Followers

Sunday, August 07, 2016

பீஹாரில் நடத்தப்பட்டுள்ள திட்டமிட்ட வன்முறை!









பீஹாரில் நடத்தப்பட்டுள்ள திட்டமிட்ட வன்முறை!

பீஹார் மாநிலத்தின் சப்ரா மாவட்டத்தில் இஸ்லாமியரிகளின் வணிக வளாகங்கள் பஜ்ரங் தள் குண்டர்களால் சூறையாடப்பட்டுள்ளது. ஒரு இஸ்லாமிய இளைஞன் முக நூலில் இந்து மதம் சம்பந்தமாக சில கருத்துக்களை சொன்னதை காரணமாக வைத்து கூட்டத்தை கூட்டி இஸ்லாமியரின் பொருளாதாரத்தை சூறையாடியுள்ளனர்.

பள்ளி வாசலின் வாயிற் கதவை இடித்துள்ளனர். பல கடைகளை உடைத்து அதில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்துள்ளனர். இந்து மதத்தின் பெயரை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் இந்த கொள்ளையர்களை சட்டம் ஒன்றும் செய்யாது. ஒரு இஸ்லாமியருக்கு 45000 ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை இழந்துள்ளார்.

இந்து மதத்தை காக்கும் லட்சணம் இதுதூனா? இப்படி சாமான்யர்களின் பொருட்களை கொள்ளையடித்து சென்றால் இந்து மதம் வளர்ந்து விடுமா? மோடியின் ஆட்சியில் இந்து மதம் மிகப் பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய மக்கள் இழந்த பொருட்களை இரண்டொரு மாதத்தில் உழைத்து சம்பாதித்து விடுவார்கள். ஏனெனில் அவர்கள் உழைக்கப் பிறந்தவர்கள்.

கொள்ளையடித்து சேர்த்த இந்த பொருட்களை வைத்து எத்தனை நாள் இந்துத்வா குண்டர்களால் நிம்மதியாக இருந்து விட முடியும்?

பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளுங்கள் இந்துத்வாவாதிகளே!

தகவல் உதவி
மில்லி கெஜட்
07-08-2016

http://twocircles.net/2016aug06/1470507356.html#.V6d9pkZ94pv

No comments: