Followers

Tuesday, July 24, 2018

ஆற்று நீரை வரவேற்கும் கிராம மக்கள்!

ஆற்று நீரை வரவேற்கும் கிராம மக்கள்!
சிறுவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் ஓடும் குடமுருட்டி ஆற்று நீரை வரவேற்க நண்பர்களோடு செல்வது வழக்கம். நண்பர்களோடு குளிக்கவும் செய்வோம். ஒரு முறை மடுவத்தில் கால் வைத்து என்னை தண்ணீர் மிக வேகமாக உள் இழுத்தது. திக்கு முக்காடி போனேன். நண்பர் ஆரிஃபின் உதவியால் அன்று நான் காப்பாற்றப்பட்டேன். ஒவ்வொரு முறை ஆற்றங்கரைக்கு போகும் போது அந்த நிகழ்வு நிழலாடும்.
இறைவன் கொடுத்த அளப்பரிய மழையால் இன்று காவிரி கரை புரண்டு ஓடுகிறது. வரும் நீரை இந்த அரசு எந்த வகையில் சேகரிக்க வேண்டும் என்று யோசித்தால் நல்லது. ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று மழையை இறைவன் பயனுள்ளதாக ஆக்கித் தந்தருள்வானாக!


No comments: