Followers

Monday, May 26, 2014

இரும்பை பற்றி குர்ஆன் கூறுவதென்ன? ஒரு மீள் பதிவு!

இந்த பதிவை படிக்கும் முன் ஒரு விளக்கம். குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல. அது மனிதன் எவ்வாறு தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை அடங்கிய வேதம். இது இறைவனிடம் இருந்துதான் வந்ததா? அல்லது முகமது நபி தனது கற்பனையில் குர்ஆனைக் கொடுத்தாரா என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. முஸ்லிம்களை பொறுத்த வரையில் ஒரு பிரச்னையும் இல்லை. குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் அவர்களிடத்தில் கிடையாது. மற்ற மதத்தவர் இந்த குர்ஆன் இறைவன் வாக்காக இருக்க முடியாது என்ற வாதத்தை வைக்கின்றனர். எனவே அந்த வாதத்தை எதிர் கொள்ள முஸ்லிம்களும் இது இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க சில அறிவியல் ஆதாரங்களை தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அந்த வகையில் முன்பு கடலுக்கடியில் உள்ள இருள்களைப் பார்த்தோம். இந்த பதிவில் இரும்பைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது. அதற்கு அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.



நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும் மக்களுக்குப் பயன்களும் உள்ளன.
-குர்ஆன் 57:25


மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடி பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.




இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும். சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது.அப்படி பூமி படைக்கப்படும் போது இரும்பு எவ்வாறு பூமியின் கட்டுமானத்தில் வந்திருக்க முடியும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.




விண்ணிலிருந்து வரும் விண்கற்களில் உள்ள இரும்புக்கும் நாம் பயன்படுத்தும் இரும்புக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.

http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637

என்சைக்ளோபீடியாவின் இந்த பக்கத்துக்கு சென்று வானிலிருந்து விழுந்த இரும்பு துண்டுகளை நாடு வாரியாக படங்களோடு பாருங்கள். சில காணொளிகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.




'இரும்பில் மக்களுக்கு பயன்கள் உண்டு' என்ற இந்த வார்த்தையை ஒட்டி நாம் சிறிது ஆராய்வோம். நமது மருத்துவ உலகம் மனிதனுக்கு இரும்புச் சத்து எந்த வகையில் உபயோகமாக உள்ளது என்பதை பட்டியலிடுகிறது. அதை இனி பார்ப்போம்:

இயற்கையில் அபரிமிதமாக கிடைக்கும் இரும்புச் சத்து உடலின் நலத்திற்கு மிக அவசியமாகும். பெரும்பான்மையான புரதங்கள், என்சைம்கள் போன்றவற்றிற்கு இரும்புச் சத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்ஸிஜன் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்ல இரும்புச் சத்து அவசியம். செல்கள் மேலும் பெருக, வளார்ச்சி அடைய இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்புச் சத்து குறைவால் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஏற்படும். அதே சமயத்தில் இரும்புச் சத்து அதிகமானால் விஷமாகி இறக்கவும் நேரிடலாம்.

உடலில் 3ல் 2 பகுதி இரும்புச் சத்து ஹீமோக்லோபின் ஆக இரத்த சிவப்பணுக்களில் இருக்கிறது.இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மையோ க்ளொபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும். இவற்றிலும் இரும்பு சத்து உண்டு.

இரும்பை உறிஞ்ச தேவையான புரதத்திலும் இரும்புச் சத்து உள்ளது. அதேபோல அதிக இரும்பை சேகரித்து வைக்க உதவும் என்சைம்களில் இரும்பு இருக்கிறது. ஹீம், ஹீம் அல்லாத வகை என இரண்டு வகைகளில் இரும்பு உடலில் இருக்கிறது. இது பெரும்பாலும் புலால் உணவில் கிடைக்கும். பருப்பு வகைகளில் இருக்கும் இரும்பு ஹீம் அல்லாத வகையில் இருக்கிறது. குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்க படும் இரும்புச் சத்து இந்த வகையை சேர்ந்ததே.

உலக சுகாதார மையம் இரும்புச் சத்தின் குறைவால் வரும் நோய்கள்தான் உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று கூறுகிறார்கள். உலகின் 80% மக்கள் இரும்பு குறைவாக கொண்டவர்கள் அதில் 30% மக்கள் இரும்பு குறைவதால் வரும் இரத்த சோகை கொண்டவர்கள் எனக் கூறுகிறார்கள்.

