Followers

Tuesday, August 28, 2018

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நன்றி கூறிய கேரள போர்ட் மினிஸ்டர்.......

நேரில் சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நன்றி கூறிய கேரள போர்ட் மினிஸ்டர்.......
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வீரியமான பணி நடைபெறுவதை அரசு வட்டாரங்கள் உற்று கவனித்து வருகின்றது.
ஏற்கனவே பாதாளம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணிகளை பார்த்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வந்து சந்தித்து மனம் நெகிழ்ந்து பாராட்டி நன்றி சொல்லி சென்றனர்.
தொடர்ந்து ஓய்வுமில்லாமல், தோய்வும் இல்லாமல் நிவாரண பணிகள் நடந்து வருவதை அரசு வட்டாரங்கள் அதிசயத்தோடு பார்த்து வருகின்றனர்.
பரவூர் பகுதியில் வெள்ள நிவாரண பொருட்கள் விநியோகம் செய்யும் போது போர்ட் மினிஸ்டர் கடந்தபள்ளி இராம சந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததுடன் நன்றி கூறினார்.
களப் பணியில் மாநில நிர்வாகிகளும் உள்ளதை கவனிக்கவும்....
எல்லா புகழும் இறைவனுக்கே!




No comments: