Followers

Sunday, August 28, 2016

பஹ்ரைன் மந்திரியின் இளகிய மனம் மோடிக்கு இல்லையே!



பஹ்ரைன் மந்திரியின் இளகிய மனம் மோடிக்கு இல்லையே!

பஹ்ரைன் பிரதம மந்திரி இளவரசர் கலீபா பின் சல்மான் அமரர்ஊர்தி மறுக்கப்பட்ட டானா மஜ்ஹி என்பவருக்கு
நன்கொடை வழங்கினார்!!

இந்திய பிரதமமந்திரி நரேந்திரமோடி, இலட்சக்கணக்கான மெறுமதிமிக்க ஆடைகளை அணிந்துகொண்டு உலகை வலம்வந்துகொண்டிருக்கும் வேளையில், , அமரர்ஊர்தி மறுக்கப்பட்டதால் மனைவியின் உடலை தோள்களில் சுமந்துசென்ற நிகழ்வை பஹ்ரைனில் வெளிவரும் அல் பார் அல் ஹலீஜ் என்ற பத்திரிகைவாயிலாக தெரிந்துகொண்ட பஹ்ரைனின் இளவரசர் கலீபா பின் சல்மான், மிகவும் மனமுருகி பாதிக்கப்பட்ட இந்நபருக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று எண்ணினார்.

பஹ்ரைனிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்ட இளவரசர், பாதிக்கப்பட்ட மனிதருக்கு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கினார்.

நாளை அரபிகளில் ஒருவர் இந்த கிராமத்திற்கு அம்புலன்ஸ் வாங்கிகொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!!!!!!!!!!

12 வயது மகளை அழைத்துக்கொண்டு 12 கிலோமீட்டர். நடந்த பின்னர் , சிலநல்ல உள்ளங்களின் முயற்சியால் இவருக்கு, 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவருடைய கிராமத்திற்கு செல்வதற்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

அரபிகளின் தன்மை இத்தகையதுதான்.

இச்சம்பவம் குறித்து மோடி வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தபணம் பாதிக்கப்பட்ட மனிதரை சென்றடையுமா??அல்லது அரசியல்வாதிகள் ஆட்டயை போடுவார்களா???

தகவல் உதவி

#இன்று ஒரு தகவல் - பக்கம்

No comments: