Followers

Monday, April 27, 2015

பள்ளி நிர்வாகம் ஏவக்துவவாதிகளின் கைக்கு மாறுமா?

பள்ளி நிர்வாகம் ஏவக்துவவாதிகளின் கைக்கு மாறுமா?

சகோ முஹம்மது ஆஷிக்!

//அவங்களே இந்தாங்கன்னு ததஜ கையில் தந்தாலும்... வேணாம்... எங்களுக்கு சண்டை போடவும் விவாதிக்கவும் மல்லுக்கட்டவும் ஆளில்லாம போயிடும்..ன்னு சொல்லி ததஜ வாங்கிக்காது.//

நாங்க அப்படில்லாம் சொல்ல மாட்டோம்.... தயவு செய்து நிர்வாகிகளிடம் பேசி அனைத்து பள்ளிகளையும் தவ்ஹீத் ஜமாத் வசம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யவும். புண்ணியமாக போகும் :-) நன்மைகளும் சேரும்.

எங்க நிர்வாகத்தில் சுன்னத் ஜமாத் பள்ளிகள் வந்தால் அன்று மதினா மக்கா பள்ளிகளில் எவ்வாறு நபிகள் நாயகம் நிர்வாகத்தையே பள்ளியில் வைத்து நடத்தினார்களோ அத்தகைய நிலைக்கு பள்ளியை மாற்றுவோம். பள்ளிக்கு அருகிலேயே சமாதிகளை கட்டி வைத்துக் கொண்டு தொழுத மறு நிமிடம் தர்ஹாவில் சென்று பிரார்த்திக்கும் பழக்கம் முதலில் ஒழிக்கப்படும். அனைவரின் ஒப்புதலின் பேரில் அந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்படும்.

இன்று தவ்ஹீத் பள்ளிகளில் கல்லூரி மாணவர்களை அதிகம் காண்கிறேன். மஹரிபிலிருந்து இஷா வரை அந்த இளைஞர்கள் குர்ஆனும் கையுமாக அமர்ந்திருப்பதும் சந்தேகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதும் எனக்கு அன்றைய சஹாபாக்களை நினைவுபடுத்தியது. விடுமுறை நாட்களில் பெரும்பாலும் அந்த கல்லூரி மாணவர்கள் ஏகத்துவ பள்ளிகளிலேயே தங்கள் ஓய்வு நேரத்தை கழிக்கின்றனர். இலவச குடி நீர் வைப்பது, சாராயத்துக்கு எதிராக போர்டுகள் வைப்பது, அஸரிலிருந்து மஹ்ரிப் வரை பள்ளி வளாகங்களிலேயே கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது என்று ஏகத்துவவாதிகளாக மாறிய இளைஞர்களை பார்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

ஆனால் இன்று சுன்னத் ஜமாத் பள்ளி வாசல்களின் பெரும்பாலான நிர்வாகம் ஐந்து வேளை தொழுகாத பெரும் பணக்காரர்களின் கைகளில் உள்ளது. ஏகத்துவ வாதிகளின் கைகளில் நிர்வாகம் வந்தால் இந்த நிலை மாறி ஐந்து வேளை தொழக் கூடிய வட்டி வாங்காத, விபசாரம் புரியாத, சாராயம் அருந்தாத, பள்ளி வாசல் சொத்தை ஆட்டய போடாத திறமைமிக்கவர்கள் பள்ளியின் நிர்வாகிகளாக வருவர். ஏனெனில் இன்று பெரும்பாலான சுன்னத் ஜமாத் பள்ளி நிர்வாகிகளிடம் இஸ்லாமிய நடவடிக்கைகள் முற்றிலுமாக அழிந்துள்ளது. சில சுன்னத் ஜமாத் பள்ளி வளாகங்களில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சாராயம் அருந்தும் கொடுமையும் நடந்து வருகிறது.

இவை எல்லாம் மாறி நபிகள் நாயகம் காலத்திய சூழல் பள்ளிகளில் காண விரும்பினால் ஹனபி, ஷாபி, ஹம்பலி, மாலிக்கி என்று சாதி சங்கங்களைப் போன்று பள்ளி பெயர்கள் இல்லாமல் தவ்ஹீதை பறை சாற்றும் பள்ளிகளாக மாற ஒரே வழி பள்ளியின் நிர்வாகம் ஏகத்துவ வாதிகளின் கைகளுக்கு மாறுவதே ஆகும்.

முன்பு ஊருக்கு இரண்டு ஏகத்துவ வாதிகள் இருந்தனர். தற்போது ஊரில் சரிபாதி ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் உள்ளனர். இன்னும் ஒரு இருபது ஆண்டுகளில் 90 சதவீதமாக ஏகத்துவவாதிகள் மாறியவுடன் மத்ஹப் (சாதி) பெயர்களால் இயங்கும் அனைத்து பள்ளிகளும் ஏகத்துவ பள்ளிகளாக மாறும் இன்ஷா அல்லாஹ்.

தமிழகத்தைப் பொருத்த வரை அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

1 comment:

Anonymous said...

ஏகத்துவ வாதிகள் யார் என்று அல்லாஹ்விற்கும் அவனது ரசூலுக்கும் தெரியும்