Followers

Sunday, April 12, 2015

மாட்டிறைச்சி தடையால் வன விலங்குகளுக்கும் உணவு தட்டுப்பாடு!




மாட்டிறைச்சித் தடையால் பொருளாதார இழப்பும் வேலைவாய்ப்புப் பாதிப்பும் ஏற்படும் என்று லண்டன் கார்டியன் இதழ் கூறுகிறது.

மகாராட்டிர மாநிலத்தில் பசுக்களை புனிதம் என்று அறிவிப்பு மாட்டி றைச்சிக்குத் தடை விதிக் கப்பட்டுள்ளதானது முசுலீம்கள், கிறித்தவர்கள் மற்றும் ஏராளமான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு மாட்டிறைச்சித் தடையின்மூலமாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நித்தின் தரோட் என்பவர் உரிய நேரங்களில் மழைப் பொழிவு இன்மையால் ஏற்பட்ட வருவாய் இழப்பால், தன்னிடம் உள்ள மாடுகளை விற்பனை செய்து கிடைக்கும் பணம், தன் சகோதரியின் திருமணத்தை நடத்த உதவியாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால், மோடியின் இந்து தேசியவாதக் கட்சியான பா.ஜ.க. ஆளும் இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான மகாராட்டிர மாநிலத்தில் பசு மாடு மற்றும் எருது, காளைகளைக் கொல்வதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதன் காரணமாக மாடுகளை உரிய விலை கொடுத்து வாங்கு பவர்களை அவர் தேடுவதற்கு போராட வேண்டி யுள்ளது.

வேதனையுடன் தரோட் கூறும்போது, இப்போதைக்கு நான் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். மும்பையிலிருந்து 370 மைல்கள் தொலைவில் உள்ள அகோலாவில் உள்ள அவர் குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் வயதானவர்களாக 5 பேர் உள்ளனர். அவர் வருவாயை மட்டுமே குடும்பம் நம்பியுள்ளது.

மோடியின் பாஜக, இந்துக்களால் வழிபடக் கூடியது, பசுவைப் பாதுகாப்பது என்று கூறிவருவதால், மகாராட்டிர மாநிலத்தில் இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களிடம் உள்ள விலங்குகளை விற்பனை செய்ய முடியாதவகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை மேலும் மற்ற மாநிலங்களிலும் பரவிவிடும்.

விலங்குகளும் பட்டினி

மும்பை தேசியப் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் ஆகிய விலங்குகளின் வழமையான உணவான மாட்டிறைச்சி வழங்கப்படாமல், கோழி, ஆட்டிறைச்சி உணவாக வழங்கப்படுகிறது.

இறைச்சிக்கூடங்கள் இதுபோன்ற பாஜகவின் அறிவிப்பை எதிர்த்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடையடைப்பு செய்தன.
இந்தியாவில் இரண்டாமிடத்தில் உள்ள மாநிலத்தில் பசுவைக் கொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும மாநிலங் களான ஜார்கண்ட் மற்றும் அரியானா மாட்டிறைச்சி வணிகத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

முசுலீம்கள், கிறித் தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோர் குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான இறைச்சியாக உண்கிறார்கள். இதனாலேயே பாகுபாடுகளை உருவாக்கும் வகையில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்துள்ளது பாஜக அரசு. தேசிய அளவில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளில் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.

மாட்டிறைச்சி வணிகம் மற்றும மாட்டிறைச்சி சார்ந்த தோல் பொருள்கள் உள்ளிட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ள முசுலீம்கள் பல்லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகளை இழக்கும்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த வணிகத்தில் உள்ள தலைவர்கள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மகாராட்டிரத்தில் பாராமதிப் பகுதியில் கால்நடைகளை விற் பனை செய்து வருபவரான ஆசிப் குரேஷி என்பவர் கூறுகையில், என்னுடைய தொழில் முற்றிலும் அழிந்து விட்டது. விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளை குறைந்த விலைக்கு தருவதற்கு முன்வந்துவிட்டார்கள். ஆனால், வெட்டுவது சட்டவிரோதம் என்று ஆனபிறகு என்னால் அந்தக் கால்நடைகளை வாங்கமுடியவில்லை என்று கூறினார்.
ஆளும் பாஜக அரசின் மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக முழு வேலை நிறுத்தப் போராட்டத்தை இறைச்சிக்கடைக்காரர்கள் செய்தார்கள். தடை இல்லாத எருமை மாடுகளையும் வெட்டாமல் போராடி வந்தனர். இந்துக்களில் பசுவை புனிதம் என்பவர்கள் எருமையைப் புனிதம் என்று கூறுவதில்லை.

பாஜக ஆளும் பிற மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடையைக் கட்டாயப்படுத்தவில்லை. பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் தடையைக் கொண்டுவருவதற்கு மறுத்த அம்மாநில முதல்வர் 40 விழுக்காட்டினர் உணவாக சாப்பிடுவதை, சிறுபான்மையர் உரிமையை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்து தேசியவாதக் குழுக்கள் பாஜகவுடன் இணைந்து அதிக அளவில் கால் நடைகளுக்கான முகாம்களை அமைத்து, விவசாயிகள் நீண்ட காலத்துக்கு பராமரிக்க முடியாத பசுவையும், மற்ற வீட்டு விலங்குகளையும் பராமரிக்கவும் வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

300 மில்லியன் கால்நடைகள்

இந்தியாவில் சுமார் 300 மில்லியன் கால் நடைகள், வயதான உணவுக்கு மட்டுமே பயன் படக்கூடிய பசுக்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களின் வீதிகளில் திரிய விடப்படுகின்றன. அப்படி தெருவில் விடப் படும் மாடுகளின் எண்ணிக்கை மகாராட்டிர மாநிலத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் ஆகும். மாட்டிறைச்சி வணிகத்தைப் பொறுத்தவரை விவசாயிகள் அந்த மாடுகளை விற்க முடியாமல் அப்படியே தெருவில் திரியும்வகையில் பராமரிக்காமல் கைவிட்டு விடுகின்றனர்.

தகவல் உதவி
Theguardian
23-03-2015


http://www.theguardian.com/world/2015/mar/23/india-beef-ban-jobs-economy-maharashtra-cows

No comments: