Followers

Friday, April 17, 2015

நபிகள் நாயகத்தின் சில அறிவுரைகள்!

நபிகள் நாயகத்தின் சில அறிவுரைகள்!

'இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் ' 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய பயணம் இறைவனும் அவனது தூதரும் சொன்ன கட்டளையின்படி அமையுமோ அவரின் பயணத்தை அவ்வாறே இறைவன் கருதுவான். மேலும் எவருடைய பயணம் உலகத்தை குறிக்கோளாக கொண்டிருக்குமோ அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் நோக்கமாக இருக்குமோ அவர் நினைத்ததற்க்கேற்பவே அவரது பயணம் அமைந்து விடுகிறது.'

அறிவிப்பவர் உமர் கத்தாப்

ஆதாரம் புஹாரி 54

இந்த நபி மொழியிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

1. நாம் செய்யும் எந்த காரியத்திற்கும் இறைவனின் பொறுத்தம் இருக்கிறதா என்று தேர்ந்தெடுத்து செய்தால் அதற்குரிய கூலியை இறைவன் தந்து விடுகிறான். அது வணக்கமாகவும் கருதப்படுகிறது.

2. எண்ணங்களின் பிறப்பிட்ம் உள்ளமாகும். அந்த உள்ளத்தை தூய்மையாக்கி செய்யும் காரியத்தை இறைவன் விரும்புகிறான். அதற்கான கூலியையும் இந்த உலகிலும் மறு உலகிலும் தருகிறான்.


இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் : 'மென்மை எதில் இருந்தாலும் அந்த காரியத்தை அந்த மென்மை அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும்'

-அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா
ஆதாரம்: முஸ்லிம் 2594

பதிவு எழுதுதல், அழைப்புப்பணி, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை நேர்வழிப்படுத்துதல் என்று எந்த காரியத்திலும் மென்மையான முறையையே நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த நபி மொழி நமக்கு கற்றுத் தருகிறது. குறிப்பாக அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு மென்மையும் பொறுமையும் அவசியமாகும். சொல்லவரும் விஷயத்தை சற்று கடுமையாக சொன்னோம் என்றால் கேட்பவர் கூட அலட்சியம் செய்து சென்று விடுவர். தற்போது இணையத்தில் ஒரு இயக்கத்தவர் மற்ற இயக்கத்தவரைப் பற்றி அவதூறு பெசுவதும் நரகல் நடையில் ஏசிக் கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. மேற்கண்ட நபி மொழிகளை பார்த்து தங்களை அந்த நபர்கள் திருத்திக் கொள்வார்களாக!

1 comment:

இந்தியன் said...


அய்யா, மற்றப் பதிவுகளை விட,இந்த மாதிரியான பதிவுகளை அதிகம் எழுதுங்கள்.