Followers

Friday, January 10, 2014

ஜாகிர் நாயக் மறுபடியும் ரியாத் வருகை!





நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

இறைவன் நாடினால் எதிர்வரும் 30ம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவு சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற உள்ளது.

சகோதர சகோதரிகள் தவறாமல் கலந்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

முஸ்லிம் அல்லாத நண்பர்களையும் உடன் அழைத்து வரவும்.

இடம்: மன்னர் ஃபகத் கலாச்சார மையம்,ரியாத்,

நாள்: 30/01/2014 வியாழக்கிழமை

வரைபடம் இணைப்பில் உள்ளது.

9 comments:

suvanappiriyan said...

//அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்களின் குழந்தைகளும், அந்தப்புரத்திற்குப் பிடித்துச் செல்லப்பட்ட ஹிந்துப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளும் முஸ்லிம்களாக வளர்க்கப்பட்டார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம்களின் தொகை இந்தியாவில் பல்கிப் பெருகியது என்பது ஒரு சரியான கூற்றாகும்.//

கிறித்தவரகளும், இந்துக்களும் இஸ்லாமியரோடு அண்ணன் தம்பிகளாக பழகி வருவதை பொறுக்காது கற்பனையில் எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாமல் பொய்களை பிரசுரித்திருக்கிறீர்கள். மனு தர்மத்தை கொண்டு வர துடிக்கும் உங்கள் எண்ணம் பலிக்காது. இந்துக்களும், கிறித்தவர்களும் உண்மை வரலாறுகளை தெரிந்தே வைத்துள்ளனர்.

மலேசியா பெரும்பான்மை முஸ்லிம்களை கொண்ட ஒரு நாடு. அங்கு இந்துக்கள் அனைத்து சுதந்திரங்களையும் பெற்று சந்தோஷமாக உள்ளனர். இதை நேரிலேயே நான் பார்த்தேன். எனவே இந்தியாவில் இஸ்லாம் பெரும்பான்மை ஆகி விட்டால் இந்துக்களுக்கு ஆபத்து என்பது வடி கட்டிய பொய்.

முன்பு வாள் முனையில் மதம் மாறினால் இன்று தங்களின் தாய் மதம் திரும்ப வேண்டியதுதானே! யார் தடுத்தது? இதற்கு உங்களிடம் பதிலில்லை. :-)

நமது காலத்தில் திலீபனாக இருந்து மாறிய ஏ ஆர் ரஹ்மானிடம் சென்று தாய் மதம் திரும்பி விடுங்கள் என்று கோரிக்கை வைத்து பாருங்களேன். அவர் சரியான பதில் கொடுப்பார்.

Anonymous said...

இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள், குறிப்பாக பாகிஸ்தான், நைஜீரியா, இந்தோனேஷியா, சவூதி அரேபியா, சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் படும் வேதனைகளைச் சொல்லி மாளாது. படுகொலைகளும், கட்டாய மதமாற்றங்களும் தினசரி சம்பவங்கள் அங்கே. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் கையில் பைபிள் வைத்திருந்தாலேயே கூட முத்தவாக்கள் பிடித்துக் கொண்டு போய் விரல் நகங்களைப் பிடுங்கியோ அல்லது கைகளை பாளம் பாளமாக பிளேடால் அறுத்தோ அமைதி மார்க்கத்தின் மேன்மையை நிலை நாட்டுவார்கள். நம்பாதவர்கள் இணையத்தில் தேடிப்பாருங்கள்.

இந்திய, குறிப்பாக தமிழ் நாட்டுக் கிறிஸ்தவர்கள் இதுகுறித்தான சிறிதளவு அறிவு கூட இல்லாமல் இருக்கிறார்கள். இணையவெளியிலும், ஃபேஸ்-புக்கிலும் இஸ்லாமியர்களை தங்களின் உடன் பிறவா சகோதரர்கள் போல வழியும் “கிறிஸ்தவ அறிவு சீவிகள்” நகைப்பிற்கு உரியவர்கள். இந்தியாவில் ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் வரை மட்டுமே கிறிஸ்தவ, பவுத்த, ஜைன, சீக்கிய இன்ன பிற மதத்தினர் பாதுகாப்பாக இருக்கமுடியும் என்பதுவே மறுக்க முடியாத உண்மை.

ஒருவேளை முஸ்லிம்கள் இந்தியாவில் மெஜாரிட்டியாக ஆகிப் போனால் (அவ்வாறு நினைக்கவே அச்சமாக இருக்கிறது!), கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் ‘திம்மி’க்களாக, இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவார்கள். இதில் இஸ்லாம் ஆபிரகாமிய மதங்களான (monothestic) யூத, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு ‘திம்மி’ எனும் அந்தஸ்தை அளிக்கிறது. ஆனால் சிலை வழிபாடு (Polytheists) செய்யும் ஹிந்து, பவுத்த, ஜைன மதத்தவர்களுக்கு அவ்வாறான சலுகை எதனையும் இஸ்லாம் அளிப்பதில்லை. ஒன்று அவர்கள் மதம் மாறி இஸ்லாமைத் தழுவ வேண்டும்; அல்லது மரணம் என்னும் ஒரு கொடிய வாய்ப்பு மட்டுமே அவர்களுக்கு உண்டு. எனவே ஹிந்துக்களுக்கு கஷ்ட காலம்தான்,

அமைதி மார்க்க வழிகாட்டியான குரானில் (9:20) ‘திம்மி’க்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என வழிகாட்டுதல்கள் உண்டு. அந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இஸ்லாமின் இரண்டாவது கலிஃபா உமர் (அல்லது ஒமர்) அளித்த கட்டளைப்படியே இன்றுவரை இஸ்லாமிய நாடுகளில் ‘திம்மி’கள் நடத்தப்படுகிறார்கள்

Anonymous said...

சுல்தான் ஃபிரோஸ்-ஷா-துக்ளக் அவரது பதுஹத்-இ-ஃபிரோஸ்-ஷாவில், தான் ஹிந்துக் காஃபிர்களுக்கு இழைத்த பல கொடுமைகள் காரணமாக அவர்கள் கூட்டம், கூட்டமாக அமைதி மார்க்கமான இஸ்லாமைத் தழுவியதாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

“எனது காஃபிர் குடிமக்களை இஸ்லாமிற்கு மாறுமாறு ஊக்கப்படுத்தினேன். அவர்கள் அவ்வாறு இறை தூதரின் மதத்திற்கு வந்தால் அவர்களுக்கு ஜிஸியா செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறினேன். இந்தத் தகவல் வெளியே பரவியதும் ஏராளமான காஃபிரி ஹிந்துக்கள் இஸ்லாமைத் தழுவ முன்வந்தார்கள். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் இணைந்தார்கள். அவர்களுக்கு ஜிஸியாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது”

Anonymous said...

//முஸ்லிம் அல்லாத நண்பர்களையும் உடன் அழைத்து வரவும்.//

‘யூத, கிறிஸ்தவர்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்! அப்படிச் செய்பவர்கள் அவர்களில் ஒருவராக ஆகிவிடுகிறார்’ குர்ஆன் 5:51

முஸ்லிம்களிடம் பிற மதத்தினர் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

Anonymous said...

அவர்கள்
பெரும்பான்மை ஆவார்களாம், அப்படி ஆகி விட்டால் பரந்த மனதுடன் சுதந்திரம்
தருவார்களாம். உதாரணத்திற்க்கு மலேசியாவை பாருங்கள். - அடடா என்ன ஒரு
பெருந்தன்மை. மோடியை எதிர்க்கும் இந்துக்களே தயவு செய்து இந்த
முஸ்லீம்களின் எண்ணத்தை புரிந்து கொள்ளுங்கள். மோடி நடந்து கொண்டதில் எந்த
தவறும் இல்லை.

suvanappiriyan said...

//‘யூத, கிறிஸ்தவர்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்! அப்படிச் செய்பவர்கள் அவர்களில் ஒருவராக ஆகிவிடுகிறார்’ குர்ஆன் 5:51//

அதற்கு முன்னால் உள்ள வசனத்தை படிக்கவில்லையா?

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்கு கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது'

-குர்ஆன் 5:8

என்ன அழகான ஒரு தீர்வை குர்ஆன் கொடுக்கிறது என்று பாருங்கள். மோடி போன்ற கயவர்கள் திட்டமிட்டு முஸ்லிம்களை அழித்தாலும் மற்ற நல்ல மனம் கொண்ட இந்துக்களை வெறுக்க வேண்டாம். அவர்களோடு நீதியோடு நடங்கள். அன்பை விதைக்கச் சொல்கிறது குர்ஆன். எங்களுக்கு எதிரிகள் இந்துத்வாவினரேயொழிய இந்துக்கள் அல்ல. அவர்கள் எங்களின் சகோத சகோதரிகளே! அதைத்தான் குர்ஆனும் கட்டளையிடுகிறது.

suvanappiriyan said...

//அவர்கள்
பெரும்பான்மை ஆவார்களாம், அப்படி ஆகி விட்டால் பரந்த மனதுடன் சுதந்திரம்
தருவார்களாம். உதாரணத்திற்க்கு மலேசியாவை பாருங்கள். - அடடா என்ன ஒரு
பெருந்தன்மை.//

நாங்கள் பெரும்பான்மை ஆவதை விரும்பாவிட்டால் அனைத்து மக்களையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள். சிதம்பரம் கோவிலில் உள்ள பிரச்னையை தீர்த்து வையுங்கள். சூத்திரர்கள் என்று மற்றவர்களின் பிறப்பை கேவலப்படுத்தாதீர்கள். அப்படி சொல்லும் சாத்திரங்களை தூரமாக்குங்கள். அப்பொழுதுதான் இஸ்லாம் இந்தியாவில் வளராது. சாதி படிப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டால் இஸ்லாம் வளர்வதை 1000 மோடிகள் வந்தாலும் தடுக்க முடியாது. எனது முன்னோர்களும் ஒரு காலத்தில் செட்டியாராகவோ, மூப்பனாராகவோதான் இருந்துள்ளார்கள்.

suvanappiriyan said...

//ஒருவேளை முஸ்லிம்கள் இந்தியாவில் மெஜாரிட்டியாக ஆகிப் போனால் (அவ்வாறு நினைக்கவே அச்சமாக இருக்கிறது!), கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் ‘திம்மி’க்களாக, இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவார்கள். //

தவறான புரிதல்!

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும் பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாக ஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான் ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.

Dr.Anburaj said...

நாங்கள் பெரும்பான்மை ஆவதை விரும்பாவிட்டால் அனைத்து மக்களையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள். சிதம்பரம் கோவிலில் உள்ள பிரச்னையை தீர்த்து வையுங்கள். சூத்திரர்கள் என்று மற்றவர்களின் பிறப்பை கேவலப்படுத்தாதீர்கள். அப்படி சொல்லும் சாத்திரங்களை தூரமாக்குங்கள். அப்பொழுதுதான் இஸ்லாம் இந்தியாவில் வளராது.சியா-சுன்னி மதத்தவா்கள் இடையே அமைதியை ஏற்படுத்துங்கள் பாா்க்கலாம் ? காதியானி முஸ்லீம்களக்கும் பிறமுஸ்லீம்களுக்குமிடையே பிணக்குகளை திா்தது வையுங்களேன் பாா்க்கலாம் ? சிதம்பரம் கோவில் ஒன்றம் சிலலோகம் அல்ல. அங்கே கும்பிட்டுதான் ஆக வேண்டும் என்று எதும்யில்லை. அவனவன் வீட்டில் விளக்குஏற்றி சற்று இறைவனை நினைத்து வணங்கி அந்தண தா்மத்தை பொது வாழ்வில் கடைபிடி்த்து ஒழுகினால் போதுமானது. மனித பலகினங்கள் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானது. சிதம்பரம் என்று சுட்டிக்காட்டத் தேயையில்லை.முட்டாள்தனமானது