Followers

Tuesday, August 02, 2016

யோகா மற்றும் துறவறம் பெயரில் நடக்கும் மோசடி!





கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன்? துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை? துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை.

மனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது.
ஒருவன் கடவுளுக்கென்று தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக்கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை.

ஒரு மனிதன் ஆன்மீகத்தில் கூடுதலான ஈடுபாடு வைத்திருந்தால் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அவரை வழிபடவும் துணிந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட நம்பிக்கையை தான் பலரும் தவறாக பயன்படுத்திக்கொள்ள துணிகின்றனர்.
பல கோணங்களில் பலவிதமான தவறுகள் வெளிவருவதை செய்திகளாக தினமும் படித்துகொண்டு தான் இருகின்றோம் .

ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் சரி மனிதன் கடவுளாக ஆக முடியாது. மனிதன் எந்த நிலையிலும் மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

-----------------------------------------------------

இனி விகடனில் வந்த ஒரு கட்டுரையைப் படிப்போம்.....

"பிரம்மன் என்றால் தெய்வீகம், சார்யா என்றால் பாதை. தெய்வீகப் பாதையில் நடப்பவர்கள்தான் பிரம்மச்சாரிகள். யோக மார்க்கமான துறவறத்தில், முழு உறுதியாக இருக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிஷ்யர்கள், பிரம்மச்சரிய தீட்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த பாதையில் செல்பவர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும்," என அறிவித்து சன்னியாசி முறையை நடத்தி வருகிறது கோவையில் உள்ள ஈஷா யோகா மையம்.

ஆனால், 'தங்களது மகள்களை மூளைச்சலவை செய்து, மொட்டை அடித்து சாமியார்களாக்கி விட்டதாக கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கதறியிருக்கின்றனர் கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதி. கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் காமராஜ், அவரது மனைவியும். ஈஷா யோகா மையத்தை மையம் கொண்டு கிளம்பிய இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது இப்போது.

யோகா வகுப்புக்கு வரும் தன்னார்வலர்களை ஆசிரமத்துக்கு அழைத்து, அவர்களை சூழ்நிலையால் ஆக்கிரமித்து, மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கி, அவர்களுக்கு மொட்டை போட்டு சாமியார் ஆக்கி விடுவதாக புகார்கள் எழுவது, ஈஷா யோகா மையத்தைப் பொறுத்தவரை புதிதல்ல. காவல்நிலையத்திற்கு செல்லும் புகார்கள் அங்குள்ள குப்பைக் கூடைக்கு சென்றுவிடுவது கடந்தகால நிலைமை. அரிதாவே ஓரிரு புகார்கள் அதிகாரிகள் வரை செல்லும்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜ். தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த இவர், தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி சத்தியஜோதி, மகள்கள் கீதா, லதா ஆகியோருடன் யோகா கற்க ஈஷா மையத்துக்கு சென்றிருக்கிறார். 3 நாள் நடந்த யோகா வகுப்பில் கீதாவும், லதாவும் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.

மகள்களுக்கு ஈஷா விரித்ததா வலை?

பின்னர் ஒரு வார வகுப்பு, 10 நாட்கள் வகுப்பு, ஒரு மாத வகுப்பு என ஈஷாவுக்கு தொடர்ச்சியாக சென்ற அந்த பெண்களுக்கு ஒருகட்டத்தில் ஈஷா யோகா மையத்திலேயே பொறுப்புகள் வழங்கப்பட்டன. அங்கேயே தங்கி சேவை செய்து வந்தனர். மாதம் ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். பெற்றோருடன் அவ்வப்போது தொலைபேசியிலும், தேவைப்பட்டால் நேரிலும் தொடர்பில் இருந்தனர்.

ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கீதா, லதா இருவரும் வீட்டிற்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. தொலைபேசியிலும் பேசவில்லை என்பதால் நேரில் சந்திக்க சென்ற காமராஜ் சத்தியஜோதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மகள்களை பார்க்க அவர்களை ஈஷா யோக மைய நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. பெரிய போராட்டத்திற்குப்பின் மகள்களை பார்த்த காமராஜூம், சத்திய ஜோதியும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றனர். காரணம் மகள்கள் இருவரும் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் சந்நியாசம் பெற்றிருந்தனர். மேலும், 'இனி உங்களை சந்திக்க விரும்பவில்லை' என்றும் கூறி அதிர்ச்சி தந்தனர்.

தங்களது மகள்களை மூளைச்சலவை செய்து, அடிமை போல் நடத்தி தங்களது சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக காமராஜ்- சத்தியஜோதி தம்பதி பரபரப்பு குற்றச்சாட்டை ஈஷா மையத்திற்கு எதிராக வைத்துள்ளனர்.

மொட்டைப் போட்டு சாமியாராக்கிட்டாங்க...

இது தொடர்பாக காமராஜ், சத்தியஜோதி ஆகியோரிடம் பேசினோம். " வளர்ற பிள்ளைங்களுக்கு யோகா அவசியம்னு நாங்கதான் அவங்களை ஈஷா யோகா வகுப்புக்கு அழைச்சிட்டுப் போனோம். முதல்ல 3 நாள் வகுப்புல துவங்கி, அடுத்து ஒரு வாரம், 10 நாள்னு தொடர்ச்சியா ஈஷா வகுப்புக்கு போனாங்க. அதுல ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. எம்.டெக் படிச்சிட்டு லண்டனில பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்தவர் என் மகள் கீதா. இளைய மகள் லதா பி.டெக் முடிச்சிருந்தா. அந்த நேரத்துல என்னென்னமோ காரணம் சொல்லி, என் இரண்டு பெண்களுக்கும் ஈஷாவிலேயே முக்கிய பொறுப்பு கொடுத்தாங்க.

எங்களுக்கு யோகாவில் ஆர்வம் இருந்ததால ஆரம்பத்தில் அதை நாங்களும் அனுமதிச்சோம். நேரம் கிடைக்கறப்போதெல்லாம் இரண்டு பேரும் வீட்டுக்கு வருவாங்க. வராத சந்தரப்பங்கள்ல நாங்க போய் வருவோம். ஆனால் கடந்த 2 மாதங்களா போன் பண்ணலை; நேர்லயும் வரலை. நேரில் போனபோது மகள்கள் இருவரையும் பார்க்க அனுமதிக்கலை. அதை மீறி சந்திச்சோம். 'சந்நியாசம் வாங்கிட்டோம். இனி எங்களை பார்க்க வராதீங்க'னு எங்களுக்கு எதிராகவே பேச வெச்சிட்டாங்க. அவங்களை வசியம் செய்து இப்படி செய்துட்டாங்க. கல்யாணம் ஆகாம இருக்க ரெண்டு பேருக்கும் மொட்டைப் போட்டு சாமியாராக்கிட்டாங்க.

நான்தான் கடவுள்னு சொல்லியும், மோட்சம் தருவதாகச் சொல்லியும் அவர்களை மூளைச்சலவை செய்து இப்படி பண்ணிட்டார் ஜக்கி வாசுதேவ். இத்தனை வருஷம் எங்க பொண்ணுங்களை மூளைச்சலவை செஞ்சு, அங்கேயே வெச்சுக்கிட்டு, இப்போ எங்களை பாக்க முடியாதபடி பண்ணிட்டாங்க. இதை எங்களால தாங்கிக்க முடியலை. எங்க பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்து வாழணும்னு எங்களுக்கு ஆசை. ஆனால் இப்படி பண்ணிட்டாங்க பாவிங்க” என் கண்ணீர் விட்டனர் காமராஜ்- சத்திய ஜோதி தம்பதி.


“எங்க சொத்துக்களை அபகரிப்பதுதான் அவங்க நோக்கம். அதனாலதான் எங்க குழந்தைகளை அரை போதையில வைச்சு, அடிமை மாதிரி நடத்துறாங்க. அமாவாசை, பவுர்ணமி நாட்கள்ல ஒரு மாதிரி ஊக்க மருந்து கொடுக்கறாங்க. அதை சாப்பிட்ட உடன் 30 கி.மீ. தூரம் வரை நடக்க வைக்கிறாங்க.

எல்லாத்துக்கும் மேல ஈஷாவுக்கு வர்றவங்களை ஈர்க்க, எங்கள் பொண்ணுங்களை விற்பனையாளர் மாதிரி நடத்துறாங்க.
மகள்களை மீட்டுத்தரக்கோரி வடவள்ளி போலீஸ் ஸ்டேசன்ல புகார் தந்தேன். போலீஸ் ஸ்டேஷன்ல அவங்க ராஜாங்கம்தான். எங்க பொண்ணுங்க கிட்ட தனியா பேசக் கூட போலீசும், ஈஷா நிர்வாகமும் அனுமதிக்கலை. ஈஷாவில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட போதை மருந்துதான். இதனால் பெற்றோர்களை பார்க்கும்போது குழந்தைகள் சிரிச்சுக் கிட்டே இருப்பாங்க. இதனால் கோமா நிலைக்கு கூட குழந்தைங்க போக வாய்ப்பிருக்கு. ஈஷாவில் சிறுநீரக திருட்டும் நடக்கிறது. எங்க பொண்ணுங்க மட்டுமில்லாம இன்னும் நிறைய பெண்கள், குழந்தைங்க அங்கே இருக்காங்க. அவங்களை மீட்கணும். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுத்து எங்களது மகள்களை மீட்டுத்தரணும்" என்றனர் கண்ணீரைத் துடைத்தபடி.

ஈஷாவில் சந்நியாசம் என்றால்?

"ஈஷாவின் மீது இப்படி பல புகார்கள் வந்திருக்கு. சில புகார்கள் போலீஸ் ஸ்டேஷனோட போய்டும். புகார் கொடுத்த உடன் பொண்ணுங்களை வரச்சொல்வோம். ஈஷா ஆட்களோடதான் வருவாங்க. 'எனக்கு 18 வயசு ஆச்சு. என் விருப்பப்படி தான் சன்னியாசம் எடுத்துகிட்டேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தலை'னு சொல்வாங்க. சட்டப்படி அதுக்கு மேல நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. அதோட அந்த புகார் முடிஞ்சிடும்," என்றார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

'ஈஷாவில் சந்நியாசம் எடுத்தால் அவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்' என ஈஷா மையத்தை நன்கு அறிந்த சிலரிடம் விசாரித்தோம்.

" ஈஷாவுல சந்நியாசம் எடுக்கிறவங்க முதல்ல குடும்ப தொடர்பை முழுமையா நிறுத்திக்கணும். அவங்களோட கல்விச் சான்றிதழ்கள் முதற்கொண்டு அனைத்து ஆவணங்களும் ஈஷா மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போயிடும். சம்பந்தப்பட்டவங்க பேர்ல இருக்கிற சொத்து, நகை, பணம் போன்றவை கூட ஈஷாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்தான் என்னவென்பது தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அரை போதையில்தான் இவர்கள் இருப்பார்கள்," என்றனர் அவர்கள்.

'நாங்க யாரையும் கட்டாயப்படுத்தலை'

இது தொடர்பாக ஈஷா மைய நிர்வாகிகளை தொடர்புகொண்டு விளக்கம் கேட்க முயன்றோம். நேரில் சந்திக்க மறுத்தனர். மக்கள் தொடர்பு அலுவலகத்தின் முக்கிய அதிகாரி என்று சொல்லிக்கொண்ட ஒருவரிடம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொலைபேசியில் பேசினோம்.

" காமராஜின் மகள்கள் இருவரும் விருப்பப்பட்டேதான் இங்கு வந்தார்கள். எப்போது விரும்பினாலும் அவர்கள் இங்கிருந்து செல்லலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவர்கள் மேஜர் என்பதால் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 'பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை' என சொல்லிவிட்டார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும். இப்போது விரும்பினால் கூட அவர்கள் இங்கிருந்து செல்லலாம். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை," என்று சொல்லி நமது அடுத்த கேள்விக்கு வழிகொடுக்காமல் தொடர்பை துண்டித்தார்.

தங்களது இரு மகள்களை காண முடியாமல் பரிதவிக்கின்றனர் ஒரு பெற்றோர். மறுபுறம் காதல் கணவனுடன் வாழும் சத்குரு ஜக்கி வாசுதேவின் மகள் ராதே, தனது இரண்டாம் ஆண்டு மண நாளினை கொண்டாடத் தயாராகி வருகிறார்.

கர்மாக்களை கழிப்பது... துறவறம்!

- ச.ஜெ.ரவி

http://www.vikatan.com/news/tamilnadu/66763-misleading-girls-big-controversy-over-isha-yoga.art

24 comments:

Dr.Anburaj said...

இசுலாம் ஒரு இனிய மாா்க்கம்.

1. “Kill the unbelievers wherever you find them.” Koran 2:191
“Make war on the infidels(non believers of Islam) living in your neighborhood.” Koran 9:123
“When opportunity arises, kill the infidels(non believers of Islam) wherever you catch them.” Koran 9:5

“Any religion other than Islam is not acceptable.” Koran 3:85
“The Jews and the Christians are perverts; fight them.”… Koran 9:30
“Maim and crucify the infidels if they criticize Islam” Koran 5:33
“Punish the unbelievers with garments of fire, hooked iron rods, boiling water; melt their skin and bellies.” Koran 22:19

The unbelievers are stupid; urge the Muslims to fight them.” Koran 8:65
“Muslims must not take the infidels(non belivers of Islam) as friends.” Koran 3:28
“Terrorize and behead those who believe in scriptures other than the Qur’an.” Koran 8:12
“Muslims must muster all weapons to terrorize the infidels(non belivers of Islam).” Koran 8:60)

2. Qur’an 2:193 says; “Fight them until there is no more Al Fitnah (‘Al Fitnah’ meant Jews and Christians at the time, but in today’s context the word means all religious followers including Buddhists&Hindus) and religion is only for Allah. And Qur’an 9:5 says; “Fight and kill the disbelievers wherever you find them, take them captive, harass them, lie in wait and ambush them using every stratagem of war.”

Referring to Hadith, Ishaq:324 says; “Fight them so that there is no more rebellion, and religion, all of it, is for Allah only. Allah must not have rivals.” And Ishaq:587 says; “Our onslaught will not be a weak faltering affair. We shall fight as long as we live. We will fight until you turn to Islam, humbly seeking refuge. We will fight not caring whom we meet. We will fight whether we destroy ancient holdings or newly gotten gains. We have mutilated every opponent. We have driven them violently before us at the command of Allah and Islam. We will fight until our religion is established. And we will plunder them, for they must suffer disgrace.”

Dr.Anburaj said...


துறவறம் குறித்த பதிவை வெளியிடும் தைாியம் இல்லை போலிருக்கின்றதே.

ASHAK SJ said...

(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

==========
பாதி கிணறு தாண்டாதே , முழுவதும் படி, கற்க கசடற

ASHAK SJ said...

9:123. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
===
தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்/////

ASHAK SJ said...

ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

=====
here also u read half only

ASHAK SJ said...

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

இதில் என்ன சந்தேகம், நீங்கள் தெளிவான வழிகேட்டில் உள்ளீர்,

ASHAK SJ said...

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
==
4 வேதமும் சொல்வது இதைத்தான், முட்டாள் தனமாக வேதத்துக்கு மாற்றமாக செயல்பட்டால் இப்படித்தான்

ASHAK SJ said...

9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
===
நீ மூடன் என்பதை திரும்ப திரும்ப நிரூபிக்கிறாய், கற்க கசடற

ASHAK SJ said...

5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
==
இதில் என்ன தவறு, போர் புரிவர் மீதுதான் இந்த தண்டனை, அடித்தால் திரும்பி அடிப்பது வன்முறை அல்ல, வீரம்

Dr.Anburaj said...



குரானும் முஹம்மதுவும் இருக்கும் வரை மனித இரத்தம் ஆறாக ஒடிக் கொண்டிருக்கும்.

இந்த உலக மக்கள் அனைவரும் முஸ்லீமகள் ஆனாலும் இரத்த ஆறு அதிகம் ஓடும்..

மஹம்மதுவிற்கு எத்தனை பெண்டாட்டி ? ரெகானா மாியா என்று எத்தனை

குமுஸ் வைப்பாட்டி. விபரம் சொல்லேன் தம்பி

Dr.Anburaj said...

4 வேதமும் சொல்வது இதைத்தான், முட்டாள் தனமாக வேதத்துக்கு மாற்றமாக செயல்பட்டால் இப்படித்தான்.
----------------------------------------------------------------------------

முட்டாள் தனமாக உளராதே. அரேபிய வல்லாதிக்கத்திற்கும் 4 வேதங்களுக்கும் சம்பந்தமில்லை.அரேபிய குப்பைகளுக்கு 4 வேதத்தில் என்ன இடம் இருக்க முடியும்.

ASHAK SJ said...

1. The universe is only one, How possible for more than one god (one man have only one father not many)
2. God sending prophets to each and every land to regulate the people, god given some books, commandments, advices by oral.
3. Some treats prophets as god, some killed, and some treats as prophets.
4. Atham (PBUH) is the first man and prophet to the world, my assumption atham (pbuh) is the messenger for india, evidence for that one mountain name in srilanka is called Atham. Another prophet Nova (pbuh) also for india , evidence that lamooriya continent sinked in water is more resemblance with flood of prophet nova (pbuh) time,
5. So truth is only one, many not understanding. vedas of indus valley, bible, thora, all says the same truth, but except quran all holy books are given to some group of people some for certain lands, so we can’t use now,
6. Contents of the all holy books are same.
7. Islam is the way of life to reach real god,
8. Prophet Mohamed (pbuh) is the final messenger to the world, and quran is the holy book to the world until this world ends.

ASHAK SJ said...

Let us discuss about god and his image,
1. God is only one without second – vedas
2. God has no image, no picture, no statue etc.,
3. Here I have question to you, please answer i) how many brother u have, ii) How many sister u have? iii) How many uncle u have? iv) How many father u have? This is foolish question but answer must be only one, because impossible one man have more than one father, same like world never has two gods?
4. Another Question, I don’t know you, I didn’t see also, Now I am drawing a monkey and telling this is you, u will accept? If not accept how we can accept some picture drawn by us and telling this is god?
5. Please give evidence from 4 vedas that, god has image.

Dr.Anburaj said...

தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்/////

முஸ“லீம்கள் அனைவரும் புரண யோக்கியா்களாகவா உள்ளாா்கள்.

Dr.Anburaj said...


சிலை வணக்கம் குறித்து யாா் என்ன கருத்து சொன்னாலும் சம்பிராதயங்களைப் பொருத்தமட்டில் பலவிதமான சம்பிராதங்களை இந்து சமயம் அனுமதிக்கின்றது.

சிலை வணக்கம் தேவையா இல்லையா என்பதை தனிநபா் முடிவு செய்து கொள்ள இந்து சமயம் அனுமதிக்கின்றது.

என்னிடம் வந்து நீ ஏன் சிலை வணக்கம் செய்யவில்லை என்று யாரும் கேட்கமாட்டாாகள்.சிலை வணக்கமா -சம்மதமே.தியான மாா்க்கமா அதுவும் சம்மதமே. எல்லையற்ற கடவுளை எந்த வித சம்பிராதயத்திற்குள்ளும் அடக்க முடியாது. இந்து மதம் சிலை வணக்கத்தை பாவம் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.தங்களின் கேள்வி அநாவசியம். தமிழில் தெளிவாக எழுதுங்கள்.
ஆங்கிலத்தில் எழுதும் அளவிற்கு தங்களுக்கு போதிய புலமை இருப்பதாக எனக்கு தொியவில்லை.

Dr.Anburaj said...

Prophet Mohamed (pbuh) is the final messenger to the world, and quran is the holy book to the world until this world ends.
இது வடிகட்டிய முட்டாள்தனம். முஹம்மது ஒரு அரேபிய தாதா.அவ்வளவே. அவரை பின்பற்றும் நாடுகள் இருக்கம் நிலையில் குரான் உலக அழிவிற்கே காரணமாக உள்ளது. குரானையும் முஹம்மதுவையும் மறக்கும் அளவிற்கு உலகம் உருப்படும்.

ASHAK SJ said...

குரானும் முஹம்மதுவும் இருக்கும் வரை மனித இரத்தம் ஆறாக ஒடிக் கொண்டிருக்கும்.- Now no Muhammad (sal)
இந்த உலக மக்கள் அனைவரும் முஸ்லீமகள் ஆனாலும் இரத்த ஆறு அதிகம் ஓடும்// if islaam not follwed well
மஹம்மதுவிற்கு எத்தனை பெண்டாட்டி ? ரெகானா மாியா என்று எத்தனை /// how many wives for lord kirushna?

குமுஸ் வைப்பாட்டி. விபரம் சொல்லேன் தம்பி/ it is already stopped by prophet (sal), this is clear prostitution

Please explain how SHIVLINKAM formed?

ASHAK SJ said...

சிலை வணக்கம் குறித்து யாா் என்ன கருத்து சொன்னாலும் சம்பிராதயங்களைப் பொருத்தமட்டில் பலவிதமான சம்பிராதங்களை இந்து சமயம் அனுமதிக்கின்றது.

சிலை வணக்கம் தேவையா இல்லையா என்பதை தனிநபா் முடிவு செய்து கொள்ள இந்து சமயம் அனுமதிக்கின்றது.

என்னிடம் வந்து நீ ஏன் சிலை வணக்கம் செய்யவில்லை என்று யாரும் கேட்கமாட்டாாகள்.சிலை வணக்கமா -சம்மதமே.தியான மாா்க்கமா அதுவும் சம்மதமே. எல்லையற்ற கடவுளை எந்த வித சம்பிராதயத்திற்குள்ளும் அடக்க முடியாது. இந்து மதம் சிலை வணக்கத்தை பாவம் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.தங்களின் கேள்வி அநாவசியம். தமிழில் தெளிவாக எழுதுங்கள்.
ஆங்கிலத்தில் எழுதும் அளவிற்கு தங்களுக்கு போதிய புலமை இருப்பதாக எனக்கு தொியவில்லை.

////

I didnt see you, but if i draw a picture of Pig or Dog and telling to everybody this is the picture of anburaj, you will accept this or not, similarly nobody see god and draw some picture and telling this is god, is this accepted. I hope we cant degrade god more than that (drawing picture)

ASHAK SJ said...

இது வடிகட்டிய முட்டாள்தனம். முஹம்மது ஒரு அரேபிய தாதா.அவ்வளவே. அவரை பின்பற்றும் நாடுகள் இருக்கம் நிலையில் குரான் உலக அழிவிற்கே காரணமாக உள்ளது. குரானையும் முஹம்மதுவையும் மறக்கும் அளவிற்கு உலகம் உருப்படும்///
upto you, if not accept wait for your result

ASHAK SJ said...

4 வேதமும் சொல்வது இதைத்தான், முட்டாள் தனமாக வேதத்துக்கு மாற்றமாக செயல்பட்டால் இப்படித்தான்.///
all vedas, upadisas, commanments are came from god, the latest holy book is quran, we must follow quran and obey prophet (sal). Hindu, christian are not religion, we all human created by god, god sent prophets to guide the human being, some killed prophets, some traet as prophet some treat as god.

Dr.Anburaj said...


மீண்டும் சொல்கிறேன். தமிழில் எழுத தொிந்த தாங்கள் தமிழில் எழுதுங்கள்.

ASHAK SJ said...

நான் இதுவரை உங்களை பார்த்ததில்லை, ஒரு நாயையோ பன்றியையோ வரைந்து இதுதான் அன்புராஜ் என்றால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீரா? அதேபோல் தான் பார்க்காத கடவுளை கற்பனையாக வரைவது எப்படி அறிவுடைமை ஆகும்

Dr.Anburaj said...




குரான் அரேபியன் முஹம்மது பற்றி கேளவி கேட்டால் பதில் சொல்.

ASHAK SJ said...

இனிமேல் உங்களை நாய் அல்லது பன்றி அன்புராஜ் என்றே அழைக்கிறேன், ஏனென்றால் நான் உங்களை நாயாகவோ அல்லது பன்றியாகவோ கற்பனை செய்து கொள்கிறேன் எப்படி கடவுளை நீங்கள் கற்பனை செய்து கொள்கிறீர்களோ அது போல், சரியா பன்றி அன்பு ராஜ் அவர்களே / பன்றி ராஜ் என்று அழைக்கிறேன்