Followers

Friday, August 08, 2014

உங்கள் தாய் மொழி தமிழா? உருதா?

சாரங்கன்!

//தாய் மொழி தமிழ்ன்னு ஏண்ணே குடுக்க மாட்டிக. உருதுன்னு எதுக்கண்ணே குடுக்குதீக//

தமிழக வரலாறு உங்களுக்கு எந்த அளவு தெரிந்திருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. தாய் மொழி உருது என்று எழுதும் முஸ்லிம்கள் யாரென்று நினைத்தீர்கள். வட நாட்டில் ஹிந்து முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு பெரும்பான்மையான இந்துக்களால் சிறுபான்மை முஸ்லிம்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டார்கள். உயிர் பிழைக்க அங்கிருந்து குடும்பத்தோடு ஓடிய முஸ்லிம்கள் அமைதி தவழும் பல மாநிலங்களில் குடியேறினர். அதில் ஒரு பிரிவினர்தான் தமிழக உருது முஸ்லிம்கள். தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்கள் தாய் மொழி தமிழ் என்றுதான் குறிப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் தமிழ் மொழியைத்தான் சென்ஸஸில் குறிப்பிடுவோம். ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களில் 10 சதவீதத்துக்கு மேல் உருது முஸ்லிம்கள் உள்ளனர். தனது தாய் மொழியை அவர்கள் மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

அப்புறம் உங்களின் தாய் மொழி எதுங்கோ! சென்ஸஸில் தமிழ் என்று எழுதி கொடுத்து விட்டு உங்களின் தாய் மொழியான சமஸ்கிரத பற்று மட்டும் விட மாட்டேன் என்கிறதே. மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் என்ற பழமொழி ஒன்று சொல்வார்கள் அதுதான் ஞாபகம் வருகிறது.

சூத்திரர்களோடு நெருங்கி விடக் கூடாது என்பதற்காக உங்களின் தமிழ் மொழியையே மாற்றி 'நேக்கு, நோக்கு, அவாள், இவாள்' என்று இன்று வரை சிதைப்பது யார் என்பதும் இன்று பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒருவரை யொருவர் வெட்டிக் கொண்டும் குடிசைகளை கொளுத்திக் கொண்டும் சாவதற்கு எந்த இனம் காரணம், எந்த வேதங்கள் காரணம் அதன் சூத்திரதாரி யார் என்பதெல்லாம் சாதாரண இந்துக்களுக்கும் தெரியும். இனியாவது இந்த இருபத்தி ஓராவது நூற்றாண்டிலேயாவது திருந்த முயற்சி செய்யுங்கள்.


No comments: