Followers

Wednesday, May 28, 2014

வானம் பிளந்து மலரைப் போன்று மாறும்!



நமது பூமிக்கு அருகிலுள்ள அன்ட்ரோமிடா என்ற கேலக்ஸியிலிருந்து நாஸாவால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. சென்ற புதன் கிழமை இதனை வெளியிட்டது நாஸா. இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதி இது போன்ற ஒரு அரிய நிகழ்வு நடந்திருக்கலாம் என்பது நாஸா விஞ்ஞானிகளின் கணிப்பு. அது பற்றிய செய்தியை ஆங்கிலத்தில் பார்ப்போம்.

A massive explosion in our nearest galaxy may have been caused by two stars colliding.

A sudden burst of gamma-rays in the Andromeda Galaxy was detected by a Nasa satellite on Wednesday morning.

There are various different types of gamma-ray emissions, and it is unclear whether it was specifically a gamma ray burst (GRB).

If it was, it may have been caused by the collision of two neutron stars.

It would be significant given that Andromeda is 2.5 million light years away – the previous nearest GRB took place 2.6 billion light years away.

By observing how the light fades over the next 24-48 hours, astronomers should be able to tell what type of gamma-ray emission it was.

Nasa's Swift Burst Alert telescope watches the skies for gamma-ray bursts and sends their locations back to stations on the ground.

It observes around 90 gamma ray events every year, but usually from much further away.

http://news.sky.com/story/1270466/massive-explosion-in-earths-nearest-galaxy

குர்ஆன் சூரா அர்ரஹ்மானில் தனது வல்லமை ஒவ்வொன்றையும் கூறி 'உங்களின் இறைவனின் அருட் கொடைகளில் எதனை பொய்யெனக் கருதுகிறீர்கள்?' என்று பலமுறை நம்மைப் பார்த்து இறைவன் கேட்கின்றான். அது போன்று ஒரு இடத்தில்

'வானம் பிளக்கும் போது எண்ணையில் தோய்த்த சிவந்த மலரைப் போன்று ஆகிவிடும் போது'
-குர்ஆன் 55:37

என்று இறைவன் கூறுகிறான். உலக முடிவு நாளில் பூமி மற்றும் அனைத்து கோள்களையும் கேலக்சிகளையும் அழித்து விடுவதாக இந்த வசனத்தின் தொடர்ச்சியாக இறைவன் கூறுகிறான். உலகம் அழிய வேண்டுமானால் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோத வேண்டும். அவ்வாறு ஒன்றோடொன்று மோதும் போது அந்த நிகழ்வானது எவ்வாறு இருக்கும் என்பதையே இந்த வசனம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தண்ணீர் நிறைந்த பெரிய குளம் ஒன்றில் மிகப் பெரிய பாறாங்கல்லைப் போட்டால் அந்த தண்ணீரானது பூ விரிவதைப் போன்ற தோற்றத்தில் மேலெழும்புவதைப் பார்க்கலாம். அதே போன்ற நிலைதான் இரண்டு கோள்கள் மோதும் போதும் நிகழ்கிறது. அந்த காட்சியையே இறைவனும் இங்கு எடுத்துக் காட்டுகிறான். ஆச்சரியமாக நமது காலத்தில் இரண்டு நட்சத்திரங்கள் மோதிய அந்த நிகழ்வை அமெரிக்காவின் நாசா படமாக எடுத்து வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இது போன்ற படங்களை நாசா வெளியிட்டிருந்தாலும் சென்ற புதன் கிழமை வெளியிட்ட படமானது குர்ஆனின் வசனத்தோடு மிகச் சரியாக பொருந்துவதை பார்த்து வியக்கிறோம்.

-------------------------------------------------------------------

முன்பும் இதே தலைப்பில் வெளியிட்ட பதிவை இனி காண்போம்.



“வானம் பிளந்து எண்ணையில் தோய்த்த சிவந்த மலரைப் போன்று ஆகிவிடும் போது” -ஸூரா ரஹ்மான்
-குர்ஆன் 55:37





வானம் பிளந்து போகும் அதாவது வானத்து கட்டுமானப் பொருட்கள் வெடித்துப் பிளந்து விடும். அப்போது அதன் தோற்றம் பூ போன்றிருக்கும். அந்த பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த வசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் என்பது இறைவனே அறிந்த விஷயமாகும்.



எனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை இறைவனே ஆக்கி வைத்துள்ளான். அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின் மேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன. அப்படி வெடித்த நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி ஆய்வு நிலையமாகிய ‘நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம் சொல்வதைப் போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன.

விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின் அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.



இது போன்று சிறிய சிறிய வசனங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பயன் படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நாம் ஆச்சரியப்படுகிறோம். நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தை அல்லாது மனிதர்களின் வார்த்தை அல்ல என்பதற்கு இது போன்ற வசனங்கள் நமக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

3 comments:

ஆனந்த் சாகர் said...

//'வானம் பிளக்கும் போது எண்ணையில் தோய்த்த சிவந்த மலரைப் போன்று ஆகிவிடும் போது'
-குர்ஆன் 55:37

என்று இறைவன் கூறுகிறான்.//

//உலக முடிவு நாளில் பூமி மற்றும் அனைத்து கோள்களையும் கேலக்சிகளையும் அழித்து விடுவதாக இந்த வசனத்தின் தொடர்ச்சியாக இறைவன் கூறுகிறான்.//

கோள்கள், கேலக்ஸிகள் என்ற வார்த்தைகளே குர்ஆனில் இல்லை. அவற்றை பற்றி அல்லாஹ்வுக்கு தெரியவும் இல்லை. வானம் பிளக்கும் என்ற முட்டாள்தனமான அறிக்கையை தூக்கி பிடிக்க கோள்கள், கேலக்ஸிகள் அழியும் என்று சப்பை கட்டுகிறீர்கள். வானத்தை ஒரு தனியான அமைப்பாக(entity ) அல்லாஹ் கருதுகிறான். அவனை பொறுத்தவரை, வானம் வேறு; சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் வேறு. வானத்தை பிளப்பேன் என அவன் சொல்லும்போது, அவன் வானம் என்ற தனியொரு அமைப்பை அழிப்பதை பற்றிதான் கூறுகிறான்; சூரியன், சந்திரனை, நட்சத்திரங்களை பற்றி அல்ல. அவைகளை பற்றி அவன் தனியாக மற்ற குரான் வசனங்களில் கூறுகிறான். அவன் வானத்தை ஒரு கூரை(முகடு/canopy) என்றே குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான். இந்த முகட்டை அழிப்பதை பற்றியே அல்லாஹ் கூறுகிறான. வழக்கம்போல் நீர் இதை திரித்து அல்லாஹ்வுக்கு குரான் பாடம் எடுக்கிறீர். உம்முடைய மோசடிகளுக்கு அளவே இல்லை.

ஆனந்த் சாகர் said...

//வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம் சொல்வதைப் போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன.//

வானம் பிளக்கும் என்ற குரான் வசனத்திற்கும் நட்சத்திரம் வெடிப்பதற்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. குரானை பொறுத்தவரை வானம் என்பது பூமிக்கு மேல் உள்ள ஒரு முகடு(கூரை). அதை தூண்களின்றி பூமியின்மீது எழுப்பி உள்ளதாக வேறு அல்லாஹ் குர்ஆனில் பீற்றிக்கொள்கிறான். அல்லாஹ் சொல்கிற வானம் வேறு. நட்சத்திரம் வேறு. அல்லாஹ்வின்(முஹம்மது) மடமையை என்னவென்று சொல்வது?

ஆனந்த் சாகர் said...

//வானம் பிளந்து போகும் அதாவது வானத்து கட்டுமானப் பொருட்கள் வெடித்துப் பிளந்து விடும்.//

தூண்களின்றி பூமியின்மேல் தான் எழுப்பியுள்ள கூரையை வானம் என்றும் இந்த கூரையைத்தான் தான் பிளக்க போவதாகவும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

வானத்து கட்டுமானப் பொருட்கள் வெடித்துப் பிளந்து விடும் என்று கூறுகிறீர். அல்லாஹ் கூறுகிற இந்த வானம் என்கிற கூரை எந்த கட்டுமான பொருட்களால் ஆனது என்று உமக்கு தெரியுமா?