Followers

Wednesday, August 17, 2016

மாடு கடத்'திய வழக்கில் பிஜேபி எம்எல்ஏ கைது!



மாடு கடத்திய வழக்கில் பிஜேபி எம்எல்ஏ கைது!

சில இந்துக்களால் தெய்வமாக வணங்கப்படும் கோமாதாவை கடத்தி கடைசியில் போலீஸிடம் மாட்டிக் கொண்ட பிஜேபி எம்எல்ஏ. அவமானம் தாங்காமல் போலீஸார் முன் கதறி அழுகிறார். இந்துத்வாவாதிகளை பொறுத்த வரை பசு பக்தி என்பது பகல் வேஷம் என்பதை இந்நிகழ்வு உண்மை என நிரூபிக்கிறது.

உபியின் பலியா தொகுதியின் பிஜேபி எம்எல்ஏ உபேந்திரா. சட்ட விரோதமாக மாடுகளை கடத்திச் சென்ற ஒரு கும்பலை காவல் துறை அரெஸ்ட் செய்துள்ளது. அந்த கும்பல் பிஜேபி எம்எல்ஏ உபேந்திராவின் ஆட்கள். எனவே அவர்களை விடுவிக்க உபேந்திரா காவல் நிலையம் சென்றுள்ளார். போலீஸார் அவர்களை விடுவிக்கவில்லை. இதனால் கோபமுற்ற உபேந்திரா காவல் நிலையத்தையும் அரசு வாகனங்களையும் குண்டர்களோடு தாக்கத் தொடங்கியுள்ளார். இதனால் அங்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் இறந்துள்ளார்.

அரசு சொத்துக்கள் சேதமடைந்ததாலும் ஒருவர் இறக்க காரணமாக இருந்ததாலும் பிஜேபி எம்எல்ஏவை போலீஸார் கைது செய்துள்ளனர். அவமானம் தாங்காமல் போலீஸ் கஸ்டடியில் கதறி அழுவதையே இங்கு நாம் பார்க்கிறோம்.

http://www.patrika.com/news/ballia/one-dead-and-many-other-injured-during-firing-and-lathicharge-in-bjp-mla-upendra-tiwari-protest-1374347/

No comments: