Followers

Sunday, January 12, 2014

இறப்பு ஒன்றுதான் நிரந்தர சுகம்! - திருவருட்பா

உலகில் இருக்கும் காலமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் துன்பம் நம்மை வந்தடைகிறது. இன்பமும் வந்தடைகிறது. சில ஆண்டுகளில் இந்த உயிர் பிரிந்து மற்றுமொரு உலகத்துக்கு நாம் செல்லும் போதுதான் இந்த இன்ப துன்பமற்ற நிலையை நாம் அடைய முடியும் என்று பல சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் இறப்புக்கு பிறகுதான் ஒருவனின் உண்மையான நிரந்தர வாழ்க்கையே ஆரம்பிக்கிறது என்கிறது இஸ்லாம்.

பத்ரகிரியார் இறப்பின் சுகத்தைப் பற்றி பாடும் போது....

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்

என்று முடிக்கிறார். அந்த இறப்பு என்பது தூக்கத்தைப் போன்றதுதான். அதாவது நிரந்தர தூக்கம். அந்த தூக்கமானது தூங்காமல் தூங்கிய நிலையை அடைகிறது. தூங்குவது போல் நமக்கு தோற்றம் அளித்தாலும் உண்மையில் அந்த மனிதனின் உயிர் இறைவன் வசத்தில் என்றும் உயிர்ப்புடனே இருக்கும் என்று இந்த பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது.

இதே கருத்தை வள்ளலார் திருவருட்பாவில் பாடும் போது

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

சீர் பிரித்த பின்

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் என் கோவே - துன்று மல
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்

பொருள்:

இன்று வருமோ = இன்று வருமோ

நாளைக்கே வருமோ = நாளைக்கே வருமோ

அல்லது = அல்லது

மற்று என்று வருமோ அறியேன் = அது என்று வருமோ, நான் அறியேன்

என் கோவே = என் தலைவனே

துன்று மல வெம் மாயை அற்று = காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி

வெளிக்குள் வெளி கடந்து = வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதை தாண்டி

சும்மா இருக்கும் சுகம் = சும்மா இருக்கும் சுகம்

இறப்பு என்பது இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது அது என்று வருமோ, நான் அறியேன்: என் தலைவனே! காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதையும் தாண்டி உன்னை அடைந்து எந்த கவலையும் இல்லாமல் சும்மா இருக்கும் அந்த நாளே எனக்கு சுகமளிக்கும் நாள்.

வள்ளலார் விரும்பும் இத்தகைய நிலை வாழும் நாளில் மனித உயிர்களுக்கு தீங்கிழைக்காமல் இறைவன் சொன்னபடி அவனை வணங்கி வாழ்ந்து இறந்த நல்லவர்களுக்கே கிடைக்கும். அநியாய உயிர்க் கொலைகள் செய்து இறைவன் சொன்ன கட்டளைகளை மீறிய தீயவர்களுக்கு இந்த உலகை விட மிகப் பெரிய தண்டனை காத்துக் கொண்டிருப்பதாக அதே இறைவன் கூறுகிறான்.

'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. கேள்விகள் கேட்கப்படும் அந்த தீர்ப்பு நாளில் இறைவன் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'

'அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தை சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது'

-குர்ஆன் 2:174,175


'நம்பிக்கை கொண்டேரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால் மட்டுமே உள்ளங்கள் அமைதியுறுகின்றன'

-குர்ஆன் 13:28


"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"

-குர்ஆன் 5:32


இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..


4 comments:

Anonymous said...

சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும், கடந்த ஓர் ஆண்டாக, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் நிறைவு விழா, மத்திய கலாசார அமைச்சகம் சார்பில், டில்லியில், நேற்று நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

தற்போது, நாடு முழுவதும், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவை, சிறப்பாக கொண்டாடி வருகிறோம். ஆனால், மக்களுக்கு, அவர் போதித்த கருத்துக்களை பின்பற்றாமல், அவரின் பிறந்த நாளை கொண்டாடுவதில், எந்த அர்த்தமும் இல்லை.எந்த ஒரு மதமும், மற்றவர்களை வெறுத்து ஒதுக்கச் சொல்லவில்லை. இதைத் தான், சுவாமி விவேகானந்தர், 'மற்றவர்களை புண்படுத்துவது, உண்மையான மதம் அல்ல' என்றார்.நம் நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்த உலகத்துக்கே பொருந்தக் கூடிய, பல்வேறு போதனைகளை அவர் கூறியுள்ளார். அனைவரின் நம்பிக்கைக்கும், சகிப்பு தன்மைக்கும், பரஸ்பரம் மதிப்பு அளிப்பதே, உண்மையான மதம்.'பிரிவினைவாதிகள், மத வெறியர்கள், மூட நம்பிக்கை உடையவர்கள், இந்த பூமியில் உள்ளனர். இவர்கள் தான், இந்த பூமியில், வன்முறைக்கு காரணமானவர்கள். ஒட்டு மொத்த நாகரிகத்தையும், சமுதாயத்தையும் சீர்குலைப்பது, இவர்கள் தான்' என, சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். அவரின் கருத்துக்களை, போதனைகளை, நாம் பின்பற்றுவதுடன், உலகம் முழுவதற்கும், அந்த கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும். அவர், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சொந்தக்காரர். அவருக்கு உலகம் முழுவதும், சீடர்கள் உள்ளனர்.மதத்தின் மீது உண்மையான பற்று வைத்துள்ளவர்கள், எந்தவித மோதலிலும், ஈடுபட மாட்டார்கள் என்றும், அனைத்து மதங்களின் ஆன்மா ஒன்று தான் என்றும், சுவாமிஜி கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கள், என்னை, மிகவும் கவர்ந்தவை.இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்.

