
பானாஜி: மது குடிப்பது கோவா மாநில கலாச்சாரம் அதற்காக நாங்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என கோவா மாநில பா.ஜ. மூத்த தலைவர் பேசியுள்ளார்.
கேரள அரசின் அதிரடி முடிவு : கேரளாவில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் பல ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. குஜராத் வழியை பின்பற்றி கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பை முதல்வர் உம்மன் சாண்டி வெளியிட்டார். இந்த அறிவிப்பு கேரள பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து கேரளா வழியை கோவா மாநிலமும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுகுடிப்பது எங்கள் கலாச்சாரம் : இந்நிலையில் கோவா மாநிலத்தில் பா.ஜ. தலைமையிலான முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆட்சி நடக்கிறது. இம்மாநில பா.ஜ. துணைத்தலைவர் வில்பர்ட் மெஸ்கூயிட்டாவிடம் கேரள அரசின்முடிவு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்து பேசுகையில், மது குடிப்பது எங்கள் மாநிலத்தின் கலாச்சாரம் எங்கள் மாநிலத்தில் திருமணம் மற்றும் இதர விஷேச நிகழ்ச்சிகள் எது நடந்தாலும், அதை கொண்டாட மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.இற்காக நாஙகள் கேரளா அரசு அறிவித்தது போன்ற பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கு அவசியமும் இருக்காது . இவ்வாறு அவர் பேசினார்.
பூரணமதுவிலக்கை அமல்படுத்திய மாநிலங்கள்
மிசோரமில் - 1995
குஜராத் - 1960
மணிப்பூர் -1999
நாகாலாந்து -1990
அரியானா -1995-1998
ஆந்திரா - 1957-69
தினமலர்
23-08-2014
மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)
மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)
மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: -
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.
மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்: -
மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)
No comments:
Post a Comment