Followers

Wednesday, April 29, 2015

'ஏடு சுமக்கும் கழுதைகள்'



'ஏடு சுமக்கும் கழுதைகள்'


தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச்சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச்சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக்கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்குஅல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

(அல்குர்ஆன் 62 : 5)


தவ்ராத் என்கின்ற வேதத்தைப் பெற்று அவ்வேதக் கருத்துக்களை நடைமுறையில் முறையாக பின்பற்றாத யூத சமுதாயத்தை அல்லாஹ் பொதி சுமக்கின்ற கழுதைக்கு உதாரணமாகக் கூறுகின்றான். கழுதையின் முதுகில் அழுக்கு மூட்டைகளை ஏற்றிவைத்தாலும் அது அழுக்கு மூட்டை என்பதை சிந்திக்காமல் கழுதை சுமந்து செல்லும். அது போல் அறிவு நிறைந்த புத்தகங்களை ஏற்றினாலும் அது அழுக்கு மூட்டையைப் போல் சுமந்துதான் செல்லுமே தவிர அதிலுள்ள கருத்துக்கள் ஆழமிக்கவை என்பதை கழுதை அறியாது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?என்றொரு பழமொழி கூட கூறுவார்கள். தான் முதுகில் சுமக்கும் பொருளின் மதிப்பை அறியாத மிருகம்தான் கழுதை. அது போன்றுதான் தவ்ராத் வேதத்தைப் பெற்று அதனை வாயளவில் மட்டும் படித்து விட்டு செயலளவில் பின்பற்றாமல் அதிலுள்ள கருத்துக்களை மாற்றியும் மறைத்தும் வந்த யூத சமுதாயத்தை அல்லாஹ் ஏடுகளின் மதிப்பை உணராமல் வெறும் பொதி மூட்டையாகச் சுமக்கும் கழுதைக்கு ஒப்பாகக் கூறுகிறான்.

இன்று நம்மில் பலர் குர்ஆனை நன்கு படித்திருப்பார்கள். நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளையும் நன்கு உள் வாங்கியிருப்பார்கள். ஆனால் மத்ஹப் என்ற மாயையில் வீழ்ந்து கிடப்பார்கள். இறந்தவர்களின் சமாதியில் தங்களின் தலையை சாய்ப்பார்கள். அப்படி செய்தால் என்ன தவறு என்றும் கேட்பார்கள். குர்ஆனின் ஒரு பகுதியை சொல்லி விட்டு மறு பகுதியை மறைத்து விடுவர். இவர்களைப் பார்த்தே இறைவன் குர்ஆனிலே 'ஏடு சுமக்கும் கழுதைகள்' என்கிறான்.

No comments: