Followers

Sunday, August 09, 2015

திருவள்ளுவர் நாத்திகரா? ஆத்திகரா? இந்துவா? இஸ்லாமியரா?

ஒரு வடமாநிலத்துக்காரர் ஹிந்தியைத் தாய்மொழியாகக்கொண்டிருப்பவரான தருண் விஜய் ஒரு பி ஜே பி எம் பி. ஆர் எஸ் எஸ் பத்திரிக்கையான அபசர்வை பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர். இவர் தமிழைப்படித்திருக்கிறார். எல்லாரிடமும் வள்ளுவர் இந்து என்றும் தமிழரின் தாய்மதம் இந்துவே என்றும் பரப்புரை செய்து வருகிறார்.இராஜ இராஜ சோழன் வைதீகமதத்தை தழைக்கச்செய்தவன் என்று ஆர் எஸ் எஸ்காரர்கள் விழா எடுக்கிறார்கள்.

எனவே வள்ளுவர் இந்து என்று நிலைநாட்டுவது இன்றைய இந்துத்வாக் கொள்கையாகும். எனவே ஓர் அரிசோனன், இராமா பாண்டியன் போன்றோர் வள்ளுவரை ஓரிறைக்கொள்கையுடையோராக காட்டினால் இசுலாமியர் போலிருக்கிறதே என்று பயப்படுகிறார்கள். தமிழர்களில் இந்துக்களுக்கே அதுவும் வைதீக இந்துக்களுக்கே வள்ளுவர் என்பதே இவர்கள் கொள்கை.

பாவம் வள்ளுவரின் நிலைமை அரசியல் பகடைகாயாகிவிட்டது....


தமிழன் எதையும் செய்து சிரிப்பு மூட்டட்டும். மாலை போடட்டும் இல்லை மாலையை எடுக்கட்டும்.

ஆனால் வள்ளுவரை ஏன் வடவனுக்கு கொடுத்து இந்துத்வா சிறைக்கூண்டில் அடைக்க வேண்டும். நாளை இந்து என்று மட்டும் சொல்லி நிற்கமாட்டான் அவன். நாங்கதான் தமிழனுக்கு எல்லாமே சொல்லித்தந்தோம். கூமுட்டைப்பயலுக என்றால் சிரிக்கலாமே! இந்துத்வாவுக்கு மானத்தை இழக்கக்கூடாது. என்னவென்றாலும் இங்கேயே அடித்துக்கொள்ளுங்கள்.ஒன்றும் குடிமுழுகாது. ஆனால், மூன்றாம் நபரை உள்ளே விடாதீர்கள். வள்ளுவர் உங்கள் சொத்து. மற்றவனுக்குக் கோட்டை விடாதீர்கள். இன்றைக்கு வள்ளூவர் இந்து என்பான். நாளை அவர் ஹிந்திக்காரர் என்பான். போதுமா?


No he is not an atheist. அவர் நாத்திகரென்று சொல்ல அவர் கடவுள் மறுப்பு என்று எதையும் எழுதவில்லை.அவர் என்னைப்போல என்று நான் நினைக்கிறேன். அதாவது கடவுள் நம்பிக்கை உடைய நாங்கள், கடவுள் பெயரால் அரங்கேறும் அயோக்கியத்தனங்களை எதிர்க்கிறோம். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் என்கிறோம். மததத்தைக்காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் சண்டாளர்களைக்கண்டு கொதிக்கிறோம். இந்தசண்டாளர்களை வளரவிட்டு உழைப்போரின் உணவைப்பறிக்கும் கூட்டத்தை ஒன்று செய்யாமல் இருக்கிறாயா என்று இறைவனுக்கே சாபம் விடுகிறோம். இப்படி மக்களை அலையவிட்ட நீயும் அலைந்து கெடுவாய என்று இறைவனைப்பழிக்கிறோம் (இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.)

மக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர் தீண்ட்படாதார் என்று பிறப்பிலேயே எல்லாம் இருக்கிறது. அதைச்செய்தவன் ஆண்டவன் என்று ஊத்தக்கதை விட்டு ஊரை ஏமாற்றுவோரைப்பார்த்து. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்கிறோம். மனந்ந்தூயமை செயல் தூய்மையிருந்தால் போதும் இறைவன் வேறெதையும் விரும்புவதில்லை என்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல் நீர பெற என்கிறோம். அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்று டுபாக்கூர் ஆசாமிகளை எச்சரிக்கிறோம் ;அதே சமயம், இறைவன் உண்டு. கற்றதாலாய பயன் அவனின் திருவடி தொழுதலே என்கிறோம்.

ஆக, வள்ளுவர் ஒரு கடவுள் நம்பிக்கையாளர். ஆனால் அந்நம்பிக்கை மக்களுக்குப் பலனைத் தரவேண்டுமென்று நம்புகிறவர். மக்களுக்கு நன்மையில் என்றால் அவ்விறை நம்பிக்கை தேவையில்லை.

-BS

1 comment:

Dr.Anburaj said...

சாியான வயித்தொிச்சலில் தாங்கள் எழுதுகின்றீா்கள்.திரு.தருண் அவர்கள் ஒரு எம்பி அவருக்கு திருவள்ளுவா் குறித்து மிகுதியான ஆா்வம். இது போன்ற நடவடிக்கைகள் நிறைய தேவை. மொழி வட்டார உணா்வுகள் மிகுதியாக துணடப்படும் வேளையில் தேச ஒற்றுமைக்கு இது பொிதும் பயன்படும்.