வவ்வால் said...

திரு.சு.பி.சுவாமிகள்,

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!


#சமரசமான கருத்துக்களாக சொல்லி இருக்கீங்ககைப்புரிதல் அனைவருக்கும் தேவை!

suvanappiriyan said...

திரு வவ்வால்!

உங்களுக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Anonymous said...

//அனைவரின் நம்பிக்கைக்கும், சகிப்பு தன்மைக்கும், பரஸ்பரம் மதிப்பு அளிப்பதே, உண்மையான மதம்.'பிரிவினைவாதிகள், மத வெறியர்கள், மூட நம்பிக்கை உடையவர்கள், இந்த பூமியில் உள்ளனர். இவர்கள் தான், இந்த பூமியில், வன்முறைக்கு காரணமானவர்கள். ஒட்டு மொத்த நாகரிகத்தையும், சமுதாயத்தையும் சீர்குலைப்பது, இவர்கள் தான்' என, சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்//

தான் சிறந்த ஞானி என்பதை விவேகானந்தர் நிருபித்து உள்ளார். இதில் கூறப்பட்டு உள்ள அனைத்துமே அப்படியே முஸ்லிம்களுக்கே பொருந்தும். எந்த மதத்தையும் இவர்கள் சகித்து கொள்ள மாட்டார்கள், அவர்கள் இருக்கும் இடங்களில் தங்கள் மதத்தை பரப்பும் முயற்சிகளில் முழு மூச்சாக ஈடுபடுவார்கள், பிற நாடுகளில் பிழைக்க போவார்கள், பன்றி கூட்டம் போல தங்கள் இனத்தை அங்கே பெருக்கி கொண்ட பிறகு, அங்கே இஸ்லாமிய ஆட்சி கொண்டுவா, ஷரியா கொண்டு வா, அல்லது நாட்டை பிரித்து கொடு என்று பிரிவினை வாதம் செய்வார்கள். மனிதனின் கழுத்தை அறுத்து கொலை செய்யும்போது கூட 'அல்லாஹு அக்பர்' என்று அதை தங்கள் மத தலைவருக்கு சமர்ப்பணம் செய்வார்கள். அந்த அளவு மதவெறி அவர்களை ஆட்கொண்டு உள்ளது. மேலும் இன்று உலகில் படிப்பறிவில் பின் தங்கி இருப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமே, எனவே உலகில் அதிக மூடர்கள் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள். மூடன் மட்டுமே தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பான், அது போல இவர்கள் 'முஸ்லிம்கள் மட்டுமே இங்கே கடவுளின் பிள்ளைகள், மற்றவர்கள் காபிர்கள், வழி தவறியவர்கள் என்பார்கள். குரான் மற்றும் ஹதீஸ் என்ற புத்தகங்களுக்கு உள்ளேயே இவர்களது மூளை அடகு வைக்கப்பட்டு விடும், அதை தாண்டி அவர்கள் சிந்திப்பது இல்லை, அப்படியே அவர்கள் சிந்தித்தாலும் ஒரே வரியில் சொல்வார்கள் "இந்த அறிவியல் எல்லாம் குரான்ல இருக்கு".


இன்று உலக நாடுகளின் நாகரிகங்களையும், சமூக அமைப்புகளையும் சீர் குலைத்து அங்கே அரபு கலாச்சாரத்தையும், மதத்தையும் பரப்புவதை எல்லா நாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் செவ்வனே செய்து வருகிறார்கள். எனவே உலகில் வெறுத்து ஒடுக்கப்பட வேண்டிய ஒரு இனம் உண்டென்றால் இவர்கள் மட்டுமே.


இவர்கள் மற்ற நாடுகளில் மதத்தை பரப்புவார்கள், பிற கலாச்சாரங்களை அழிப்பார்கள், ஆனால் தங்கள் மதம், கலாச்சாரத்தை மட்டுமே போற்றி பாதுகாப்பார்கள்.

ஆனால் தங்களை உத்தமர்களாக காட்டி கொள்ள பிற மதங்களை மதிப்பதாகவும், கலாச்சாரங்களை மதிப்பதாகவும் கூறி கொள்வார்கள்.


இந்துக்கள் தயவு செய்து சக இந்துக்களை தீண்டாமை பெயரால் ஒதுக்காதீர்கள். நீங்கள் தீண்டாமை காட்ட வேண்டியது இந்த ஈன முஸ்லிம்களிடம் மட்டுமே. உதட்டளவில் தான் இவர்கள் பிற மதத்தவருக்கு நண்பர்கள், இவர்கள் மத கூற்றுப்படி மற்ற மதத்தவர்கள் இவர்களுக்கு காபிர்கள். உங்கள் மதத்தை, நம்பிக்கையை மதிக்காத, நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டை மதிக்காமல் அரபியனுக்கு கொடி பிடிக்கும் இவர்களை மானமுள்ள எவனும் நண்பர்களாக ஏற்று கொள்ள மாட்டான், அவர்கள் பிற மதத்தவருடன் நட்பு பாராட்டுவது வேஷமே.