Followers

Thursday, August 18, 2016

மீடியாக்களால் தப்புவிக்கப்படும் முக்கிய குற்றவாளிகள்!

ஒரு முகத்த்தை பல முறை திரும்ப திரும்ப மீடியாவில் காட்டி இவன்தான் குற்றவாளி என்று மக்கள் மனதில் பதிய வைக்கப் பட்டு தப்பிக்க வைக்கப் படும் முக்கிய/உண்மை குற்றவாளிகள்

சுவாதி கொலையில் குற்றம் சாட்டப்ப பட்ட ராம்குமார் சொன்னதாகவும், அவன் மீது இட்டுக்கட்டி தினமும் மலம் தின்னும் சில ஊடக நாய்கள் எழுதி வந்த பொய்கள் கீழே.

1. மூன்று மாதமாக துரத்தி துரத்தி காதல் செய்தேன்.
2. பேஸ்புக் வழியாக நண்பர்கள் ஆனார்கள். (அவன் புரோப்பைல் பார்த்தால் ஓபன் பண்ணிட்டு யூஸ் பண்ண தெரியாமல் போனமாதிரி இருக்கு)
3. (தந்தி செய்தியில்) மூன்று / (தினமலரில்) ஐந்து முறை காதலை சொல்லியும் ஏற்காததால் கொலை செய்தென்.
4. தேவாங்குனு சொன்னதால் வாயில் வெட்டினேன்.
5. தெரியாமல் கொலை செஞ்சுட்டேன்.. கண்ணீர் விட்டு கதறும் ராம்குமார்.
6. போலீசை கண்டதும் கழுத்தை அறுத்துக் கொண்டான்.
7. தனிமையிலேயே இருந்தான் என்று ஒரு செய்தி தாளில், எந்த பதட்டமுமில்லாமல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான் என்று மற்றோரு செய்தியில்.
8. சுவாதி கொலை: என்கவுன்டர்ல கொன்னுடுவாங்களா? அச்சத்தில் ராம்குமார்.

இவை அனைத்துமே மீடியாவில் இருக்கும் சில மூடர்களால் வேண்டுமென்றே பரப்பி விடப்பட்ட பொய்கள்.

அப்சல் குரு தீர்ப்பை இங்கே சுட்டி காட்டும் தேவை என் ஏற்பட்டது.

இன்றளவும் அவன்தான் பாராளுமன்ற தாக்குதல் முக்கிய குற்றவாளி என்று மக்கள் நம்புகின்றனர். அல்ல அல்ல, நம்ப வைக்கப் பட்டுள்ளனர்.

உண்மையில் அப்சல் குரு யார்? முன்னாள் பிரிவினைவாத ஆதரவாளன், அதிலிருந்து திருந்தி சரணடைந்து உளவுத்துறை ஏஜெண்டாக ஆன ஒரு ஆள்.

பாராளுமன்ற தாக்குதலில் உண்மை குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறியவர்கள் உளவுத்துறை நண்பரான அப்சல் குருவை கைது செய்து நடனமாடினார். அப்சல் குருவும் ஆரம்பத்தில் அப்படித்தான் நம்பி இருந்தார் இவர்கள் நாடகம் முடிந்த பிறகு விட்டுவிடுவார்கள் என்று.

ஆனால் என்ன நடந்தது? மீண்டும் மீண்டும் அப்சல் குரு மட்டும் மீடியாவில் முக்கிய குற்றவாளியாக காட்டப் பட்டான்.

இறுதியில் தீர்ப்பு வருகிறது மரண தண்டனை என்று, குற்றம் நிரூபிக்கப் பட்டு அல்ல (நிரூபிக்கவும் முடியாது, ஏனென்றால் உண்மை குற்றவாளி அவன் கிடையாதே), மக்களின் கூட்டு மனசாடியின் அடிப்படையில், அதாவது இவன்தான் குற்றவாளி இவனை தூக்கிலிடவேண்டும் என்ற அனைத்து மக்களின் விருப்பத்தின் கேற்ப.

இந்த கூட்டு மனசாட்சியை ஏற்படுத்தியது யார்? பொறுப்பற்ற மீடியா வேசிகள்தான்.

விளைவு- பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட ஐந்திற்கும் மேற்பட்ட நேரடி குற்றவாளிகள் தப்பிவிட்டனர் அல்லது தப்பவைக்கப் பட்டனர்.

அவர்களை தேடவுமில்லை, இன்றளவும் கைது செய்யவில்லை, கைது செய்யப் போவதுமில்லை.

-பொருள்வை மைந்தன்

No comments: