Followers

Friday, November 27, 2015

நான் ஏன் இணையத்துக்குள் நுழைந்தேன்?



சில வருடங்களுக்கு முன்பு 10 அல்லது 15 நிமிடம் தின மலரில் முக்கிய செய்திகளை படித்து விட்டு வேறு வேலைகளின் பக்கம் சென்று விடுவேன். அப்போது நேசகுமார் என்ற இந்துத்வவாதி இஸ்லாத்தைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு பதில் சொல்ல அன்று ஒரு சில இஸ்லாமிய பதிவர்களே இருந்தனர். இஸ்லாத்தின் மீதான தாக்குதலுக்கு நாமும் களத்தில் இறங்கினால் என்ன? என்ற எண்ணம் வரவே எனது ஓய்வு நேரத்தை இந்துத்வாவாதிகளுக்கு பதில் கொடுப்பதற்காக மாற்றிக் கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு நேசகுமாரே தனது பக்கத்தில் 'இஸ்லாத்தை குறை காண போய் என்னை சிறுக சிறுக இஸ்லாம் ஆட்கொள்கிறது' என்று தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். அதன் பிறகு அவர் எழுதுவதையும் விட்டு விட்டார். ஒருகால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை.

அதன் பிறகு கால்கரி சிவா, ம்யூஸ், ஜெயராமன், கோவி கண்ணன், டோண்டு ராகவன், என்று ஒரு பட்டாளமே எனக்கு எதிராக கிளம்பியது. தமிழ் மணத்தில் நான் பதிவு போட்டால் மைனஸ் ஓட் குத்த தயாராக காத்திருப்பர். எனது பழைய பதிவுகளை படித்தால் இந்த விபரங்கள் எல்லாம் கிடைக்கும். இது பற்றி நான் அன்று வரைந்த கார்ட்டூனைத்தான் மேலே பார்கிறீர்கள்.

அன்று ஆரம்பித்த பயணம் இன்று வரை தொடர்கிறது. இதுவரை ப்ளாக்கரில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 867753. பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் 16117. இதுவரை நான் எழுதிய பதிவுகள் 2668. ப்ளாக்கரில் எனது ஃபாலோயர்கள் 387.

சென்ற இரண்டு வருடங்களாகத்தான் எழுதிய பதிவுகளை முகநூலிலும் பதிந்து வருகிறேன். தற்போது முக நூலில் 4900 நண்பர்களை பெற்றுள்ளேன். இலக்கை தொடுவதற்கு இன்னும் 100 தான் பாக்கி. பல பதிவுகள் முக நூலில் 1000 ஷேர்களையும் தாண்டி சென்றுள்ளது. இதனால் மேலும் மேலும் எழுத ஆர்வம் ஏற்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு தமிழகத்தில் அவர்களின் செய்திகள் மாற்றாரையும் அடைய ஊடுக வசதி இல்லாதது பெருங்குறை. அந்த குறையை இணையம் பூர்த்தியாக்குகிறது என்றே சொல்வேன்.

இன்று போல் என்றுமே இணையத்தில் எழுத வாய்ப்பும் வசதிகளும் கிடைத்து பூரண உடல் நலத்துடனும் இருக்க உங்கள் பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! நம்பிக்கை கொண்டவர்களே!! பிரார்த்தனை செய்யுங்கள்; "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட எங்களால் தாங்க முடியாத சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; ஏக இறைவனை மறுக்கும் கூட்டத்தாரின் மீது நாங்கள் வெற்றியடைய எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286).

13 comments:

mohamedali jinnah said...

அல்லாஹ் தங்களுக்கு நிறைவான உடல்நலத்தினை தந்து தங்கள் சேவையை தொடரச்செய்வானாக ஆமீன்

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தொடர்ந்து எழுதுங்க அண்ணன். அல்லாஹ் அதற்கான உடல்வலிமையையும், ஞானத்தையும் தந்தருள்வானாக...ஆமீன்

Dr.Anburaj said...

சாிதான் போங்கள். ஆனால் தங்களது போரை நடத்தத் தொியாமல் முட்டாள்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீா்கள். இறையில்லா இஸ்லாம் செங்கொடி போன்ற இணையங்களில் உள்ள கட்டுரைகளுக்கு மறுப்பு எழுத த்ங்களுக்கு வக்கில்லையே ஏன் ? ஏன்
இயலாது என்று ஒப்புக் கொள்ளவும் தைாியம் கிடையாது தங்களுக்கு சாியான பைத்தியமாக என்னவோ எழுதிக் கொண்டிருக்கின்றீாகள்.வாஹாபி அரேபிய காடையா்கள் தங்களுக்கு பணம் கொடுத்து உதவலாம். அதற்கான ஏதோ தங்களால் ஆன தொண்டு.

ASHAK SJ said...

நான் முதலில் சொன்னது போல் செங்கொடி ஹிந்து மதத்தை கழுவி கழுவி ஊற்றுவதை ஒப்புகொள்கிரீரா? மேலும் இறையில்லா இஸ்லாத்தில் விவாதிக்கபடுவதிர்க்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை

suvanappiriyan said...

//அல்லாஹ் தங்களுக்கு நிறைவான உடல்நலத்தினை தந்து தங்கள் சேவையை தொடரச்செய்வானாக ஆமீன்//

நன்றி பாய்! தாங்கள் நலமா? அனைவரக்கும் சலாம் சொன்னதாக சொல்லுங்கள்.

suvanappiriyan said...

//அஸ்ஸலாமு அலைக்கும்,

தொடர்ந்து எழுதுங்க அண்ணன். அல்லாஹ் அதற்கான உடல்வலிமையையும், ஞானத்தையும் தந்தருள்வானாக...ஆமீன்//

வஅலைக்கும் சலாம்!

நன்றி சகோ ஆஷிக்!

suvanappiriyan said...

Anburaj!

//இறையில்லா இஸ்லாம் செங்கொடி போன்ற இணையங்களில் உள்ள கட்டுரைகளுக்கு மறுப்பு எழுத த்ங்களுக்கு வக்கில்லையே ஏன் ? ஏன்
இயலாது என்று ஒப்புக் கொள்ளவும் தைாியம் கிடையாது//

செங்கொடி கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக விளக்கம் அளித்தாகிவிட்டது. நேரடி விவாதத்திற்கும் பலரும் அழைத்தும் அவர்தான் ஓடி ஒளிகிறார்.

//வாஹாபி அரேபிய காடையா்கள் தங்களுக்கு பணம் கொடுத்து உதவலாம். அதற்கான ஏதோ தங்களால் ஆன தொண்டு.//

இணையத்தில் எழுத எனக்கு எவரும் பண உதவி செய்யவில்லை. இறைவனின் அன்பை பெற வேண்டியே எழதி வருகிறேன்.

நல்ல கம்பெனியில் போதுமான சம்பளத்தோடு வேலை செய்து வரகிறேன். ஓய்வு நேரங்களில்தான் இணையம்.

suvanappiriyan said...

//நான் முதலில் சொன்னது போல் செங்கொடி ஹிந்து மதத்தை கழுவி கழுவி ஊற்றுவதை ஒப்புகொள்கிரீரா? மேலும் இறையில்லா இஸ்லாத்தில் விவாதிக்கபடுவதிர்க்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை//

இந்துத்வா போதை அவர் கண்ணை மறைக்கிறது.. விட்டுத் தள்ளுங்கள்.. bro ashak...

ASHAK SJ said...

என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாம் , இஸ்லாம் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்கிறது , ஆனால் அவதூறு கூடாது , அன்புராஜ் போன்றோரின் பிழைப்பு அவதூறை கொண்டே ஓடுகிறது , தமிழ்ஹிந்து என்று ஒரு வீணாப்போன blogspot உண்டு அதில் நான் இடும் comment ஐ புறக்கணிப்பார்கள் ஆனால் நீங்களோ அன்புராஜ் மிககேவலமாக (அவரைப்போலவே) எழுதினாலும் பிரசுரிக்கிரீர் இதுதான் அந்த மூடர்களுக்கும் நமக்கும் வித்யாசம்

Dr.Anburaj said...

பொதுவாக முட்டாத் துலுக்கனும் முரட்டு நாயக்கனும் என்ற பழமொழி தமழ்நாட்டில் உண்டு.கேள்விபட்டிருப்பீா்கள்.முட்டாள்தனமாக குதா்க்கதனமான கேள்விகளைத்தொனே தாங்கள் எழுதுகின்றீா்கள். காபாவில் உள்ள அஸவ்த் என்றால் என்ன என்று கேட்டேனே பதில் சொன்னீா்களா ? பொடிப்பயல் ஆசீக் க்கு வடிந்து வடிந்து பதிலளிக்கின்றீா்களே.

குருடும் குருடும் குருடாட்டம் போடுவது அருமை.

ASHAK SJ said...

முட்டாள் துலுக்கன் என்பது உண்மைதான் ஏனென்றால்
1. கல்லை கடவுள் என்று ஒத்துகொள்ள மாட்டான்
2. மூத்திரம் விட்டால் சுத்தபடுத்துவான்
3. எல்லா மனிதர்களையும் சமமாக எண்ணுவான் , ஒரு குறிப்பிட்ட சாராரை வேசிமகன் என்று அழைக்க மாட்டான்
4. பெண்களை போக பெருளாக எண்ணாமல் கண்ணியப்படுத்துவான் (சதி என்று உயிரோடு எரிப்பது , மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு தூர இருக்க வைப்பது , விதவையை கண்டால் போற காரியம் உருப்புடாது என்று சொல்வது)
5. படித்தால் காதில் ஈயத்தை காட்சி என்று சொல்லாமல் எல்லோரையும் படிக்க வேண்டும் என்று சொல்வது
6. முக்கியமாக பார்ப்பன அடிமைகள் செய்வதை எதிர்ப்பது ,
இன்னும் நிறைய இருக்கு

ASHAK SJ said...

மூடனே நன்றாக கேட்டுக்கொள் , அஸ்வத் என்றால் கருப்பு ஹஜ்ருல் என்றால் கல் , கருப்பு கல் அது காபா என்ற கட்டடத்தின் தென் கிழக்கு மூலையில் பாதிக்கப்பட்டுள்ளது , காபாவை 7 முறை வலம் வரும் போது முத்தமிட்டோ , தொட்டோ , அல்லது சைகை செய்தோ வளத்தை தொடங்க வேண்டும் , எது முடியுமோ அதை செய்ய வேண்டும்

Fake islamic things and ideologies said...

சிரிப்புக்காட்டாதீங்க அண்ணாச்சி...
என்னை இஸ்லாம் பற்றி எழுத வச்சது நீங்கதான்..

மின்னிக்கு தேதிக்கு தாவா தாதாக்கள் எல்லாம்.. என் பதிவை பார்க்காதமாதிரியே போவதுதான் நிகழ்நிலை..