Followers

Thursday, April 23, 2015

இறை தேடல் அவசியமில்லாத ஒன்றா?

திரு மோகன்!

//இஸ்லாமியர் எல்லோருக்கும் ஒரே பெயர் வைக்கவேண்டியது தானே ?எதற்கு இத்தனைப் பெயர்கள் !எல்லோரும் ஒரே உணவை உண்ணவேண்டியது தானே !எல்லோரும் ஒரே முகம் இல்லை உடையணிவில்லை ஒரே நோயும் இல்லை ! மதத்தை மாற்றியதோடு வியாதிகளையும் ஒரே மாதிரி மாற்றிக்கொள்ளலாமே ? பேதம் தேவைப்படுகிறதல்லவா ?//

பெயர்கள் வெறு வேறாக இருப்பதும் மனிதர்களின் நிறம், முகம் போன்றவை வேறு வேறாக இருப்பதும் நாம் ஒருவரையொருவர் அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவே! ஒரே முக சாடையில் உள்ள இரு கதாநாயகர்கள் நம் சினிமாக்களில் எத்தனை ஆள் மாறாட்டம் செய்கின்றனர். நிஜத்திலும் அவ்வாறு நடப்பதை நாம் அறியாதவரல்ல. எனவே இந்த வித்தியாசங்கள் இந்த பூமிக்கு அவசியமாகிறது.

ஆனால் நம்மை படைத்த இறைவன் ஒருவனைப் பற்றிய சிந்தனையை இதோடு போட்டு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. நமக்கு இறைவன் கொடுத்த அறிவை உபயோகப்படுத்தி அவன் நமக்களித்த இறை வேதங்களை ஆய்வுகள் செய்து நம்மைப் படைத்த இறைவன் யார் என்ற ஆய்வில் இறங்க வேண்டும். ஒரு சட்டை வாங்குவதற்கு எத்தனை கடை ஏறி இறங்குகிறோம். ஒரு நகை வாங்க 10 கடைகளாவது ஏறி இறங்குவோம். அற்ப பொருட்களுக்கே இவ்வளவு நேரம் செலவழிக்கும் நாம் நமக்கு அழகிய உடலை வழங்கி சிறந்த உறவினர்களை வழங்கி கௌரவமான வேலையையும் தந்து பொருளாதாரத்தில் நம்மை சிறப்பிக்க வைத்துள்ள அந்த இறைவனை தேடி அவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

நேரமில்லை என்றும் சொல்ல முடியாது. சராசரியாக ஒரு மனிதன் வேலை பார்க்கும் நேரம் 8 மணிகளே. மற்ற 16 மணி நேரங்களில் நம்மை படைத்த இறைவனை தேட தினம் ஒரு மணி நேரம் நம்மால் செலவழிக்க முடியாதா? சிந்தித்து பாருங்கள் வழி பிறக்கும்.

//சூழ்ச்சி இராமகோபாலன் =பெரும் சூழ்ச்சி அல்லாஹ
ஆகவே இதனபடி இந்துகள் சின்ன சூழ்ச்சிகாரர்கள் !இஸ்லாமியர்கள் பெரும் சூழ்ச்சிகாரர்கள் என்பது நிறுபனமாகின்றது !//

இறைவனுக்கு ராம கோபாலன் என்ன? அனைத்து இந்துத்வாவாதிகளும் ஒன்று திரண்டாலும் ஒரு நிமிடத்தில் அவர்களை அழித்து விடும் சக்தி கொண்டவனே! அதே நேரம் நீங்கள் கூறும் விதி என்ற ஒன்றை இறைவன் நமக்கு ஏற்படுத்தியுள்ளான். அவன் வகுத்தளித்த விதியின் படி காரியங்கள் நடப்பதால் இறைவன் அவர்களை விட்டு வைத்துள்ளான்.

அதே நேரம் தன்னுடைய அடியார்கள் தன்னிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனையை ஏற்று எழுதிய விதியை தானே மாற்றி அமைப்பதாகவும் கூறுகிறான். சூழ்ச்சி என்பது மறைமுகமாக ஒருவனை தாக்குவது. அவன் அறியாமல் அவனை வீழ்த்தும் கோழைத்தனம். அவன் எடுத்த அந்த அஸ்திரத்தையே இறைவனும் எடுப்பதாக இங்கு கூறுகிறான். இதனால் அந்த இறைவனுக்கு அதற்கு மேல் சக்தியில்லை என்ற முடிவுக்கும் நாம் வந்து விடக் கூடாது.

No comments: