Followers

Friday, May 09, 2014

சூரியன் நகர்கிறதா? உண்மையாகவா!

திரு முத்துக் குமார்- ஹானஸ்ட் மேன்!

//5) சூரியன் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்கிறது (36:37,39) பூமி ஓரிடத்தில் நிலையாக உள்ளதப்பா //

//எல்லா கேள்விக்கும் பதில் சொல்லவில்லையே? குறிப்பாக “பூமி நிலையாக உள்ளது”.//

//4) சூரியனும் சந்திரனும் தத்தமது வானத்தில் நீந்திகொண்டிருக்கின்றன.(21:32,33)—–சூரியன் நீந்துகின்றானா? ஐயோ நாம் என்ன பாவம் செய்தோமோ புனித நூலென்று சொல்லப்படும் ஒரு புருடா நூலை படிப்பதற்கு?//

உங்கள் இருவரின் மூன்று கேள்விகளுக்கான விளக்கத்தை இனி பார்ப்போம்.

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

'இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் வானவெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் 21:33

இங்கு நீந்துதல் என்ற வார்த்தையைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம். கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் சுற்றி வரும்போது அதற்கு பொருத்தமான வார்த்தையான 'நீந்துதல்' என்ற வார்த்தைப் பிரயோகத்தை படிப்பறிவில்லாத முகமது நபியால் சிந்திக்க முடியுமா? உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த அந்த காலத்தை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். இன்றும் கூட நம்மில் பலர் பூமி உருண்டை என்பதையும் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையையும் நம்பாதவர் இருக்கின்றனர்.

'அதனதன் பாதையில் நீந்துகின்றன' என்ற வார்த்தையையும் சிந்தியுங்கள். அதனதன் பாதையில் அந்த கோள்கள் செல்லாவிட்டால் ஒன்றோடொன்று மோதி இந்த பிரபஞ்சமே பெரும் அழிவை சந்திக்கும். அதற்குரிய பாதைகளை வகுத்தால்தான் இந்த குழப்பம் ஏற்பாடாது. அதையும் இங்கு குறிப்பிடுவதை எண்ணி ஆச்சரியப்படுகிறோம்.

ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் அதன் இடத்தை விட்டு நகர்கிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

அறிஞர் ஹெர்ஷலின் கண்டுபிடிப்பு!

அறிஞர் ஹெர்ஷவின் கண்டுபிடிப்பைப் பற்றி அறிவியல் அறிஞர் டூயிக் பின்வருமாறு விளக்குகிறார்.

'ஏனைய நட்சத்திரங்களைப் போன்று சூரியனும் விண்ணில் நகர்கிறது. நட்சத்திரத் தொகுதி ஒன்றில் பிரகாசமான வேகா எனும் நட்சத்திரத்திற்கு உள்ள ஓர் இடத்தை வில்லியம் ஹெர்ஷல் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள நட்சத்திரங்களில் அவைகளுக்கு இடையில் உள்ள தூரம் கூடிக் கொண்டே வருவதைக் கவனித்தார். அதே நேரத்தில் அந்த திசைக்கு நேர் எதிர் திசையில் இருந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி வந்து காட்சி அளிப்பதையும் கவனித்தார்.

இது உள்ளபடியே பூமி உட்பட கோள்கள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு சூரியன் நகர்வதனால் ஏற்படும் தோற்றமே இந்த நிகழ்ச்சிக்கு காரணமாகும் என அவர் விளங்கிக் கொண்டார்.

இதை தெளிவாக விளங்குவதற்கு ஹெர்ஷல் ஒரு உதாரணத்தையும் கொடுக்கிறார். ஒரு காட்டிற்குள் மரங்களெல்லாம் ஏறத்தாழ சம தூரத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்வதாக கற்பனை செய்வோம். அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது இடையிடையே நீங்கள் நடக்கும் திசைக்கு நேராகவும் அல்லது அதற்கு நேர் எதிர் திசையிலும் பார்வையைச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் மரங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதாகவும் உங்களுக்குப் பின்னால் உள்ள மரங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வருவதாகவும் உணர்வீர்கள். இந்த தோற்றம் முற்றிலும் உங்களுடைய சுய நகர்வின் காரணமேயாகும். இதே நிலை சூரியன் நகரும் போதும் ஏற்படுகிறது. சூரியன் எந்த திசையை நோக்கி நகர்கிறதோ அந்தத் திசையில் அடர்த்தியாகத் தெரிந்த நட்சந்திரங்கள் இடைவெளி விட்டுத் தெரிகிறது. இதே போல் இதற்கு எதிர் திசையில் நட்சத்திரங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிவதும் சூரியனின் சுயமான நகர்வின் காரணமேயாகும்.
-அஸ்ட்ரானமி ஃபார் எவ்ரிமேன், பக்கம் 297-98

இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க எத்தனை ஆய்வுகள் எத்தனை அறிஞர்கள் இரவு பகல் பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய ஆய்வுகளையும் மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்லும் குர்ஆனின் வார்த்தைகள் வெறும் மனிதனின் வார்த்தை என்று எண்ண முடியுமா?


8 comments:

yalali1956 said...

May allah bless you for your valuable posts with authentic references.

i found an interesting video in youtube regarding " A Baby born with Holy Quran in his hand " in lagos state nigeria.

https://www.youtube.com/results?search_query=baby+born+with+holy+quran

Could you please research the authenticity of this and comment on this on your site for all your followers and viewers to know.

My wife is the one who intereduce your blog to me and she ask me to print most of the articles relating to Islam and science. She conveys her salamis to you and your family.

ஆனந்த் சாகர் said...

நீங்கள் சுவிட்சர்லாந்தில் வேலை செய்துகொண்டு இருக்கலாம். அதற்காக ஒரு தமிழ் வலைப்பூவில் இப்படியா ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவது?

அது சரி, சுவனப்பிரியனை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களா என்ன? கூட்டத்தை சேர்க்கும் அளவுக்கு அவருடைய பதிவுகளில் சொல்லும்படியாக ஒன்றுமே இல்லையே?

ஆனந்த் சாகர் said...


//'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38//

'இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் வானவெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் 21:33

பூமி சுழல்வதால் சூரியனும் நிலாவும் கிழக்கிலிருந்து மேற்காக பயணிப்பது போல் நம் கண்களுக்கு தெரிகிறது. அனைவரும் அறிந்த ஒன்றை முஹம்மது அல்லாஹ் சொல்வதாக கூறினால் அது உங்களுக்கு அறிவியலாக தெரிகிறது. உங்கள் மடமையை எண்ணி சிரிப்பு தான் வருகிறது.

//இங்கு நீந்துதல் என்ற வார்த்தையைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம்.//

முகம்மதுவின் எல்லா உளறல்களும் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் தெரியும். ஏன்னா, உங்கள் மூளை அப்படி!

// கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் சுற்றி வரும்போது அதற்கு பொருத்தமான வார்த்தையான 'நீந்துதல்' என்ற வார்த்தைப் பிரயோகத்தை படிப்பறிவில்லாத முகமது நபியால் சிந்திக்க முடியுமா?//

கோள்கள் சூரியனை சுற்றிவருகிறது என்று குரான் எந்த வசனத்தில் கூறுகிறது? சூரிய குடும்பத்தை பற்றியோ, அதிலுள்ள கோள்களை பற்றியோ குரான் எதுவுமே சொல்லாத போது, குருட்டாம் போக்கில் நீந்துகின்றன என்று முஹம்மது சொல்லியதால் அதை கோள்களின் சுற்றுவட்ட பாதை யோடு முடிச்சு போடுவது மோசடித்தனம். முஹம்மது படிப்பறிவில்லாத அறிவிலி என்பதை அவரது புருடா புத்தகம் குரானே நிரூபிக்கிறது.

ஆனந்த் சாகர் said...

//'அதனதன் பாதையில் நீந்துகின்றன' என்ற வார்த்தையையும் சிந்தியுங்கள். அதனதன் பாதையில் அந்த கோள்கள் செல்லாவிட்டால் ஒன்றோடொன்று மோதி இந்த பிரபஞ்சமே பெரும் அழிவை சந்திக்கும். அதற்குரிய பாதைகளை வகுத்தால்தான் இந்த குழப்பம் ஏற்பாடாது. அதையும் இங்கு குறிப்பிடுவதை எண்ணி ஆச்சரியப்படுகிறோம்.//

பூமி சுழல்வதால் சூரியனும் நிலாவும் பயணிப்பதை போன்ற தோற்றம் அளிப்பதை அவை நீந்திகின்றன என்று தன்னை புலவர் என்று நினைத்துக்கொண்டு முஹம்மது வர்ணித்ததற்கு, நீங்கள் இப்படி அறிவியல் பில்டப் கொடுப்பதை பார்த்து எங்களுக்கு சிரிப்புதான் வருகிறது. முஹம்மது மலம், சிறுநீர் கழிப்பது கூட உங்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கலாம்.

suvanappiriyan said...

//அது சரி, சுவனப்பிரியனை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களா என்ன? கூட்டத்தை சேர்க்கும் அளவுக்கு அவருடைய பதிவுகளில் சொல்லும்படியாக ஒன்றுமே இல்லையே?//

ஒரு நாளைக்கு சராசரியாக 900 பார்வையாளர்கள் பிளாக்கரில் மட்டுமே வருகிறார்கள். டிவிட்டர், ஃபேஸ் புக் மற்ற இணைய தளங்களின் கணக்கு தனி. பெரும்பாலும் மாற்று மதத்தவர்களே எனது பதிவுகளை அதிகம் படிக்கின்றனர். ஆபாசம், சினிமா இ.ல்லாமல் இத்தனை பேரை படிக்க வைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. எல்லா புகழும் இறைவனுக்கே.

இதன் மூலம் ஒருவராவது நேர்வழி பெற்றால் நான் மெனக்கிடுவதற்கு ஒரு அல்ப சந்தோஷப்பட்டுக் கொள்வேன். :-)

ஆனந்த் சாகர் said...

//ஒரு நாளைக்கு சராசரியாக 900 பார்வையாளர்கள் பிளாக்கரில் மட்டுமே வருகிறார்கள். டிவிட்டர், ஃபேஸ் புக் மற்ற இணைய தளங்களின் கணக்கு தனி. பெரும்பாலும் மாற்று மதத்தவர்களே எனது பதிவுகளை அதிகம் படிக்கின்றனர். //

நீங்கள் செய்துவரும் காமெடி கலாட்டா ஒரு சிலருக்கு பிடிக்கிறது என்று தெரிகிறது.

ஆனந்த் சாகர் said...

//இதன் மூலம் ஒருவராவது நேர்வழி பெற்றால் நான் மெனக்கிடுவதற்கு ஒரு அல்ப சந்தோஷப்பட்டுக் கொள்வேன்.//

உமது பதிவுகளை படித்து நேர்வழி பெற முடியுமா? இதுவும் நல்ல தமாஷ். நேர்வழி என்று முஹம்மது சொன்னதெல்லாம் சுத்த டுபாக்கூர். அந்த டுபாக்கூரின் உளறல்களுக்கு அறிவியல் சாயம் பூசும் உங்கள் கூட்டத்தின் மோசடி வேலை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். நீங்களும் டுபக்கூர்தானே? பின்னே வேறென்ன செய்வீர்கள்?

ஆனந்த் சாகர் said...

/இதன் மூலம் ஒருவராவது நேர்வழி பெற்றால் நான் மெனக்கிடுவதற்கு ஒரு அல்ப சந்தோஷப்பட்டுக் கொள்வேன்.//

குருடர்கள் மற்றவர்களுக்கு வழியை காண்பிக்கிறார்கள், அவர்களை குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று பரிசேயர், சதுசேயரை பற்றி ஏசு பைபிளில் சொன்னது நினைவுக்கு வருகிறது.