Followers

Sunday, July 15, 2018

குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கூகுள் என்ஜினீயர் அடித்துக்கொலை

பள்ளி அருகே காரை நிறுத்தி சாக்லேட் கொடுத்ததால் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கூகுள் என்ஜினீயர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:
ஐதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் முகமது அஸம். 32 வயதாகும் இவர் ஐதராபாத் கச்சி பாவ்லியில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகன் இருக்கிறான். ஐதராபாத் எர்ரகுந்தா என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது நண்பர்கள் கத்தார் நாட்டைச் சேர்ந்த முகமது சலாம் மற்றும் நூர்முகமது, சல்மான் ஆகியோர் ஐதராபாத் வந்தனர்.
இவர்கள் 3 பேருடன் முகமது அஸம் கர்நாடக மாநிலம் பிதர்நகரில் நடைபெறும் நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டு இருந்தார்.
வழியில் கமால்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பள்ளி அருகே சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினார்.
அப்போது கத்தார் நண்பரான சலாம் தான் கத்தார் நாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த சாக்லேட்டுகளை எடுத்து பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்தார். குழந்தைகளிடம் அவர்கள் அன்பாக பேசிக் கொண்டு இருந்தனர்.
இதைப்பார்த்த கிராம மக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகப்பட்டு விசாரித்தனர். அவர்கள் சொன்னதை நம்பாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயந்து போன முகமது அஸம் மற்றும் நண்பர்கள் காரில் அங்கிருந்து தப்பினர்.
இதனால் கிராம மக்களின் சந்தேகம் வலுத்தது. கார் சென்ற வழியில் உள்ள பக்கத்து கிராமத்துக்கு அவர்கள் போன் செய்து குழந்தை கடத்தல் கும்பல் காரில் வருகிறது மடக்குங்கள் என்று தெரிவித்தனர்.
உடனே பக்கத்து கிராம மக்கள் உஷார் ஆகி கார் வந்ததும் மடக்கி அதில் இருந்தவர்களை என்னவென்று கூட விசாரிக்காமல் சரமாரியாக தாக்கினார்கள். இதில் முகமது அஸம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். மற்ற 3 பேரும் காயத்துடன் அவர்களிடம் இருந்து தப்பி காரில் சென்றுவிட்டனர். இதனால் 3 பேரும் உயிர் தப்பினார்கள்.
நடந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்திலும் ஐதராபாத்திலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான முகமது ஆஸம் குடும்பத்தினர் மிகுந்த துயரம் அடைந்துள்ளனர். அப்பாவியை கொன்று விட்டார்கள். அவரை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எங்களுக்கு நீதி வேண்டும் என்று கதறினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக பிதர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் கிராம மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
மாலை மலர்
15-07-2018


6 comments:

Dr.Anburaj said...

ஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள்: கம்பன் திறமை! (Post No.5223)

கம்பன் பாட வந்தது இந்திரஜித்- இலக்குமணன் யுத்தம்; பாடல் வருவதோ யுத்த காண்டம், பிரம்மாஸ்திரப் படலம்! அங்கும் கம்பன் தன் தமிழ் கலைக் களஞ்சியத்தைக் காட்டத் தவறவில்லை. சான்ஸ் chance கிடைத்த போதெல்லாம் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறான். ஒரே பாடலில் 22 இசைக் கருவிகளை அடுக்குகிறான்.

காரைக்கால் அம்மையார், பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (மலைபடுகடாம் ஆசிரியர்) ஆகியோரை விஞ்சும் பட்டியலைக் கம்பன் தருகிறான்!

கும்பிகை திமிலை செண்டை குறடு மாப்பேரி கொட்டி

பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர்ப் பணவம் தூரி

கம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை

அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே

பொருள்:-

கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பெரிய பேரிகை, முழக்கும் பம்பை, மாலை அணிந்த முரசு, சங்கு, பாண்டில், போருக்குரிய பணவம், தூரியம், கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, உடுக்கை, புல்லாங்குழல், கணுவை, அம்பலி, கண்டை, ஊமை, சகடை என்னும் இசைக்கருவிகள் முழங்கின.

இந்தப் பாட்டில் 22 கருவிகளை அடுக்கி விட்டு, அடுத்த இரண்டு பாடல்களில் யானையின் மீதான பறை கீழே தொங்கவிடப்பட்ட மணி, ஊது கொம்பு, ஆகுளிப் பறை, பீலி என்னும் துளைக் கருவி, இவ்வாறு மொத்தம் 27 கருவிகளின் பெயர்களைச் சொல்லுகிறான்.

கம்பன் ராமாயணக் கதை மட்டும் சொல்லவில்லை. தமிழர் நாகரீகத்தையும் பாடல்களில் பாடியிருக்கின்றாா். என்னே கம்பனின் கவித்திறமை. தமிழா் -இந்துக்களின் நாகரீக சிறப்பு.

Dr.Anburaj said...

காரைக்கால் அம்மையார் ஏழு பண்களையும் 11 இசைக் கருவிகளையும் கம்பனுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டியலிட்டார்

துத்தம் கைக் கிள்ளை விளரி தாரம்

உழை இளி ஓசை பண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன் கை மென் தோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினோடாடும் எங்கள்

அப்பன் இடம் திருவாலங்காடே

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

Dr.Anburaj said...

காரைக்கால் அம்மையாருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் மலைபடுகடாமில் ஒரு பட்டியலைப் பார்க்கிறோம்

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள் தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் இசை!!-நன்றி- ஆதாரம் தமிழ்வேதா

Dr.Anburaj said...

சுயமாக இந்துவாக மாறிய ஆங்கிலேயா் - அபூர்வ வைஷ்ணவ ஆசார்யர் ரொனால்ட் நிக்ஸன் என்னும் கிருஷ்ண ப்ரேம்!

பிறப்பால் மேலை நாட்டில் பிறந்தாலும் சிலர் ஹிந்து மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஹிந்து மத ஆசார்யர்களாகவும் வழிகாட்டிகளாகவும் ஆகி மதித்துப் போற்றப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் வைஷ்ணவ ஆசார்யர் ரொனால்ட் நிக்ஸன் என்னும் கிருஷ்ண ப்ரேம்!

ரொனால்ட் ஹென்றி நிக்ஸன் இங்கிலாந்தில் செல்டன்ஹாம் என்ற இடத்தில் பிறந்தார். (தோற்றம் 10-5-1898 மறைவு 14-11-1965).

18ஆம் வயதில் முதல் மகா யுத்தத்தில் அவர் பிரிட்டிஷ் ஃபைட்டர் பைலட்டாக பணியாற்றினார். மரணத்தின் விளிம்பிலிருந்து ஏதோ ஒரு அற்புத சக்தியால் தப்பினார். போர் முடிந்த பிறகு கேம்பிரிட்ஜில் கிங்ஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார். அத்துடன் பல்வேறு மதங்கள் பற்றியும் அறிந்து கொண்டார். பாலி,சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல பாஷைகளில் வல்லுநர் ஆனார். 1921இல் இந்தியா வந்த நிக்ஸன் லக்னௌ பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணியை மேற்கொண்டார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஞானேந்திர சக்ரவர்த்தி ஒரு ஆன்மீகவாதி. அவரது மனைவி மோனிகா தேவி உலக வாழ்வைத் துறந்து வைஷ்ணவத்தில் பற்று கொண்டு அதைப் பின்பற்றலானார். அவரது பெயர் யசோதா மாயி ஆயிற்று. அவரைக் குருவாக ஏற்றார் நிக்ஸன்.

நாளடைவில் அவரும் உலக வாழ்வைத் துறந்தார்; கிருஷ்ண ப்ரேம் என்ற பெயருடன் புகழ் பெற்றார். 1930இல் அல்மோரா அருகில் மிர்டோலா என்ற இடத்தில் யசோதா மாயியும் சிஷ்யர் கிருஷ்ண ப்ரேமும் ஒரு ஆசிரமத்தைத் துவங்கினர். ஏராளமான சிஷ்யர்கள் அவர்களைப் பின்பற்றலாயினர்.

தனது ஆசிரமத்திலேயே பெரும்பாலும் கிருஷ்ண ப்ரேம் தங்கினாலும் ஒரு முறை அவர் தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டார்.

ரமண மஹரிஷியைத் திருவண்ணாமலையில் தரிசித்தார். அவரைப் பற்றி ரமணர்,”கிருஷ்ணப்ரேம் ஞானியும் பக்தனும் இணைந்து சேர்ந்த ஒரு அபூர்வமானவர்” என்று கூறினார்.
ரமணர் ஹாலில் தனது இருக்கையில் அமர்ந்திருக்க உள்ளே நுழைந்த கிருஷ்ணப்ரேம் மௌனமாக அமர்ந்தார். நீ யார் என்ற கேள்வி அவரைக் குடைய ஆரம்பித்தது. எல்லோரிடமும் உறைந்திருக்கும் கிருஷ்ணரின் பணியாளன் என்று மனதிற்குள் சொன்னார். ஆனால் அந்தக் கேள்வி அவரைத் தொடர்ந்து கொண்டே இருக்க ஹாலை விட்டு வெளியேறினார்.

மறு நாள் காலை மௌனமாக உள்ளே வந்து அமர்ந்த அவர் ரமணரைப் பார்த்து மனதிற்குள்ளாகவே, “ நீங்கள் யார் என்று நான் கேட்கலாமா?” என்றார். அடுத்த கணம் கண்ணைத் திறந்து அவர் பார்த்த போது ரமணரின் இருக்கை காலியாக இருந்தது. காற்றில் கலந்தது போல அவரைக் காணோம். அடுத்த கணம் அவர் மீண்டும் இருக்கையைப் பார்த்த போது அவர் இருக்கையில் இருந்தார். அவரின் உதட்டோரத்தில் ஒரு சிரிப்பு தவழ்ந்தது. அவர் உண்மையின் சொரூபம், பாடலுக்கு அப்பாற்பட்ட மோனம் என்பதை கிருஷ்ண ப்ரேம் உணர்ந்தார்.
பாண்டிச்சேரி சென்ற கிருஷ்ண ப்ரேம் மஹரிஷி அரவிந்தரையும் அன்னையையும் தரிசித்தார்.

மஹரிஷி அரவிந்தர் கிருஷ்ணப்ரேமைப் பற்றிக் கூறும் போது “அவரிடம் ‘seening intellect’ இருப்பதாகத் தெரிவித்தார்.

அரவிந்தர் திலிப்குமார் ராய்க்கு எழுதிய கடிதத்தில் கிருஷ்ண ப்ரேமின் கடிதங்களில் உண்மையின் ஆதாரம் தெரிவதாக எழுதினார்.
...2

Dr.Anburaj said...

இந்தியாவைப் பற்றி கிருஷ்ண ப்ரேம் கூறுகையில், “Often while meditating I catch myself praying to Krishna that He may never let India’s immemorial soul be swamped by the rational robustious, scientific agnosticism of the blatant West, blurring over a thousand loud speakers : ‘Religion is the opium of the mind’. May He always shower His blessing on India, whose very dust heaves with latent godliness in whose tiniest crannies mystic faith flowers like green grass-blades through chinks in rocks – India, whose people have only to anoint wayside stones with vermillion to endow them with sanctity. May these remain custodians of the precious heritage of faith in Jagat-pranam as the Bhagavat puts it.”

(Dilip kumar Roy’s quote in his book ‘Yogi Krishnaprem – page 80)



Dr.Anburaj said...

பதிவுகளை வௌியிட்டமைக்கு நன்றி.