Followers

Monday, April 27, 2015

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு!



எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு :

- புதிய நிர்வாகிகள் தேர்வு!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 16வது பொதுக்குழு ஈரோட்டிலுள்ள பிளாட்டினம் மஹாலில் 26.04.15 ஞாயிறு நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தவ்ஹீத் ஜமாஅத்தின் பைலாவின் படி மாநில மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தியது. மேலாண்மைக்குழு நியமனம் செய்யும் தேர்தல் அதிகாரி ஒருவர் தேர்தலை நடத்துவார் என்ற பைலா விதியின் படி மாநில மேலாண்மைக்குழு நிர்வாகம் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை தேர்தல் அதிகாரியாக நியமித்தது.

அந்த அடிப்படையில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக முன்னின்று புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தினார்.
அதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் :

மாநிலத் தலைவர் : ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி
மாநிலப் பொதுச் செயலாளர் : முஹம்மது யூசுப்
மாநிலப் பொருளாளர் : கலீல் ரசூல்
மாநிலத் துணைத் தலைவர் : எம்.ஐ.சுலைமான்
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்: தவ்ஃபீக்
மாநிலச் செயலாளர்கள் :
எம்.எஸ்.சுலைமான்
சிராஜுதீன்
ஆவடி இப்ராஹீம்
திருவாரூர் அப்துர்ரஹ்மான்
மயிலை அப்துர்ரஹீம்
இ.முஹம்மது
நெல்லை சையது அலி
நெல்லை யூசுப் அலி
சேப்பாக்கம் அப்துல்லாஹ்
இ.ஃபாரூக்

இந்த புதிய நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கின்றோம். தாவா பணிகளை வீரியமாக கொண்டு செல்ல வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
ஷம்சுல்லுஹா ரஹ்மானி
மாநில மேலாண்மைக்குழு தலைவர்

No comments: