Followers

Thursday, April 09, 2015

மூக்கின் மேல் அடையாளம் - வியக்க வைக்கும் குர்ஆன்



'அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் 'முன்னோர்களின் கட்டுக் கதைகள்' எனக் கூறுகிறான்.

'அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்'

-குர்ஆன் 68:15,16


நாளை மறுமையில் ஏக இறைவனை மறுத்தோரை அனைத்து மக்களின் முன்னாலும் தனியாக அடையாளப்படுத்த அவர்களின் மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்கிறான் இறைவன்.

மனிதனுக்கு அடையாளமிட எத்தனையோ இடங்கள் இருக்க இறைவன் மூக்கை பிரதானமாக ஏன் சொல்ல வேண்டும்?

மனிதனைத் தனியாக வேறுபடுத்திக் காட்ட முக்கிய அடையாளங்கள் உள்ளன. ஒன்று ரேகைகள். இது பற்றி நமக்கும் தெரியும். இதை அனைவராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆயினும் ஆய்வு செய்து எந்த மனிதனின் ரேகை என்பதைக் கண்டு கொள்ளலாம். ஒருவரின் ரேகை போல் இன்னொருவரின் ரேகை இருக்காது. இன்னொன்று கண்கள். மற்றது காதுகள். இவற்றிலிருந்தெல்லாம் ஓரளவு மனிதனை பிரித்து அடையாளப்படுத்தலாம்.

அனைவரும் தெரிந்து கொள்ளும் மற்றொரு அடையாளம் மூக்கு. எவ்வளவு நெருக்கமான மனிதராக இருந்தாலும் மூக்கை மறைத்துக் கொண்டால் துல்லியமாக இன்னார் தான் என்று அடையாளம் காண முடியாது. ஒரு மனிதனின் மூக்கானது தோராயமாக 10000 மணம் மற்றும் நாற்றங்களை வகைப்படுத்தும் விதமாக மிக உயர்ந்த தொழில் நுட்பத்தில் படைக்கப்பட்டுள்ளது.

கைரேகை மூலம் ஒருவரைக் கண்டுபிடிப்பதைவிட கண்களைக் கொண்டு அடையாளப்படுத்துவதை விட மூக்கைப் பல கோணங்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் எந்த மனிதரையும் துல்லியமாகக் கண்டறியும் போட்டோ பேஸ் என்ற தொழில் நுட்பம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பத் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் டாக்டர் ஆட்ரியன் ஈவின்ஸ் பல ஆய்வுகளை செய்து ஒரு மனிதனை அடையாளப்படுத்த மூக்கு எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது என்ற அய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். ஒரு மனிதனின் முழு முகத்தை ஸ்கேன் செய்து உண்மையை கண்டறிவதை விட 3டி தொழில் நுட்பத்தின் மூலம் மூக்கை மட்டுமே பிரதானமாக ஸ்கேன் செய்து மிக விரைவில் ஒரு மனிதனை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதிலிருந்து 'மூக்கின் மேல் அடையாளமிடுவோம்" என்ற சொல் எவ்வளவு பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இது இறை வேதம் தான் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சான்றாக நமக்கு அமைந்துள்ளது.

தகவல் உதவி
news.bbc.co.uk/2/hi/science/nature
02-03-2010

http://news.bbc.co.uk/2/hi/science/nature/8543292.stm

Scientists are developing ways to identify people by physical features, like intricate patterns in the eyes. But some of these techniques require the person to step close and stand still—which criminals may not do willingly. That's one reason why engineer Adrian Evans, of the University of Bath in England, turned to the nose.

Evans:
Noses are very hard to cover up without drawing suspicion to yourself. So they're actually quite easy to capture with non-cooperative subjects.

He and his colleague Adrian Moorhouse analyzed 3-D images of 40 people. By measuring just three specific aspects of a nose, they were able to narrow down the possible matches much faster than a full face-recognition scan. The trade-off is that it's harder to make a one-to-one match. So the system may be best used to quickly flag suspects for further scrutiny. I'm Bob Hirshon for AAAS, the Science Society.


http://sciencenetlinks.com/science-news/science-updates/nose-biometrics/

http://news.bbc.co.uk/2/hi/science/nature/8543292.stm

2 comments:

Anonymous said...

// But some of these techniques require the person to step close and stand still—which criminals may not do willingly. That's one reason why engineer Adrian Evans, of the University of Bath in England, turned to the nose.//

கிரிமினலை அடையாளம் காணவும் இறைமறுப்பாளரை அடையாளம் காண
என எத்தனை விவரங்கள். நான் மூக்கின் மேல் விரலை வைத்துவிட்டேன்.
மக்களே சைணஸ் ஆபரேசன் யாரும் பண்ணாதீங்க. உங்கள் அடையாளம் மாறிவிடலாம்.

பிசாசுகுட்டி said...

இதனால் தான் தாலிபான்கள் பெண்கள் மூக்கை அறுக்கின்றனரோ..