Followers

Wednesday, July 25, 2018

இறைவனடி சேர்ந்து விட்டார் இலங்கையைச் சேர்ந்த இர்ஃபான் ஹஃபீஸ்!


இறைவனடி சேர்ந்து விட்டார் இலங்கையைச் சேர்ந்த இர்ஃபான் ஹஃபீஸ்!

தன்னம்பிக்கையும், தன் உந்து சக்தியும், மனஉறுதியும் (Will Power) இருந்தால் எப்படியும் வாழ்ந்து காட்டலாம் என்பதற்கு ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டு இர்ஃபான் ஹஃபீஸ்.

முன்பொரு முறை அறிஞர் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்கள் இவரைப் பேட்டி கண்ட காணொளியைக் கண்டேன். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றெண்ணி நமது நல்ல நிலையைக் கண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். படுக்கையில் கிடக்கும் இவரை இத்தனை ஆண்டு காலமாக இன்முகத்துடன் இவரின் பெற்றோர் கவனித்திருக்கிறார்கள். அந்தப் பேட்டியில் அவரின் தந்தைதான் பேசினார். படுத்த படுக்கையிலும் நூல்கள் எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இர்ஃபான் ஹஃபீஸ்.

இவரது பொறுமையை இறைவன் அங்கீகரித்து, இவரது கப்றை சுவனப் பூஞ்சோலையாக ஆக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் இவரை இறைவன் நுழையச் செய்வானாக!



No comments: