Followers

Monday, April 27, 2020

தமிழ்நாட்டின் மொத்த கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை

தமிழ்நாட்டின் மொத்த கொரானா நோயாளிகளின் எண்ணிக்கையை விட குஜராத்தின் அகமதாபாத் நகரத்தின் நோயாளிகளின் எண்ணிக்கை சரிபாதி அதிகம். கொரானா நோயின் தலைமை பீடமாக அகமதாபாத்தும், சூரத்தும் திகழ்கிறது. ஆனால் எந்த வெகுசன ஊடகங்களிலும் இதைப்பற்றி விவாதம் நடைபெறவில்லை.
இம்மாத இறுதிக்குள் அகமதாபாத் நகரில் மட்டும் 9 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுவர் என்பது மாநகராட்சியின் கணிப்பு. இதெல்லாம் ஆங்கில பத்திரிக்கைகளில் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த சங்கிப் பத்திரிக்கைகள் இதைப்பற்றி வாயே திறக்காது,
குஜராத்தில் கொரோனாவைப் பரப்பிய சிங்கிள் சோர்ஸ் ஒன்றே ஒன்றுதான். அது ட்ரம்ப் நிகழ்ச்சி. ட்ரம்ப் நிகழ்ச்சிக்கு சில்லறையை சிதறவிட்ட பார்ப்பன பனியா கூட்டத்தின் சுவர்க்கபூமி அகமதாபாத்தும், சூரத்தும். இன்று இவ்விரண்டு நகரங்களே இந்தியாவின் ரெட்ஸ்பாட், அகமதாபாத் நகரம் மட்டும் அரசு ஆவணப்படி 2000ஐ தாண்டி விட்டது. சூரத் 500ஐ தாண்டிச் சென்றுகொண்டு இருக்கிறது,
குஜராத்தில் தான் பரிசோதனை விகிதாச்சாரம் மிக குறைவு, இறப்பு விகிதங்களும் மிக அதிகம். இதுவரை 33,316 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் இதில் பாசிடிவ் ஆனது 3,100ஐ தொட்டு விட்டது (கிட்டத்தட்ட 10%) ,இறப்பு 136ஐ தாண்டிவிட்டது,
குஜராத் மாநிலத்தின் அனைத்து விகிதாச்சாரங்களும் இத்தாலியை பிரதிபலிப்பது போலவே சென்று கொண்டிருக்குறது. இன்று மட்டும் 256 பேருக்கு பாசிடிவ் ஆகலாம் மற்றும் ஆறு பேர் மரணிக்கலாம் என அரசின் ஆன்லைன் பக்கமே சொல்கிறது,
கோயம்புத்தூரில் ஜக்கி நிகழ்ச்சிக்கு சென்றுவந்த குஜராத்திய மார்வாடிகள் இங்கிருந்து கொண்டே பல நாட்கள் நோயை மறைத்து ஊர் சுற்றினர் இறுதியில் ஒருவரின் மரணத்தில்தான் உண்மை வெளிவந்தது. அகமதாபாத் சூரத் போன்ற நகரங்கள் பார்பபன பனியாக்களின் அதிகாரம் உச்சத்தில் இருக்கக்கூடிய இடங்கள். அங்கு வேலை செய்யும் மக்கள் ஊழியர்களுக்கு இவர்கள் எந்தளவு கட்டுப்பாடுவார்கள் என்பதனை நான் சொல்லத்தேவையில்லை. ஒருமுறை அங்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும் ,
கொங்குத் தமிழர்கள் எதற்கும் பிழைக்க வந்த குஜராத்திய பனியா கூட்டங்களை விட்டும் சற்று தூரமாக இருப்பது நலம், நோய்க்கு மதமும் தெரியாது, பணமும் தெரியாது. வந்துவிட்டால் வைத்தியம் பார்த்துத்தான் ஆக வேண்டும்,
இஸ்லாமிய மாநாட்டிலும் வரும், ஜக்கி நிகழ்ச்சியிலும் வரும், அரசியல் நிகழ்வான மோடி கூட்டத்திலும் வரும். தொற்று நோய்க்கு மதம் கற்பித்த முட்டாள்களின் கூடாரத்தில் இன்னும் என்னவெல்லாம் பார்த்துத் தொலைக்க வேண்டுமோ?
முதலில் உங்க குஜராத் முதலாளிகளுக்கு என்ன ஏதுன்னு பாருங்க சங்கிகளா, தமிழ்நாட்டை நாங்க பாத்துக்கறோம்.
- Senthil Prakash Selvaraj

No comments: