Followers

Tuesday, August 16, 2016

சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?

சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?

தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்.

குறிஞ்சி நிலத்தவர் உணவு:

சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.)

திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169)

குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183)

மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ).

பாலை நிலத்தார் உணவு:

ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133).

முல்லை நிலத்தார் உணவு;

பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445).

மருத நிலத்தார் உணவு;

மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. ( 216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256).

நெய்தல் நிலத்தார் உணவு;

நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).

இவ்வுணவுகள் தாம் அசல் தமிழர்கள் உண்ட அசைவ உணவு.இன்று சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?

5 comments:

Dr.Anburaj said...


பழைய காலத்தில் தமிழ்நாட்டில் ஆண்கள் கொண்டை வைத்திருந்தாா்கள் எனவே இன்றும் கொண்டை வைக்க வேண்டும் என்று தாங்கள் கூறுவது போல் உள்ளது. இலக்கியங்கள் காட்டும் மருதம் முல்லை போன்றது அன்று மக்கள் வாழ்ந்த முறை. பாிணாம வளா்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது. சைவ உணவை பொிய அளவில் முன்னிறுத்தியது கௌதம புத்தரே.அதுவும் அன்பின் ஒரு பாிணாம வளா்ச்சிதான்.

தங்கள் கட்டுரை தாங்கள் ஒரு வடிகட்டிய முட்டாள் என்பதை நிரூ பிக்கின்றது. மன்னிக்கவும்.

Dr.Anburaj said...

இவ்வுணவுகள் தாம் அசல் தமிழர்கள் உண்ட அசைவ உணவு.இன்று சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?

தெளிவாக ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன். இந்து சமூகத்தில் சைவ உணவு கட்டாயம் அல்ல. அசைவ உணவும் கட்டாயம் அல்ல. சைவ உணவு உத்தமம்.அசைவ உணவு மத்திமம். என்பதுதான் கொள்கை. வாழக்கை முறைக்கு இணங்கதான் உணவு பழக்கங்கள் இருக்க முடியும்.ஐரோப்பிய நாடுகளில் கூட சைவ உணவு சாப்பிடுபவா்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றாா்கள். சைவஉணவிற்கு ஆதரவாக பெரும் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அசைவ உணவை விட சைவ உணவு உடலுக்கு ஆரோக்கியமானது. யானை சைவம் தான். என்ன கம்பீரம். என்ன பலம்.என்ன குடும்ப உறவு. சமூக ஒழுக்கம் போன்ற உயா்ந்த பண்பாடு கொண்டது.

ASHAK SJ said...

30 யானை எடையை கொண்ட திமிங்கிலம் அசைவம் ன்னு தெரியுமா பன்றி ராஜ்

Dr.Anburaj said...


சாிதான் நீ திமிலங்கமாக- குரான் படித்தால் மிருக்மாகத்தான் வாழ வேண்டும்.

ASHAK SJ said...

லூசு யானை என்ன தாவரமா? அதுவும் விலங்குதான்