Followers

Thursday, August 09, 2018

காமராஜருக்கு இடம் தர மறுத்தார் கலைஞர் என்பது உண்மையா?


காமராஜருக்கு இடம் தர மறுத்தார் கலைஞர் என்பது உண்மையா?

கருணாநிதி மறைவின்போது அவருக்கு மெரினாவில் இடம் தர தமிழக அரசு மறுத்தபோது அதற்கு ஆதரவாக முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி, அதனால் இது சரிதான் என்று மீம்ஸ்களும், செய்திகளும் பரப்பப்பட்டது.
இதை பலரும் மறுத்தாலும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த பழ.நெடுமாறனிடம் கேட்டறிந்தால்தான் சரியாக இருக்கும் என ஆங்கில நாளேடு ஒன்று பேட்டி கண்டுள்ளது.
அதில் பழ நெடுமாறன் கூறியதாக அந்த செய்தியில் வந்திருப்பதாவது:
காமராஜர் மறைந்ததும், அவரது உடலுக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால், காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என்று தானே முன்வந்து கூறினார்.
பின்னர் அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை.
இப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் அறியாத கருத்துக்களை உண்மை என நினைக்கிறார்கள். அதை பரப்புகிறார்கள். உண்மையை கண்டறிய அக்கறை காட்டுவதில்லை.என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் ஆவல் கணேசனிடம் கேட்டபோது நெடுமாறன் தெரிவித்தது உண்மைதான், கருணாநிதி காமராஜருக்கு உரிய மரியாதை அளித்தார், வலைதளங்களில் வரும் தகவல்கள் தவறானது என்று தெரிவித்தார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ
09-08-2018



2 comments:

Dr.Anburaj said...

மெரினாவில் அடக்கம் செய்தால் செய்யவில்லை என்பதால் காமராஜரின் தகுதி தியாகத்திற்கு ஒரு குறையும் இல்லை. எங்கேயிருந்தாலும் சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் தான். காக்காய்பொன்களுக்குதான் -tinsel - அலங்காரங்கள் விளப்பரங்கள் பகட்டு எல்லாம் தேவை.
திரு.கருணாநிதி அவர்கள் ஒரு பணக்கார அரசியல் வாதி. அவர்கள் நினைத்தால் ஏதுவம் வசப்படும். பணம் பத்தும் ஆயிரம் கோடி செய்யும்.

ASHAK SJ said...

அந்த சொக்கதங்கத்தை உயிரோடு எரிக்க முயற்சித்தது ஆர் எஸ் எஸ்