Followers

Tuesday, April 28, 2020

பிளாஸ்மா சிகிச்சைக்கு தானம் பெற....

பிளாஸ்மா சிகிச்சைக்கு தானம் பெற எல்லோரையும் உட்படுத்த முடியாது. அவர்கள் உடல் 30 நாட்களுக்கு மேல் கொரானா கிருமியை உடலில் தாங்கி அதை அந்த உடல் அழித்து இருக்க வேண்டும். அதோடு அவர் குடி பழக்கம் புகை பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பிளாஸ்மா தானம் செய்ய முடியும்.
அப்படி எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை கொரானாவால் பாதிப்படைந்து சிக்கலான நிலையில், உயிருக்கு ஆபத்தாக இருக்கும் ஒரு நோயாளிக்கு செலுத்தினால் அவர் ஒரு மூன்று நாளைக்குள் குணமடைந்து விடுவார். அவரை அபாய கட்டத்திற்கு போகாமல் தடுத்தும் விட முடியும். இது கோரானாவை விரைவாக நம் நாட்டை விட்டு அழிக்க ஏதுவாகும்!
தப்லீக்காரர்களில் 100% பேருக்கு மது பழக்கம் இராது. புகை பழக்கம் 99% பேருக்கு இருக்காது. அவர்கள் உடலும் ஒத்துழைக்கும். இதற்கு எப்படி பார்த்தாலும் தப்லீக் ஜாமாத்தினர் உடன்படுவார்கள்! இன்று அவர்களில் டெல்லியில் 300 பேர் முன் வந்து பதிவு செய்தும் இருக்கிறார்கள். நால்வருக்கு சிகிச்சையும் அங்கே செய்யப்பட்டு விட்டது!
டெல்லியை கேரளா தமிழ் நாடு மகாராஷ்டிரா என்று நிறைய மாநிலங்கள் இந்த சிகிச்சையை துவங்க இருக்கின்றன! ஒரு கூட்டத்தை அவர்கள் அறியாமல் செய்து அதனால் ஏற்பட்ட பிரச்சினையை வாய்க்கு வந்த படி எல்லாம் பேசிய அனைவருக்கும் இதில் நிறைய பதில்கள் இருக்கிறது. அதை காலம் போக போக புரிய வைக்கும்! தமிழ் நாட்டிலும் பலர் தயார்!
ஒரு மனிதரை கொலை செய்பவர் முழு மனித சமூகத்தையும் கொலை செய்ததை போலாவார். அதே போல ஒரு சமூகத்தை பாதுகாத்தவர் மொத்த மனித சமூகத்தையும் பாதுகாத்ததை போலாவார். நம் கண்ணியமும் உயர்வும் இறைவன் தருவது. பிறருக்கு அநியாயம் செய்யாமல் அவனுக்காக வாழ்வோருக்கு உயர்வும் கண்ணியமும் நிச்சயமாக கிடைக்கும்!
SPREADING LOVE WILL DESTROY THE HATE.


💚

1 comment:

Dr.Anburaj said...

பிளாஸ்மா சிகிச்சைக்கு தானம் செய்ய முன்வருபவர்கள் அனைவரும் இந்தியர்கள்.மதக் கண்யோட்டம் தவறு. சமூக பொறுப்புள்ள யாரும் செய்வார்கள்.

-------------------------------------------------------------------------------

கொரானா விசயத்தில் கலவரம் செய்து போலீசை மருத்துவர்களை தாக்கி குழப்பம் செய்த சில தப்லீம் ஜமாத்காரர்கள் குற்றவாளிகள்தான்.