Followers

Monday, January 27, 2014

ரியாத்திலிருந்து தமிழகம் திரும்பிய தமிழர் பூமாலை!



சவூதி வாகன விபத்தில் கோமா நிலையில் இருந்த தமிழர் India Fraternity Forum, Riyadh முயற்சியால் நாடு திரும்பினார்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா, பெருமங்களம் பஞ்சாயத்து கீழ்நாரியப்பனூரை சேர்ந்த முதலி என்பவரின் மகன் பூமாலை (வயது 33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2011 ம் ஆண்டில் வேலைக்காக சவூதி அரேபியாவின் ரியாத்இற்கு ஓட்டுனர் வேலைக்கு வந்தார். இங்கு அவர் டேங்கர் லாரியில் ஓட்டுநராக பணி செய்து வந்தார். இந்நிலையில் வாகன விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு King Fahd National Guard மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூமாலை, நினைவு எதுவும் திரும்பாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக கோமா நிலையில் இருந்து வந்தார். இந்த விபரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் சவூதியில் சமூக நல பணிகளை மேற்கொள்ளும் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தை தொடர்புகொண்டு அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியை மேற்க்கொல்ளும்படி கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் கோமா நிலையிலிருந்து ஓரளவு நினைவு திரும்பிய நிலையில் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தின் ரியாத் நிர்வாகிகளின் தொடர் முயற்சியின் காரணமாக மருத்துவமனையின் உதவியுடன் சென்னை செல்லும் விமானத்தில் முதல் வகுப்பில் அவரது ஊரை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் துணையுடன் நேற்று (25-01-2014) சென்னை அனுப்பிவைக்கப்பட்டார்.

பூமாலையை சென்னை விமானநிலையத்தில் வரவேற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் காஞ்சி பிலால், துணைத் தலைவர் அன்சாரி, ஆலந்தூர் தொகுதி செயலாளர் ஹாரூண் ரஷீது ஆகியோர் பூமாலையை பெருமங்களம் பஞ்சாயத்து தலைவர் மருது மற்றும் பூமாலை மனைவி சங்கீதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பூமாலையை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூமாலையை தமிழகம் அழைத்துவர எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம் மேற்கொண்ட மனிதநேய முயற்சிக்கு அவரது குடும்பத்தார் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

IFF, Riyadh - KSA

A.Mohammed Ramujudeen
Riyadh - KSA

கொள்கை ஒன்றாக இருந்தாலும் இஸ்லாமிய இயக்கங்கள் பல பெயர்களில் இயங்குகின்றன. தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாபுலர் .பிரண்ட், ஃபிரடர்னிடி ஃபாரம் என்று பல பெயர்களில் இயங்கினாலும் அனைத்து இயக்கங்களும் பொது சேவையை கருத்தில் கொண்டே இயங்குகின்றன. சாதி, மத வித்தியாசம் பாராமல் இது போன்ற நற்செயல்களை செய்வதற்கு அனைத்து இயக்கங்களும் முன்னுரிமை தர வேண்டும். இரத்ததானம், மரம் வளர்ப்பு, ஏழை மக்களின் கல்விக்கான ஏற்பாடுகள், கிராமங்களின் சுகாதாரம் என்று அனைத்து துறைகளையும் எடுத்து உழைக்க ஆரம்பித்தால் மிகச் சிறந்த எதிர்காலம் இம்மையிலும் மறுமையிலும் இந்த இயக்கங்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் வல்ல இறைவன் தர தயங்க மாட்டான்.

1 comment:

Dr.Anburaj said...

சேவை என்பது பிரதிபலன் பாராமல் செய்வது.மதம் மாற தூண்டுதல் என்ற இழிவான உள்சிந்தனையுடன் செய்தால் அது விபச்சாரம்.