Followers

Saturday, April 18, 2015

ஜமாலியின் புகாரை வாங்க மறுத்த கமிஷனர் ஜார்ஜ்!





நபிகள் நாயகத்தின் அடக்கத்தலத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள பச்சை நிற டூம் அன்னை ஆயிஷா அதனை வீடாக பயன்படுத்தியபோது இருக்கவில்லை. இது போன்று தனது அடக்கத்தலத்துக்கு மேல் கட்டடம் கட்டச் சொல்லி இறைத் தூதரும் சொல்லவில்லை. அதற்கு எதிராகத்தான் சொல்லியுள்ளார்கள். அவ்வாறு கட்டுபவர்களை நபிகள் நாயகம் சபித்துள்ளார்கள். முதன் முதலாக சுல்தான் கலாவூன் சாலிஹி என்ற ஆட்சியாளர் ஹிஜ்ரி 678ல் மரியாதை நிமித்தமாக மரத்தால் ஆன ஒரு டூமை நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தின் மேல் கட்டுகிறார். அதன் பிறகு சிமெண்டால் கட்டப்பட்டு வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு பிறகு ஹிஜ்ரி 1253ல் துருக்கி உதுமானிய சுல்தான் அப்துல் அல் ஹமீத் அந்த டூமின் மேல் பச்சை வர்ணத்தை பூசுகிறார். அதுவே இன்று வரை தொடர்கிறது. தற்போதய ஆட்சியாளர்களிடம் சவுதி அரேபியாவை ஒப்படைக்கும் போது 'தாங்கள் செய்வித்த மாற்றங்களை இடிக்க வேண்டாம் அப்படியே விட்டு வைத்திருங்கள்' என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். தராவீஹ் மெக்காவில் இருபது ரக்ஆத்துகள் தொழ வைக்கப்படுவதும் இதனை பின் பற்றியே. அந்த ஒப்பந்தத்தை மீற முடியாமல்தான் சவுதி அரசு அந்த பச்சை நிற டூமை தகர்க்காமல் விட்டு வைத்துள்ளார்கள். காவலர்களையும் அங்கு நிறுத்தி வணங்க முற்படுபவர்களை தடுத்து நிறுத்தி பள்ளிக்கு தொழ அனுப்புவார்கள். எனவே மதினாவில் உள்ள அந்த டூமுக்கு எந்த புனிதத்துவமும் இல்லை என்பதை இதிலிருந்து விளங்குகிறோம். இதை சுட்டிக் காட்டித்தான் டிஎன்டிஜே யின் தலைவர் சையது இப்றாஹிம் 'இஸ்லாமிய சட்டங்களின் படி அந்த டூம் இடிக்கப்பட வேண்டும்' என்று கூறியது. இதனை இவர் இன்று புதிதாக சொல்லவில்லை. பல அறிஞர்கள் இதற்கு முன்பே மதினாவில் உள்ள டூமை இடிக்க வேண்டும் என்ற மார்க்க கட்டளையைக் கொடுத்துள்ளனர்.

தர்ஹாக்களை வைத்தே பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் மார்க்க கோமாளி ஜமாலி கமிஷனர் ஜார்ஜிடம் சென்று சையது இப்றாஹிமை கைது செய்ய புகார் அளித்தாராம். ஆனால் அதற்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். வெளி நாட்டில் உள்ள ஒரு கட்டிடத்தை பற்றிய விமரிசனங்களுக்கெல்லாம் இங்குள்ள காவல்துறை எதன் அடிப்படையில் கைது செய்யும் என்ற அடிப்படை அறிவு கூட ஏழு வருடம் மதராஸாவில் ஓதிய இந்த மார்க்க கோமாளிக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. :-) இது போன்ற இரண்டாந்தர ஆலிம்களிடம் மார்க்க அறிவும் இல்லை. உலக அறிவும் இல்லை. ஜமாலி போன்றவர்கள் மார்க்கத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் என்பது தெரிந்தும் இவருக்குப் பின்னாலும் இன்னும் ஒரு சிலர் இருந்து வருவது மேலும் ஆச்சரியத்தை தருகிறது.

சையது இப்றாஹிம் சில நேரம் வார்த்தைகளை சற்று கடுமையாக பிரயோகிப்பதை நானும் ஆதரிக்கவில்லை. அதனை பல பதிவுகளில் சுட்டிக் காட்டியும் இருக்கிறேன். ஆனால் அதனை காரணமாக வைத்து அவர் சொல்லும் எல்லாவற்றிலும் குறை கண்டு அதனை பதிவுகளாக்கி சிலர் மகிழ்கின்றனர். ஒருவர் தனது பின்னூட்டத்தில் 'உணர்வு அலுவலகத்தில் பத்திரிக்கை பண்டல் போட்டுக் கொண்டிருந்தவர் சையது இப்றாஹிம்' என்று கிண்டலடிக்கிறார். பத்திரிக்கை பண்டல் போட்டுக் கொண்டிருந்தவர் மார்க்கம் சொல்லக் கூடாதா? இது போன்ற சாமான்யர்களையும் மார்க்க மேதைகளாக மாற்றியது குர்ஆனின் எளிய நடை என்றால் மிகையாகாது. எனவே விமரிசனம் வையுங்கள். அது ஆக்கபூர்வமாக இருக்கட்டும்.

வீண் அபாண்டங்களையும் பழிச் சொற்களையும் சுமத்தி தவ்ஹீத் ஜமாத் பிரசாரகர்களுக்கு மேலும் நன்மையை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஏனோ அவர்கள் அறிவதில்லை. :-) தவறிலும் ஒரு நன்மை என்று இதனை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

No comments: