ஜமாத் ராஜகிரி கிளையில் ஜூம்ஆ தொழுகைக்கு சென்றிருந்தேன். குத்பா பிரசங்கத்துக்கு வாரம் ஒரு புது முகங்கள் வருகை புரிவர். இந்த வாரம் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனையொத்த தோற்றத்தோடு ஒரு சகோதரர் பயான் செய்ய வந்திருந்தார். வழக்கமாக நாம் நீண்ட தலைப்பாகை, நீண்ட ஜிப்பா, நீண்ட தாடி போன்ற தோற்றத்தோடு மார்க்க அறிஞர்களை பார்த்து பழக்கப்பட்டுள்ளோம். நமக்கு இந்த வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தது புதிதாக பள்ளிக்கு வருபவருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். இந்த சிறு வயதில் என்ன பேசப் போகிறாரோ என்று அலட்சியமாக அமர்ந்திருந்தேன். பேச ஆரம்பித்தவுடன்.... ஆஹா.... அருவிபோல சரளமாக அவரது பேச்சு சென்று கொண்டிருந்தது. 'ரமலானில் நாம் பெற்ற படிப்பினைகள்' என்ற தலைப்பில் அழகிய முறையில் முக்கால் மணி நேரம் மிகச் சிறந்த உரையை இந்த சகோதரர் நடத்தி முடித்தார்.


தமிழகத்தில் பள்ளி வாசல்களின் பெரும்பாலான ஜூம்ஆ உரைகளில் மக்கள் தூங்கி வழிவதைத்தான் பார்த்து வருகிறோம். குர்ஆனையும் ஹதீஸையும் வெள்ளி மேடைகளில் மக்களுக்கு சொல்லாமல் இமாம்கள் தங்களின் சொந்தக் கருத்துக்களை மத்ஹப் கிதாபுகளின் கருத்துக்களை வலிந்து திணிப்பதாலேயே இந்த நிலை. இனி வருங்காலங்களிலாவது வெள்ளி மேடைகள் குர்ஆனையும் நபி மொழிகளையும் போதிக்கட்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை சீராக்கும் வகையில் அமையட்டும்.

No comments: