Followers

Thursday, August 07, 2014

பண்டைய கால தமிழர்களின் உணவு முறை!

முஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் பலரைப் பார்த்துள்ளோம். ஆதி கால தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவே இருந்துள்ளனர். பின்னால் வந்த ஆரிய படையெடுப்பினால் தமிழர்களின் கலாசாரம் மறையத் தொடங்கி ஆரிய கலாசாரம் தமிழகமெங்கும் ஏன் இந்தியா முழுவதுமே பரவத் தொடங்கியது. நமது முன்னோர்கள் எந்த அளவு அசைவப் பிரியர்களாக இருந்துள்ளனர் என்பதனை சங்க கால தமிழர்களின் வரலாற்று நூல்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.



குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல் என்ற ஐவகை நிலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.அந்த தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்.

குறிஞ்சி நிலத்தவர் உணவு:

சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.)

திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169)

குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183)

மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ).

பாலை நிலத்தார் உணவு:

ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133).

முல்லை நிலத்தார் உணவு;

பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445).

மருத நிலத்தார் உணவு;

மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. ( 216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256).

நெய்தல் நிலத்தார் உணவு;

நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).

இவ்வுணவுகள் தாம் அசல் தமிழர்கள் உண்ட அசைவ உணவு. இன்று சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?

9 comments:

ஆனந்த் சாகர் said...

@சுவனப்பிரியன்,

//பின்னால் வந்த ஆரிய படையெடுப்பினால் தமிழர்களின் கலாசாரம் மறையத் தொடங்கி ஆரிய கலாசாரம் தமிழகமெங்கும் ஏன் இந்தியா முழுவதுமே பரவத் தொடங்கியது.//

திராவிட இனம், ஆரிய இனம் என்று பேசுபவர்கள் பொய்யர்கள். திராவிட இனம், ஆரிய இனம் என்று எந்த மனித இனமும் இல்லை. இல்லாத ஒன்றை இருப்பதாகசொல்வது சுத்த பொய். இல்லாத திராவிட இனத்தை சொல்லி அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பு நடத்துபவர்களை நாம் அறிவோம். அவர்கள் அம்பலப்பட்டு நிற்கிறார்கள். உங்களை போன்று இரட்டைவேடம் போடுபவர்கள், நயவஞ்சகர்கள் மட்டுமே போய்யின்மேல் கட்டப்பட்டுள்ள இந்த ஆரிய-திராவிட இனவாதத்தை பேசிக்கொண்டு திரிகிறார்கள். பெரும்பான்மையான இந்தியர்கள் இந்த பொய்யை கண்டுகொள்வதே இல்லை.

7ஆம் நூற்றாண்டு காட்டுமிராண்டி மனிதன் சொன்ன அரபு கலாசாரத்தை ஏற்று அதற்கு அடிமையாகி அதை வெட்கமின்றி பரப்பும் நீங்கள் ஆரிய-திராவிட இனம் என்றெல்லாம் கதைப்பது வேடிக்கையானது. உங்களுக்கு இந்திய கலாசாரத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

ஆரிய படையெடுப்பு என்று கூறுபவர்கள் அது எந்த வருடம், எங்கு, யாருடைய தலைமையில் நடந்தது என்று கூறுவார்களா?

Dr.Anburaj said...


முஹம்மது யுதா்களை யாத்திாிப் மற்றும் கைபா் என்ற ஊரை விட்டு படுகொலை மற்றும் பஞசமா பாதகங்கள் அனைத்தும் செய்து அழித்து விரட்டினாா். தன்னை நபி என்று ஏற்று அரேபிய கலாச்சாரத்தை பின்பற்ற முன் வராத மக்களை கொன்று குவித்தாா். முஹம்மதுவின் காலத்தில் கட்டடக்கலையில் பெரும் அறிவு பெற்று பிரமாண்டமான பிரமீடுகளைக் கட்டிய மனித உடலை அழுகி போகாமல் காக்கும் அறிவியலைக் கற்றறு தோ்ந்த அற்புதமான சிலைகளை வடித்த எகிப்து நாட்டு மக்களை உமா் என்ற 2ம் கலிபா பெரும் போா் நடத்தி கைபற்றி ஏராளமாக பொது அப்பாவி மக்களைக் கொன்று உடநாட்டு கலாச்சாரத்தை அழித்து அரேபிய கலாச்சாரத்தை அங்கு வாள் முனையில் பரப்பினான்.

சுவனப்பிாியன் தாங்கள் பலமுறை எழுதியிருக்கின்றீா்கள்.எகிப்தியா்கள் அனைவரும்யுதா் கள்.முஹம்மதுபின் கடும் நடவடிக்கைகளைச் சந்தித்தபோதும் கூட யுதா்கள் மதம்மாறவில்லை.ஆனால் எகிப்து என்ற ஒரு நாட்டில் வாழும் யுதா்கள் அனைவரையும் முஸலீம்களாக மாற்றப்பட்டாா்கள் என்றால் ” மகா கொடூரங்கள்” எவ்வளவு அரங்கேறியிருக்கும் என்பதை இசுலாமிய படையெடுப்புகளை படித்த தாங்கள் நன்கு அறிவீா்கள்.
பிறாமண சாதி பண்பாட்டு பாிணாமத்தில் உருவான சாதி. தனி இனம் கிடையாது.சைவ வேளாளா்கள் நாயன்மாா் கள் மீது பற்றுகொண்ட அனைத்து சாதி மக்களும் கலாச்சாரம் பண்பாபடு ஆகிய பாிணாமத்திற்கு ஆளாகி சைவ வேளாளா்களாக -முதலியாா்களாக செட்டியாா்களாக மாறிவிட்டாா்கள்.ஆதாரம் மறைமலைஅடிகள் புத்தகங்கள்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள ஐயங்காா்கள் அனைவரமும் சில 100 ஆண்டுகளுக்கு முன் யாதவா்களாகவும் நாடாா்களாகவும் இருந்தவா்கள். இராமானுஜாின் செல்வாக்கு காரணமாக கலாச்சார பாிணாமம் ஏற்பட்டு ஐயங்காா் பிறாமணா் களாக மாறிவிட்டாா்கள்.நாடாா் என்ற சாதி 500 வருடங்களுக்கு முன் கிடையாது.என்று தோன்றியது.தோன்றுவதற்கான காரணம் என்ன ? எப்படி தோன்றியது ? யாரும் உண்மையான தகவலை அளிக்க இயலாது.

சுவாமி விவேகானந்தா் மநோன்மணியம் சுந்தரம் பிள்ளையிடம் விட்ட சவால் எந்த கழுதையாலும் சந்திக்க இயலாது கிடக்கின்றது - இந்தியாவில் உள்ள மக்கள் தொகையை ஆாியா்கள் என்றும் திராவிடா்கள் என்றும் பிாித்து காட்டுங்கள் என்று சவால் விட்டாா்.
வீரமணி ஆண்டாமணி சால்ராமணி என்று எந்த தமிழ் கழுதையும் அந்த சவாலை ஏற்று பிாித்துக் காட்ட இன்று வரை முன் வரவில்லை.வெத்து வேட்டுக்கள்.
தங்களுக்கு அந்த சவாலை எதிா்கொள்ளும் நெ்ஞசுருதி ஈமான் உள்ளதா ? உனது சவாலை நான் சந்திக்கத் தயாா் ? கட்டுரையாக எழுது நான் பதில் எழுதுகின்றேன் .சவால்.

Dr.Anburaj said...


உணவு பழக்க வழக்கங்கள் மாறாதது என்று எவன் சொன்னான் ?

அனைத்தும் பாிணாம மாற்றத்திற்கு உட்பட்டதுதான்.

அசைவ உணவுதான் தமிழனின் அசல்பண்பாடு என்று நயவஞ்சகமாக ஏமாற்றும்

சுவனப்பிாியனுக்கு ஒன்று தொிவிக்கின்றேன்.

ஆதாம் ஏவாள் என்ற ஆதி நபியியின் உடை நிா்வாணம்தான்.

இன்று அதன்படி முஸ்லீம் ஆண்களும் ஆதாமைப்போல் முஸ்லீம் பெண்கள் ஏவாளைப்

போல் அம்மணமாக ஏன் வாழவில்லை.வாழத்தயாரா ?

Dr.Anburaj said...

ஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்

யாழ்ப்பாண‌த்தில் குடியேறி, ஈழ‌த் த‌மிழ‌ராக‌ ஒன்று க‌ல‌ந்த‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் ப‌ற்றிய‌

விப‌ர‌ம். ஈழ‌த்த‌மிழ் ச‌மூக‌ம் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ இன‌த்தூய்மை பேணி வ‌ருவ‌தாக‌ நினைப்ப‌து அறியாமை.

யாழ்பாணத்தில் தெலுங்கர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் குடியேறிய‌ இடங்க‌ளின் பெயர்கள், ஆந்திரா, க‌ர்நாட‌காவில் உள்ள‌ ஊர்க‌ளின் பெய‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போவ‌தை க‌வ‌னிக்க‌வும்.

யாழ்ப்பாணத்தில் குடியேறிய‌ தெலுங்க‌ர்க‌ள், (க‌ன்ன‌ட‌ர்க‌ளும்) வேளாளர் பட்டத்தை ஏற்றன‌ர். ஆகையினால் இன்றைய‌ வெள்ளாள‌ சாதியின‌ர் "தூய‌ த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌" என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து! (அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தீவிர‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளாக‌ இருப்ப‌தில் ஆச்ச‌ரிய‌ம் இல்லை.)

ஆந்திர தேசம்:
1. கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்).
2. கதிரி - கதிரிப்பாய்.
3. நக்கன் தொட்டி - நக்கட்டி உடையாபிட்டி
4. வடுகு - வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை)
5. அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை)
6. வேங்கடம் - வேங்கடன் (சங்கானை).

கன்னட தேசம்:
1. கன்னடி - மாவிட்டபுரம்
2. குலபாளையம் - குலனை (அராலி)
3. சாமண்டிமலை - சாமாண்டி (மாவிட்டபுரம்)
4. மாலூர் - மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்).
5. பச்சூர் - பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்).
6. மூடோடி - முட்டோடி (ஏழாலை).

துளுவம் (க‌ர்நாட‌கா மாநில‌ம்):
1. துளு - அத்துளு (கரவெட்டி).
2. துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி)

தமிழர் குடியேற்றம் தொண்டைமண்டலம், வட தமிழகம். தொண்டநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்:

1. கச்சி – கச்சினாவடலி (சுன்னாகம்).
2. கம்பாநதி –கம்பாமூலை, கம்பாக்கடவை (மல்லாகம்).
3. ஆலங்காடு – ஆலங்குழாய் (சண்டிலிப்பாய்)
4. காரைக்கால் - காரைதீவு. குதரைக்காடு (இணுவில்).
5. உடுப்பூர் – உடுப்பிட்டி
6. காஞ்சி – காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்).
7. சோழிங்கள் - சோழங்கள் (கரணவாய்)
8. தொண்டை – தொண்டைமானாறு, தொண்டைமான் தோட்டம் (வட்டுக்கோட்டை),
9. மயிலம் - மயிலங்காடு (ஏழாலை. )

(ஆதார‌ம்: யாழ்ப்பாணக் குடியேற்றம்) நன்றி கலையகம்

A.Anburaj Anantha said...

கன்னியரை பொன்னான் கழிந்தோரை மற்றயலார்

பன்னியரை மாயப் பரத்தையரை - முன்னரிய

தாதியரை நல்லோர் தழுவ நினையார் நரகத்

தீதுவரு மென்றே தெரிந்து.

நீதி வெண்பா பாடல்



நல்லோர், மணமாகாத பெண்களையும், பொன்னான தாலியை இழந்த கைம்பெண்களையும், பிறர் மனைவியரையும், வஞ்சனை மிகுந்த வேசியர்களையும், விரும்பத் தகாத வேலைக்காரிகளையும், நரக துன்பம் வந்துவிடுமே என்று உணர்ந்து தழுவ நினைக்க மாட்டார்கள்.



எங்கெங்கு தவறுகள் நிகழக் கூடும் என்பதை அறிந்து நம் முன்னோர்கள் ஐந்து பெண்களின் பட்டியலைத் தந்துள்ளனர். ஆகையால் இவர்கள் இருக்கும் இடத்தில் ஆடவர்கள் தனியாக இருக்கக் கூடாது. இருந்தால் பஞ்சினையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தது போலாகும்.



இவ்வாறு பெண்களைப் பற்றிச் சொன்னவுடன் யாரும் அவர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக தாயார் போன்ற ஐந்து பெண்கள் யார் யார் என்பதையும் ஒரு பாடல் கூறுகிறது.

இந்த நீதி வெண்பாவை இயற்றியவர் யார் என்பது தமிழ் கூறு நல்லுலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை.

தன்னையளித்தாள் தமையன் மனை குருவின்

பன்னியரசன் பயிறேவி- தன் மனையைப்

பெற்றாளிவரைவர் பேசி லெவருக்கும்

நற்றாய ரென்றே நவில்



பேசுமிடத்து தன்னைப் பெற்றவள், தமையனின் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசனின் மனைவி, தன்னுடைய மனைவியைப் பெற்றவள் ஆகிய இந்த ஐந்து வகையினரையும் அவரவர்க்கு பெற்ற தாய்மார்கள் என்றே சொல்லு.

இவர்கள் ஐந்து பேரையும் தாய் போலக் கருத வேண்டும்.





https://tamilandvedas.com/.../ஐந்து-தந்தை-ஐந்து-...






https://tamilandvedas.com/tag/தாய்/



ஐந்து தாய். ராஜாவின் மனைவி (மஹாராணி), குருவின் மனைவி, அண்ணனின் மனைவி, தன்னுடைய சொந்தத் தாய்மற்றும் மாமியார் ஆகிய ...

ஐந்து 'ஜ' காரமும் ஐந்து 'வ' காரமும்!! | Tamil ...

https://tamilandvedas.com/.../ஐந்து-ஜ-காரமும்-ஐந...



15 Feb 2014 - தாயும், தந்தையும், விஷ்ணு பக்தியும், கங்கையில் ஸ்நானம் ... இதே போல 'வ' காரத்தில் ஆரம்பிக்கும் ஐந்துவார்த்தைகள் ...





ஐந்து பெண்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஐந்து-பெண்கள்/



இளவரசர் ஹாரிக்கு 'பஞ்ச கன்யா' பெண்கள் வரவேற்பு (Post No 2654). harry with kunkum ... (for old articles go to tamilandvedas.comOR swamiindology.blogspot.com) ... இந்த ஐந்து பெண்களின் கதை தெரியாதோர் பாரத நாட்டில் இல்லை.

A.Anburaj Anantha said...

வள்ளுவன், காளிதாசன், மனு ஆகியோர் எல்லாம் ஒரு கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றனர். ஆனால் பகுத்தறிவு பேசும் பகலவன்களுக்கு அது வேப்பங் காயாகக் கசக்கும். ஒரு நாட்டில் நல்லாட்சி நடைபெற்றால் அங்கு விதை விதைக்காமலேயே தானியம் முளைக்குமாம்! நல்ல அறுவடை கிடைக்குமாம்!



அதே போல விருந்தாளிகளைக் கவனித்தால் நல்ல விளைச்சல் வருமாம். விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத எதுவும் மூட நம்பிக்கைதானே

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம் (85)



பொருள்:

வந்த விருந்தினரை முதலில் உண்ண வைத்துவிட்டுப் பின்னர் மீதியை உண்பவனுடைய விளை நிலத்திற்கு விதையும் விதைக்க வேண்டுமா?



அதாவது அவன் நிலத்தில் தானாக தானியம் முளைக்கும்; நெல் விளையும்!!

விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களில் அப்படிப்பட்ட விருந்தாளிகளை வரவேற்க தேவலோகத்தில் தேவர்கள்வேறு காத்திருப்பார்கள் என்று இன்னும் ஒரு குறளில் செப்புகிறான். சங்க இலக்கிய நூலான புறநானூறும் செப்புவது அதே! ஆய் அண்டிரன் இறந்தவுடன் இந்திர லோகத்தில் அவனை வரவேற்க டமாரங்கள் (முரசு) முழங்கினவாம்.



மனு நீதி நூலும் இதையே பகர்வது பகுத்தறிவுப் பகலவர்களுக்குப் பாகற்காயாகக் கசக்கும்:

நல்லாட்சி நடத்தும் அரசன் நாட்டில் விவசயிகள் பயிரிட்டது போல பயிர்கள் தானே விளையுமாம்; குழந்தைகள் இளம் வயதில் சாக மாட்டர்களாம். யாரும் உடலூனத்துடன் பிறக்க மாட்டார்களாம்! (மனு 9-247)



வள்ளுவனும், மனுவும் சொல்லுவது மூட நம்பிக்கையா?



இதற்கெல்லாம் மூல காரணம் வேதங்கள் ஆகும். ஆரமபத்திலேயே “அதிதி தேவோ பவ” = ‘விருந்தாளிகள் கடவுள்’ (தைத்ரீய உபநிஷத், சிக்ஷாவல்லி 1-20) என்று சொல்லிவிட்டது.

வேதத்தில் பல இடங்களில் விருந்தோம்பல் கருத்து உளது:

அதர்வ வேதத்தில் (14-11) ஒரு பாடல்-

“இந்த அறிவு உடைய விராத்யன் விருந்தாளியாக வரட்டும்;

உடனே எழுந்து நின்று, விராத்யனே, நீ நேற்று இரவு எங்கு தங்கினாய்? இதோ தண்ணீர் இருக்கிறது.

முதலில் கொஞ்சம் சிரம பரிகாரம் செய்; உனக்கு என்ன வேண்டுமோ அதெல்லாம் கிடைக்கும், விராத்ய, நீ விரும்பியதெல்லாம் நடக்கட்டும்; விராத்ய, உன் ஆசைகள் எல் லாம் நிறைவேறட்டும்



இது போன்ற கருத்து ரிக் வேதத்திலும் உள்ளது (10-117); பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் கருத்து இப்பாட்டில் தொனிக்கிறது.



நல்லாட்சி நடந்தால் புலியும் மானும் ஒன்றை ஒன்று தாக்காது என்று காளிதாசன், கம்பன், இளங்கோ சொல்லியதை முன்பே கண்டோம். இதுவும் பகுத்தறிவுகளுக்கு ஒவ்வாத தமிழ் மூட நம்பிக்கை.



இந்த விருந்தோம்பல் என்னும் கருத்து வெளி நாட்டுப் பண்பாட்டில் அறவே கிடையாது! ஆனால் நம் நாட்டிலோ இமயம் முதல் குமரி வரை அன்ன சத்திரங்கள் ஆயிரம் ஆயிரம். அதாவது Free Boarding and Lodging ( போர்டிங் அண்ட் லாட்ஜிங் ப்ரீ)! சாப்பாடும் தங்கும் இடமும் இலவசம். உலகில் எங்கும் இல்லாப் புதுமை. ஆரியர்கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கும் அம்சம்.

இது ஏன் வெளி நாட்டில் இல்லை? இமயம் முதல் குமரி வரை குறைந்தது 2500 ஆண்டுகளுக்காவது உளதே? என்றால் பேந்தப் பேந்த முழிப்பர். இது இந்தியாவில் வந்தவுடன் அவர்கள் உருவாக்கியது என்று சொல்லி பூசி மெழுகுவர்; அதாவது கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதை! அவர்களை எல்லாம் மறந்துவிட்டு இந்த அற்புதமான கருத்தை சீதையும் கண்ணகியும் தன் வாக்கில் சொல்லி மகிழ்வதை மீண்டும் நினைவு கொள்வோம்.

A.Anburaj Anantha said...

விருந்தோம்பல் என்னும் பண்பை தமிழ், சம்ஸ்கிருத இலக்கியம் வலியுறுத்துவது போல உலகில் வேறு எங்கும் காணமுடியாது.

காளிதாசனும், சங்க இலக்கியப் புலவர்களும் இந்தப் பண்பை எப்படி வலியுறுத்துகின்றனர் என்று ஒரு சில எடுத்துக்காட்டுகளின் மூலம் காண்போம்.

ஆரிய-திரவிடப் பிரிவினைகள் பொய்மையானவை என்பதும் இந்திய கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே கலாசாரம்தான் என்பதும் இந்த ஒரு பண்பில் — விருந்தோம்பல் — என்னும் பண்பில் தெரிந்துவிட்டது. விருந்தினர்களைக் கவனிக்க முடியாத நிலை வந்துவிட்டதே என்று சீதையும் கண்ணகியும் வருத்தப்பட்டதை நமது இலக்கியங்கள் அடிக்கோடிட்டுக் காட்டியதிலிருந்தே நமது பண்பாடு ஒன்று என்பது விளங்கும். அதுமட்டுமல்ல தைத்ரீய உபநிஷத் (1-20) காலத்திலிருந்து இதற்காக பல மந்திரங்களும் பாடல்களும் இருப்பது போல உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் காணமுடியாது. வள்ளுவர் எழுதிய திருக்குறள் போன்ற நீதி நூல்களில் இதற்கென்று ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கியதிலிருந்தும் இது விளங்கும்.

அதிதி தேவோ பவ– விருந்தினரைக் கடவுளாகக் கருதுக – தைத்ரீய உபநிஷத் (1-20)

காளிதாசரின் ரகுவம்சத்தில்
“காட்டில் விளையும், ஆரோக்கியத்தைத் தரும் ‘செந்தினை’ எனும் தானியத்தில் ஒரு பகுதி விருந்தினர்களுக்காக ஒதுக்கப்படுகிறதா? அவைகளை மாடுகள் முதலியன மேய்ந்து சேதமாக்காமல் இருக்கின்றனவா? “(ரகுவம்சம் 5-9)

“கருணையுள்ள உமது குரு, உங்களை இல்லற வாழ்வுக்குச் செல்ல அனுமதித்தாரா? ஏனெனில் எல்லா ஆசிரமத்திலுள்ளவர்களுக்கும் உதவுவது இல்லற தர்மம்தான்” (ரகு.5-10)

नीवारपाकादि कडंगरीयैरामृश्यते जानपदैर्न कच्चित्|
कालोपपन्नातिथिकल्प्यभागं वन्यं शरीरस्थितिसाधनं वः॥ ५-९

nīvārapākādi kaḍaṁgarīyairāmṛśyate jānapadairna kaccit
kālopapannātithikalpyabhāgaṁ vanyaṁ śarīrasthitisādhanaṁ vaḥ || 5-9


अपि प्रसन्नेन महर्षिणा त्वं सम्यग्विनीयानुमतो गृहाय|
कालो ह्ययं संक्रमितुं द्वितीयं सर्वोपकारक्षममाश्रमं ते॥ ५-१०

api prasannena maharṣiṇā tvaṁ samyagvinīyānumato gṛhāya
kālo hyayaṁ saṁkramituṁ dvitīyaṁ sarvopakārakṣamamāśramaṁ te || 5-10

இதே கருத்து திருக்குறளிலும் உள்ளது:—

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

பொருள்: இல்லறம் நடத்துபவன் மற்ற மூவர்க்கும் ( பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி) ஒரு துணையாவான்.

இன்னொரு இடத்தில், “ரகுவம்சத்தில் பிறந்தவர்கள் உயிரையே கேட்டாலும் கொடுப்பார்கள். ஆகவே விஸ்வாமித்ரர் கேட்டபடி ராமரையும் லெட்சுமணரையும் அவருடன் அனுப்பிவைத் தார் தசரதர்”(11-2) காளிதாசன் சொல்கிறான்.

இந்தக் கருத்து புறநானூற்றிலும் வருவது குறிப்பிடத்தக்கது:-

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் ,உயிரும் கொடுக்குவர்; பழி எனின்,

உலகுடன் பெறினும், கொள்ளலர்

–புறம் 182, க.மா.இளம்பெருவழுதி
சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல் பற்றி வரும் இடங்கள் கணக்கிலடங்கா; இதோ ஒரு சில எடுத்துக் காட்டுகள்;-

புறம்.173-ல் சிறுகுடி கிழான் பண்ணனை ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாராட்டுகிறான்.

புறம்.18-ல் பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாரரட்டுகையில் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே; என்ற வரியைப் பாடுகிறார்; இதே வரி பின்னர் மணிமேகலையிலும் வருகிறது.

கோவூர்க்கிழார் பாடிய பாடலில் (புறம்.46), விருந் தின் சிறப்பு தி காட்டப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்- தமிழரின் பண்பாடு என்பது கோவூர்க் கிழார் கருத்து; இது குறளிலும் வரும் (322).

புறம்.141 (பரணர்), புறம்134 (முடமோசி)-ல் மறுமைப் பயனை மனதிற் கொள்ளாமல்,மக்களின் வறுமையைத் தீர்க்கவே ஈத்துவப்பர் என்று கூறப்படுகிறது.

அகம்.203, புறம்.177 முதலிய பாடல்களில் வந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, அடுத்தவர்க்காக காத்திருக்கும் செய்தி வருகிறது!

மணிமேகலையில் சீழ்தலைச் சாத்த்னார் சொல்லுவது:

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

A.Anburaj Anantha said...





தொல்காப்பியர் அவரவர் குலதெய்வம் காப்பாற்றும் வாழ்த்து ஒன்றைத் தொல்காப்பிய பொருளாதிகாரத்தில் பாடுவார்:

'வழிபடு தெய்வம் நின் புறங்காப்பப்
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து,
பொலிமின்' என்னும் புறநிலை வாழ்த்தே;
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ

-1367, பொருள் அதிகாரம்

"வழிபடும் தெய்வம் உன்னைக் காப்பாற்றட்டும்; நிறைய செல்வத்துடன் இன்பமாக வாழ்வாயாக! - என்பது இதன் பொருள்.

‘ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செயல் வேண்டும்’ என்பது வள்ளலாரின் வேண்டு கோள்.

“நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”- என்பது திருமூலரின் ஆசை.

‘இன்பம் இடயறாது ஈண்டும்’ (குறள் 369)

‘மன்னுயிர்க்கெல்லாம் இனிது’ (குறள் 68) என்பது வள்ளுவன் வாழ்த்து. எல்லா உயிர்களும் என்பது இந்து சிந்தனை; வேறு எங்கும் காண முடியாது.


“இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால்” என்பது பாரதியின் உறுதி.

“இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்பது அப்பர் பெருமான் அடித்துக் கூறும் உண்மை.

இப்படி எங்கு நோக்கினும் “எல்லோரும் வாழ்க, இனிதாக வாழ்க” என்று தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.

அரேபியாவிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யலாம்.சமய கருத்துக்கள் கூடாது.


A.Anburaj Anantha said...



தமிழில் பழமறையைப் பாடுவோம்- பாரதி


வெற்றி எட்டு திக்கும் எட்டக் கொட்டு முரசே

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே-பாரதி


என்றெல்லாம் பாரதி ஏன் பாடினான்?

தமிழில் தெய்வீகப் பாடல்களைப் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் தாங்கள் வேதத்தைத் தமிழில் தருகிறோம் என்று ஏன் சொன்னார்கள்?

திருக்குறளைப் பாடிய பல புலவர்கள் வடமொழியில் வேதம் இருந்தது தமிழ் மொழியில் அது இல்லாத குறையைத் திருக்குறள் போக்கிவிட்டது என்று பாடி திருக்குறளைத் தமிழ் வேதம், தமிழ் மறை என்று ஏன் அழைத்தார்கள்?

இதற்கெல்லாம் ஒரே விடை--- வேதத்தில் உலகமே போற்றும் அடிப்படை உண்மைகள் இருப்பதே.
அது என்ன அடிப்படை உண்மைகள்?

சத்யம் வத = உண்மையே பேசு

தர்மம் சர = அறப்பணிகளை செய்

மாதா பிதா குரு தெய்வம் = அம்மா, அப்பா, ஆசிரியர் கடவுள்

அதிதி தேவோ பவ = விருந்தினரைக் கடவுளாகப் போற்று.

சர்வேஷாம் சாந்திர் பவது= எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும்.

சர்வேஷாம் மங்களம் பவது = பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

-- இப்படி ஏராளமான அடிப்படை உண்மைகள் வேதத்தில் பொதிந்துள்ளன.

இதை எல்லாம் ஏழு வயதில் ஆசிரியர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கற்பித்தனர். இது அவர்கள் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிடும்