Followers

Saturday, April 11, 2015

'கடவுளையும் அரசையும் நம்பாதே' - விவசாயிகளுக்கு நிதின் கட்கரே அறிவுரை




மஹாராஷ்ட்ராவில் யூனியன் மினிஸ்டர் நிதின்கட்கரி ஒரு விழாவில் பேசும் போது 'விவசாயிகள் கடவுளையும் அரசையும் நம்பிக் கொண்டிருப்பதை கை விட்டு விட்டு தங்களின் சொந்த அறிவை பயன்படுத்தி அறிவியல் கண்டு பிடிப்புகளையும் உபயோகித்து வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும்' என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த கருத்தை ஒரு நாத்திகர் சொல்லியிருந்தால் நாம் ஆச்சரியப்படப் பொவதில்லை. ராமனின் பெயரை உபயோகப்படுத்தி இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிளவுபடுத்தி அதன் மூலம் ஆட்சியைப் பிடித்த பிஜேபியின் முக்கிய தலைவர் பேசுவது யாரை ஏமாற்ற? ஆக... இவர்களிடம் இறை பக்தி என்பது சிறிது கூட கிடையாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ராம பக்தி, இந்து மத பக்தி என்பதெல்லாம் ஓட்டுக்காக இவர்கள் போடும் பகல் வேஷம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

மஹாராஷ்ட்ராவின் விதர்பா நகரில் மோடி பதவியேற்றதற்கு பிறகு 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறுமையினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணத்தை கண்டு பிடித்து அதை தீர்க்க வேண்டிய இடத்தில் உள்ள நிதின் கட்காரி 'அரசையும் நம்பாதே.. கடவுளையும் நம்பாதே' என்று சொல்வது மனிதத் தன்மையற்ற பேச்சு அல்லவா? அரசை நம்ப வேண்டாம் என்றால் இவர்கள் யாருக்காக ஆட்சி செய்கிறார்கள். அம்பானிக்கும், அதானிக்கும் சேவகம் செய்யவா ஏழை விவசாயி இவர்களை தேர்ந்தெடுத்தான். ஏழை விவசாயியின் நிலத்தை கையகப்படுத்தி அதனை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் விற்று காசு பார்க்கவே மோடி அரசு முயல்கிறது.

'மக்கள் புரட்சி' என்று கேள்வி பட்டுள்ளோம். அதனை மோடியின் ஆட்சியிலேயே கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது.

இந்த நாட்டையும் மக்களையும் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
11-04-2015

MAHARASHTRA: Advising farmers to stop relying on God or government, Union Minister Nitin Gadkari said they need take charge of their own lives to improve the lot.

-http://www.newindianexpress.com/nation/Dont-Rely-on-God-or-Government-Gadkari-Tells-Farmers/2015/04/11/article2758177.ece

No comments: