Followers

Sunday, August 10, 2014

ராஜஸ்தானில் ஒரு முஸ்லிமை மாட்டை கும்பிட வைத்துள்ள வெறியர்கள்!



ராஜஸ்தானில் மாட்டையோ, ஆட்டையோ அறுத்து அதனை இறைச்சிக்கு விற்பது தடை செய்யப்படவில்லை. ஆனால் மாநிலத்திலும், மத்தியிலும் தங்களின் ஆட்சி நடக்கிறது என்ற திமிரில் ஒரு முஸ்லிம் கசாப்பு கடைக்காரரை அடித்து துன்புறுத்தி அந்த மாட்டை வணங்கு என்று கட்டாயப்படுத்தியுள்ளதைத்தான் இந்த காணொளியில் பார்க்கிறோம்.

இஸ்லாம் வன்முறையால் பரப்பப்பட்டது என்று ஓயாமல் பொய்களைக் கூறி வரும் சில இந்துத்வாவினர் இன்று அந்த வன்முறையை தங்கள் கைகளில் எடுத்துள்ளனர். சக மனிதனான தலித்தை மனிதனாகக் கூட மதிக்காத இந்தக் கூட்டம் மாட்டுக்கு பச்சாதாபப்படுவது கேலிக் கூத்தில்லையா? மாநில அரசும் மத்திய அரசும் என்ன செய்கிறது?

பிருகதாரண்யக உபநிஷத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டால் அறிவுள்ள குழந்தை பிறக்கும் என்று வருகிறதே.... அசுவமேத யாகத்தில் பல பசுக்களை வேள்வியில் பொசுக்கி அதனை உண்டதும் நீங்கள்தானே! அட கிறுக்கர்களே! உங்களுக்கு வசதிபட்டால் அறிவுள்ள குழந்தை பிறக்க மாட்டுகறி சாப்பிடுவீர்கள். யாகங்களை வளர்த்து மாட்டின் இறைச்சியை வஞ்சகமில்லாமல் புசிப்பீர்கள். ஒரு ஏழை முஸ்லிம் தனது வருமானத்துக்காக ஆட்டையோ மாட்டையோ அறுத்து உணவாக விற்றால் அதனை வன்முறையால் தடுப்பீர்கள். இந்துத்வாவின் முகம் எவ்வளவு கோரமானது என்பதை இந்த காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

1 comment:

Anonymous said...

எல்லாம் சரிதான், பதிலுக்கு நீங்கள் ஒரு பொய்யை சொல்ல வேண்டுமா இப்படி ?

"இஸ்லாம் வன்முறையால் பரப்பப்பட்டது என்று ஓயாமல் பொய்களைக் கூறி வரும் சில இந்துத்வாவினர்"

இந்தியாவில் முஸ்லிம்களின் ஆரம்ப கால ரத்த வெறியாட்டம் உலக பிரசித்தம் ஆயிற்றே ? முகமது காலம் முதல் இசிஸ் வரை அதுதானே நடக்கிறது.