Followers

Sunday, April 05, 2020

சதித்திட்ட வலை.....

வாட்ஸ்அப்பில் வந்த செய்தி....
மிக முக்கியமான சதித்திட்ட வலை.
தோழர் இளங்கதிர் தன்னுடைய புலன் சேகரிப்பின் மூலம் பாசிச அமைப்பை சேர்ந்த சிலரிடம் சேகரித்தவற்றை தொகுத்து தந்திருக்கிறோம்.
பாசிசவாதிகளின் முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை கருவறுக்கும் செயல் பற்றி நாம் செய்தி சேகரித்ததை அவர்கள் வாக்குமூலம் போல இங்கு தருகிறோம்.
"எங்கள் அதிகாரத்தை பிடிக்கும் திட்டங்களுக்கு சாதகமாக இருப்பதே முஸ்லிம்கள்தான்.
முஸ்லிம்கள் இந்த நாட்டின் எதிரிகள் என்று வந்தால்தான், எங்களுக்கு இந்துக்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
இந்தியாவில் மற்ற பகுதிகளில் ஓரளவு இதில் வெற்றியடைந்தாலும், தமிழகம் ஒரு சவாலாகவே உள்ளது.
எப்படியாவது இவர்களுக்கு எதிராக மக்களை, அரசாங்கத்தை, முக்கியமாக காவல்துறையை முடுக்கி விட வேண்டும் என்பதே எங்கள் கனவு.
தமிழ்நாட்டில் அதை செய்வது பெரும்பாடாக இருந்தது. சாகின்பாக்குகள் வந்தபோது போது அது ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால் விரைவில் சுதாரித்துக்கொண்ட முஸ்லிம்கள் சாகின்பாகுகளை கட்டுப்பாடோடு நடத்த தொடங்கிவிட்டார்கள்.
அதைத்தொடர்ந்து கொரானா வைரஸ் இன்னொரு வாய்ப்பாக வந்தபோது சாகினபாகுகளை வைத்துதான் இவற்றை பரப்புகிறார்கள் என கிளப்பி விட திட்டமிட்டோம். ஆனால் இதிலேயும் கடைசி தருணத்தில் சுதாரித்து விட்ட முஸ்லிம்கள் அவற்றை கலைத்து விட்டனர்.
அப்போது வந்ததுதான் தப்லிக் ஜமாத் வாய்ப்பு. முஸ்லிம்களில் இவர்கள் ஒரு விந்தையான ஒரு பிரிவு. இவர்கள் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருப்பவர்கள்.
இப்படி ஒரு முட்டாள் குரூப் இருந்தது பெரிய வரப்பிரசாதமானது.
இவர்களில் சிலருக்கு கொரோனா பற்றியிருப்பதும், இவர்கள் உலகத்தில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி அறியாமல் ஆட்டுமந்தைகள் போல மார்ச் நடுவில் மாநாடு நடத்தியது பற்றி தெரியவரவும், உடனடியாக நாங்கள் செயலில் இறங்கினோம்.
எங்களுக்கு நேர்த்தியான ஊடக பிரச்சார கட்டமைப்பு உண்டு. அதுபோக முஸ்லிம்களுக்கு எதிரான விஷயத்தில், முஸ்லிம்கள் அவர்களே எங்கள் பிரச்சாரத்தை எடுத்துக்கொடுக்கும் வகையில் நடப்பார்கள், என்ற இரண்டாவது பெரிய பலமும் உண்டு.
முதலில் தப்லிக் நபர்கள் கொத்து கொத்தாக தீவிரவாதிகள் போல பொறுப்பில்லாமல் திரியும் வீடியோக்களை எடுத்து எங்களுக்கு இருக்கும் எல்லா வாட்சப் மற்றும் பேஸ்புக் குருப்புகளில் பரப்பினோம்.
ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தோம்.
அது வைரல் ஆனது.
வைரல் ஆகும் விஷயங்களை தொலைக்காட்சிகள் கவனிக்கும். அடுத்து தொலைக்காட்சிகளில் விவாதங்கள் தொடங்கினோம். அதில் கட்சி சார்பில்லாத மாலன், கோலாகல ஸ்ரீனி போன்றவர்களை அனுப்பி தப்லிக் சதித்திட்டம் என எடுத்துக்காட்டினோம்.
இது நன்கு பற்றவும், வெகுஜன பத்திரிகைகளில் குருமூர்த்திக்களை வைத்து தப்லிக் எப்படிப்பட்ட தீய நிறுவனம் என்பதை இஸ்ரேலிய எழுத்தாளர்களின் மேற்கோளை காண்பித்து எழுத வைத்தோம்.
இதில் என்ன திரில் என்றால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக காண்பிக்கும் திமுகவின் தொலைக்காட்சியான சன் டிவியின் தலைப்பு செய்தி சுமார் ஐந்து நிமிடம் தப்லிக் எப்படி உலகத்தில் மற்ற பாகத்தில் இருந்து கொரோனாவை இந்தியாவிற்கு பரப்பி விட்டது என படத்தோடு இரண்டு நாட்கள் காண்பிக்கும் அளவு செய்தோம்.
இதற்கு அடுத்த கட்டம்தான் சுவாரசியமானது.
முஸ்லிம்களை அவர்களை வைத்தே பாதிப்பை உருவாக்குவது.
எங்களின் மிக பெரிய பலமே முஸ்லிம்களின் குருட்டு நம்பிக்கையும், சடுதியில் உணர்ச்சிவசப்படுதலும்தான்.
நாங்களே முஸ்லீம் மதத்தை படித்தவர்களை வைத்திருக்கிறோம். அவர்கள் உதவியோடு போலி செய்திகளை உருவாக்குவோம்.
கொரோனவால் சீன அதிபர் மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார் என்று பரப்புவோம். இதை போல எதையாவது எழுதி இறுதியில் சுபானல்லாஹ் என்று போட்டுவிடுவோம்.
இது எதற்கு என்றால் எங்களுக்கு இவர்களை தூண்டிவிட வேண்டும்போது இது பயன்படும். உதாரணமாக முஸ்லீம் மதகுருமார்கள் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை மசூதி செல்ல தேவை இல்லை என்று சொன்னார்கள். அப்போது அதில் சிலரை இதற்கு எதிராக தூண்டிவிட இதை பயன்படுத்தினோம்.
சீன அதிபரே மன்னிப்பு கேட்க மசூதிக்கு சென்றார், நங்கள் ஏன் செல்லக்கூடாது என்று பரப்பினோம்.
மெக்காவில் தொழுகையில் அழுதுபுலம்பினார்கள் என பரப்பினோம்.
துருக்கியில் அதிபர் மசூதிகளை எப்போதும் முடமாட்டார் என்று சொன்னதாக பரப்பினோம். தொழுக விடாமல் யூதர்கள் செய்யும் சதி என பரப்பினோம்.
எங்களிடையே உள்ள முஸ்லீம் மத அறிவு உள்ளவர்களை வைத்து வெள்ளிக்கிழமை தொழுகை பற்றி பல உணர்ச்சிகளை தூண்டி வாக்குவாதத்தில் ஈடுபட வைத்தோம்.
இதனால்தான் பல இடங்களில் இவர்கள் தடையை மீறி தொழுக சென்றார்கள். அதன்முலம் வெகுஜன கசப்பையும் காவல்துறையின் வெறுப்பையும் இவர்களே தேடிக்கொள்வார்கள்.
முஸ்லிம்களும் அவர்களின் வாட்ஸாப் பயனும் எங்களுக்கு நன்கு தெரியும். ஒரு தகவல்- நாங்கள் பல ஆயிரக்கணக்கான வாட்ஸாப் குரூப்புகள் வைத்துள்ளோம் முஸ்லீம் குரூப்புகள் உண்டு. இந்து குரூப்புகள் உண்டு. இந்து குருப்புகளில் இந்து மதம் சார்ந்த ஒரு விஷயம் போடப்பட்டால், ஒரு பத்திலிருந்து இருபது சதம் மட்டும் மற்றவர்க்கு பார்வர்ட் செய்வார்கள். முஸ்லீம் குருப்புகளில் முஸ்லீம் மதம் பற்றி போட்டால், ஐம்பது சதத்திற்கும் அதிகமானோர் பார்வர்ட் செய்வார்கள்.
எதாவது போட்டோஷாப் செய்து சுபானல்லாஹ் மாஸல்லாஹ் என்று போட்டாலே போதும்.
தப்லிக் நபர்கள செய்யும் ஒவ்வொரு தப்பையும் இந்த வாட்சப் குருப்புகளில் போடுகிறோம். முஸ்லிம்களே அதை எல்லோருக்கும் பார்வர்ட் செய்துவிடுகிறார்கள்.
உதாரணத்திற்கு வீட்டிற்கு கேள்வி கேட்க வரும் அரசு அதிகாரியை, ஒரு தப்லிக் நபர் ஒருமையில் ஏசி முதல்வர், பிரதமரையும் விளாசுவதை பதிவேற்றினோம். ஒரே நாளில் இவர்களே அதை வைரல் ஆக்கி விட்டார்கள்.
தப்லிக் நபர்களின் குரூப்பாக பரோட்டா சாப்பிட்டு கிண்டலடிக்கும் குவாரன்டின் கூத்துக்களும் உதவுகின்றன.
கொரோனாவே இல்லாமல் முஸ்லிம்களை மட்டும் அடைத்து வைக்கிறார்கள் என பரப்பினோம்.
அதுபோல 'முஸ்லிம்களே, உங்களை மட்டும் இந்த அரசு கொரோனா பாதித்தவர்களை போல சித்தரிக்கிறது' என பரப்பி விட்டோம். இதை நம்பி கோபமடைந்து இந்தூரில் முஸ்லிம்கள் அரசு அதிகாரிகளை கல்லெறிந்து எங்கள் திட்டத்தை நிறைவேற்றினார்கள்.
பாஜக அரசுக்கு எதிராக வந்த அல்லாவின் தண்டனைதான் கொரோனா என பரப்புனோம். அதை நம்பி முஸ்லீம் இளைஞர்கள் டிக்டக் வீடியோ போட்டார்கள். சிலர் பொதுஇடத்தில் இருமலாம் வாங்க என்று பதிவிட்டார்கள்.
சீனாதான் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை குலைக்க இந்த வைரஸை உருவாக்கியது முஸ்லிம்கள் சீனர்களின் கைப்பாவை என்று எழுதினோம் அதை முஸ்லிம்களே சரமாரியாக பார்வேர்ட் செய்தார்கள்.
ஆக மொத்தம் இது நன்றாக வேலை செய்கிறது. முஸ்லிம்களின் செயல்களை வைத்தே நாங்கள் லாபம் பார்த்துவிடுவோம்.
இரண்டு விஷயங்கள் நாங்கள நினைத்தது போல இன்னும் போகவில்லை.
ஒன்று- தமிழ் தேசியவாதிகள். இவர்கள் முஸ்லிம்கள்தான் பரப்புகிறார்கள் என்பதை நம்பவில்லை. பார்வர்ட் செய்திகளை, பத்திரிகை செய்திகளை நம்பாமல் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.
அதே போல தமிழக அரசு முஸ்லிம்களின் மேல் எரிச்சல் அடைந்து உபி அரசு போல கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என நினைத்தோம். ஆனால் நிதானமாக செல்கிறார்கள்.மத வியூகத்தை தடுக்கிறார்கள். இருந்தாலும் நாங்கள் தொடருவோம்.
இப்போதும் கூட சுகாதார செயலர் பீலா, முஸ்லிம்களுக்கு எதிரானவர் என பரப்ப ஆரம்பித்திருக்கிறோம்."
இதற்கு அப்புறம் இவர்கள் சொல்லும் செய்திதான் பகீர் என்கிறது.
"அரசு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், எங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று பல திட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு எதோ ஒரு காவல் அதிகாரி முஸ்லிம்களை சந்தித்ததாகவும், அப்போது அவர்களை இழிவாக பேசியதோடு, முகமது நபியை கேவலப்படுத்தியது போல ஒரு போலி செய்தியை முஸ்லிம்கள் மத்தியில் போட்டுவிட்டால் போதும். பார்வர்ட் மேல் பார்வர்ட் செய்து குரூப்பாக கிளம்பி வெடிக்கும்."
தோழர்களே, முஸ்லிம்கள் இந்த சதித்திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக வாட்சப் பற்றி சொல்லப்படும் விஷயங்களை அவர்களுக்கு விளக்குங்கள். அவர்கள் கையில் கிடைக்கும் எல்லா மெஸேஜையும் பார்வேர்ட் பண்ணாமல் இருந்தாலே பாதி திட்டங்கள் முறியடிக்கப்படலாம்.

1 comment:

Dr.Anburaj said...

மாடா்ன் தியேட்டா்ஸ் என்ற பட நிறுவனம் முன்பு இருந்தது.அது சிறந்த துப்பறியும் படங்களை எடுத்துள்ளது. படிக்க அதன் கதை போல் உள்ளது. சிறந்த கதையாசிரியா் ஒருவரைக் கொண்டு கற்பனையாக வடிக்கப்பட்டுள்ளது.

இந்துக்களுக்கு என்று பணபலமும் ஆட்பலமும் கிடையாது. கூட்டமும் கிடையாது. அவனவன் தனித்தனிதான்.

இந்நிலையில் இந்து வெறுப்பை வளா்க்க அரேபிய வல்லாதிக்க இயக்கங்கள் பெரும் சுது செய்து வருகின்றன் என்பது நிரூபிக்கப்பட்டள்ளது.