………Iron is an essential element for most life on Earth, including human beings. Most of the human body's iron is contained in red blood cells……
- http://en.wikipedia.org/wiki/Human_iron_metabolism

Without the iron atom, there would be no carbon-based life in the cosmos; no supernovae, no heating of the primitive earth, no atmosphere or hydrosphere. There would be no protective magnetic field, no Van Allen radiation belts, no ozone layer, no metal to make hemoglobin [in human blood], no metal to tame the reactivity of oxygen, and no oxidative metabolism.
-Nature’s Destiny, the well-known microbiologist Michael Denton emphasizes the importance of iron.





அமெரிக்க நாசா நிறுவனத்தில் புரபசராக வேலை செய்யும் விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங் சிறந்த அறிவியல் அறிஞர். the National Aeronautics and Space Administration என்ற நிறுவனத்தில் மிகப் பிரபல்யமானவர். 'வானியலைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?' என்று பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். உலகில் உள்ள அனைத்து திட பொருட்களும் எவ்வாறு உருவாகியிருக்க முடியும் என்ற முடிவுகளையும் அறிந்து வைத்துள்ளார். மேலும் இரும்பை உருவாக்கும் முறையை விஞ்ஞானிகள் சமீப காலங்களில்தான் கண்டு பிடித்தனர். இரும்பின் அடிப்படை உருவாக்கத்தை பெற போதிய சக்தியற்று இருந்தோம். அதாவது இரும்பை உருவாக்கும் ஒரு அணுவை உற்பத்தி செய்ய போதிய சக்தியை இந்த பிரபஞ்சம் பெற்றிருக்கவில்லை என்கிறது அறிவியல் முடிவுகள். எனவே இந்த இரும்பானது வேறு ஒரு கிரகத்திலிருந்து நமது பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் நமது விஞ்ஞானிகள்..

அதிலும் நமது பிரபஞ்சத்திலிருந்து இரும்பு வந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் ஏறத்தாழ கைகழுவி விட்டனர். நமது சூரியனை விட மிகப் பெரும் ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த இரும்பானது வந்திருக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது. சில நூறு மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவில் உள்ள வெப்பத்துடன் கூடிய ஒரு நட்சத்திமாக அது இருக்கலாம் என்பது இவர்களின் கணிப்பு. இரும்பின் அடர்த்தி குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகரிக்கும் போது வெடித்து சிதறி வால் நட்சத்திரங்களாக பூமியை நோக்கி வந்திருக்கலாம். அது வானுலக விசையாக இருக்கலாம் என்ற முடிவுக்கும் வருகின்றனர் விஞ்ஞானிகள்.



“இரும்பையும் இறக்கினோம்”

அதிலும் கூட தனிமங்களாக இல்லாமல் முழு இரும்பாகவே இந்த பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் விஞ்ஞானிகள். இனி குர்ஆனுடைய வசனத்தைப் பார்ப்போம். 'இரும்பையும் இறக்கினோம்: அதில் பல உபயோகங்கள் மனித குலத்துக்கு உள்ளது' என்ற வசனத்தை நாம் சிந்தித்தோமானோல் தற்கால அறிவியல் முடிவோடு குர்ஆன் ஒத்து செல்வதை எண்ணி பிரமிக்கிறோம். வேறு எத்தனையோ பொருள்கள் அனைத்தும் பூமியிலேயே நமக்கு கிடைத்துக் கொண்டிருக்க அதை எல்லாம் குர்ஆன் சொல்லாமல் இரும்பை மட்டும் தனித்து சொல்வதால் அதுவும் தற்கால அறிவியலோடு முற்றிலும் ஒத்து போவதால் இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது.


பண்டைய எகிப்தியர்களும் இரும்பை 'சொர்க்கத்தின் உலோகம்' என்று குறிப்புகள் எழுதியுள்ளது கிடைக்கப் பெறுகிறது. குர்ஆனுக்கு முந்தய இறை வேதங்களிலும் இந்த செய்தி சொல்லப் பட்டிருக்க வேண்டும். எனவேதான் பண்டைய எகிப்தியர்களுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது. பண்டைய எகிப்துக்கு மோசே என்ற இறைத் தூதர் வந்ததும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேதம் தோரா என்பதும் நமக்கு முன்பே தெரியும்.

'இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. சிறிது காலத்திற்கு பிறகு இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்.'

-குர்ஆன் 38:87,88

ஆம். இந்த குர்ஆன் மனிதன் தனது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் வெற்றி பெறுவான் என்பதை விளக்கும் ஒரு வேதம். வெறுமனே மரியாதை செய்கிறோம் என்று கண்களில் ஒத்திக் கொள்வதை விட அதன் மொழிபெயர்ப்பை வாசித்து இறைவன் நம்மோடு என்ன பேசுகிறான் என்பதை ஒவ்வொரு மனிதனும் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை அருளியதாக இறைவன் கூறகிறான். இந்த குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகள முகமது நபி காலத்திய மக்களுக்கு விளங்கா விட்டாலும் பின்னால் வரக் கூடிய அறிவார்ந்த சமூகம் விளங்கிக் கொள்ள பல அத்தாட்சிகள் இதில் இருக்கிறது என்பதையும் இறைவன் குறிப்பிடுகிறான்.

References
1.↑ Kathryn A. Bard - Encyclopedia of the archaeology of ancient Egypt (P. 526) - Routledge; Ill edition, May 14, 1999, ISBN 978-0415185899
2.↑ Kate Melville - Sun's Iron Core May Be Cause Of Solar Flares - Science a Go Go, November 3, 2003
3.Harun yahya.com
4.wikipedia
5. http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637

7 comments:

tamilan said...

இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் தங்கமும் வெள்ளியும் உருவான விதம்.

இது ஸ்ரீமத் பாகவதத்தில் 8.5.11 ஆம் பதத்தில் பரீட்சித்து மன்னன் சுக முனியிடம் பகவானின் லீலையை எடுத்தியம்புமாறு கேட்டுக் கொள்வதில் இருந்து துவங்குகிறது.

அதை மகிழ்வுடன் ஏற்ற சுகமுனி பகவானின் லீலைகளை விவரிக்கிறார்.

சிவன் உமையவளுடன் தனது காளை வாகனத்தின் மீதேறி , பூதகணங்கள் சூழ விஷ்ணுவைச் சந்திக்கிறார். அவரைப் புகழ்ந்து பாசுரங்களைப் பாடி, மோகினி அவதாரத்தை தானும் காண வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அதற்க்கு இசைந்த விஷ்ணு அங்கிருந்து மறைந்து போகிறார். பின்னர் தூரத்தில் ஒரு அழகிய வனத்தில் பேரழகியான ஒரு பெண் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

அவளது உடலைச் சுற்றியிருக்கும் சேலையைத் தவிர வேறு ஆடைகள் எதுவும் அவள் அணிந்திருக்கவில்லை.

அவ்வப்போது சிவனை தனது ஓரக்கண்ணால் புன்னகையுடன் பார்க்கிறாள். இதைக் கண்ட சிவன் தன்னை அவளுக்குப் பிடித்துவிட்டது போல என நினைத்து அவள்பால் மிகவும் ஈர்க்கப் படுகிறார்.

அவளது பேரழகில் மயங்கிய சிவன் உமையவள் தன்னுடன் இருகிறாள் என்பதையும் மறந்து அவள் பின்னர் செல்கிறார். ஆனால் அவள் மீண்டும் விலகி சற்று தூரம் போய் விடுகிறாள். சிவனும் விரட்டிச் செல்கிறார். அப்போது காற்று பலமாக வீச அவளது ஆடை காற்றில் பறந்து செல்ல முழு நிர்வானமாகிறாள்.


விரட்டிச் சென்ற சிவன் அவளது ஜடையை கையில் பிடித்து இழுத்து அணைக்கிறார், ஆனாலும் உடனே அவர் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மோகினி தப்பித்துச் சென்று விடுகிறாள்.

அவளை மீண்டும் விரட்டிய சிவன் அவளைப் பிடிக்க இயலாமல் விந்துவை வெளியிடுகிறார்.

சிவன் வெளியிட்ட அது ஒரு போதும் வீணாகாது. பூமியில் எங்கெல்லாம் அது விழுந்ததோ அங்கெல்லாம் தங்கம், வெள்ளிச் சுரங்கங்களாக மாறின.

இவ்வாறு யாராலும் அசைக்க முடியாத மன உறுதியைக் கொண்ட சிவனையும் மதிமயக்கச் செய்யும் லீலைகளைப் புரிந்த பகவானை நான் வணங்குகிறேன் என சுகமுனி முடிக்கிறார்.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன் ஹிந்துவாக இருந்தால் இந்த புராண கதையிலும் அறிவியல் இருக்கிறது என்று புல்லரித்து சகட்டு மேனிக்கி பதிவிடுவார். அறிவியல் அறிஞர்கள் இப்படி சொல்கிறார்கள்; அப்படி சொல்கிறார்கள் என்றெல்லாம் கதையளப்பார். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஆனந்த் சாகர் said...

//விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது.//

பழங்கால மக்கள் அனைவருக்கும் தேவையான இரும்பை அவர்கள் விண்கற்களில் இருந்தே பெற்றனர் என்று சொல்ல வருகிறீரா? அப்படியானால் அவர்களின் இரும்பு தேவையை பூர்த்தி செய்ய உலகம் முழுவதும் தினமும் சராமாரியாக விண்ணிலிருந்து கற்கள் விழுந்துகொண்டு இருந்ததா? உங்களிடம் இதற்கு ஆதாரம் இருக்கிறதா?


// எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.//

விண்ணிலிருந்து இரும்பை இறைவன் இறக்கினான் என்பது சுத்த உளறல். இரும்பு காலம் தொட்டு மனிதர்கள் இரும்பை பல வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர். இது அனைவருக்கும் தெரிந்ததே. இதைதான் முகம்மதுவும் சொன்னார். இதில் எந்த சிறப்பும் இல்லை.

tamilan said...

சிவனின் சிந்திய‌ இந்திரியம்.

பரமசிவனுக்குள்ளோ மன்மதப்புயல், பார்வதியை பார்க்கப் பார்க்க சுற்றிச் சுழன்று அவரை தாக்குகிறது.

பார்வதி மீது மன்மத தாண்டவம் ஆடிட மிகத்தயாராக இருக்கிறார். ஆனால்... சக்திக்கு சம்மதமில்லை.பார்வதியை துரத்துகிறார் பரமசிவன். நாதனின் வேட்டையிலிருந்து தப்பிக்க நழுவி ஓடுகிறார் பார்வதி.

பரமசிவனாயிற்றே... விட்டு விடுவாரா? பார்வதியை வளைத்து தன் கைகளின் எல்லைக்குள் இழுத்து விட்டார்.

`தேவி... உன்னை சுகிக்க சித்தமாயுள்ளேன்... தேக சம்பந்தம் கொள்ள தாகமாயிருக்கிறேன். ஏன் நீ விலகிச் செல்கிறாய்? என்னாயிற்று உனக்கு?’ - பார்வதியை ஒரு கொடிபோல சுற்றிக்கொண்டு பரமசிவன் விரகதாபத்தோடு வினா கேட்கிறார்.

`இல்லை நாதா... இப்போது வேண்டாமே...’ - மறுபடியும் அவளது பதில் இதுதான்.பகவானாக இருந்தாலும் தன் பாகங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முழுதாக பார்வதியை இறுக்கி கட்டியணைத்தவர்... அவளது ஆடைகளையும் அகற்ற ஆரம்பிக்கிறார்.

`ஸ்வாமி... நாதா...’ கெஞ்சுகிறார் பார்வதி. ஆனால்... இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் சுகத்துக்கான போருக்கு தான் மட்டுமே தயாராகி விட்டார் சிவன்.

பார்வதியின் ஒவ்வொரு பாகங்களையும் தன் கட்டுக்குள் பரமசிவன் வைத்திருக்க... இப்போதும் சக்தி சம்மதிக்கவில்லை.

சிவனுக்கோ தாங்க முடியவில்லை. மன்மதக் கோபம் அவருக்குள் கொந்தளித்தது. பார்வதி மீது பாய்ந்து படர்ந்தார்.

ஆனால்... பார்வதியோ... சரியாக அந்த க்ஷணத்தில் தன் உடலை சற்று விலக்கிக் கொள்ள... பரமசிவனின் உயிர்த்துளிகள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை.

பார்வதி விலகிவிட்டதால் பரமசிவனின் ரேதஸ் (இந்த்ரிய துளிகள்) அப்படியே ஆகாயத்திலிருந்து கீழே விழுந்தன. அந்த உயிர்த்துளிகள் அப்படியே கங்கையில் வந்து விழுந்தன.

சிவபெருமானின் சொத்தாயிற்றே.... கங்கை நீரோட்டத்தோடு வேக வேகமாக பயணித்தன.

கங்கா மேலே சவாரி செய்த அந்தத் துளிகள்... கங்கைக்கரையோரம் படர்ந்திருந்த ஒரு நாணல் காட்டுக்குள் சென்று தேங்க...அப்படியே அது குழந்தையாக அவதரித்தது.

நாணலுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சரம். காட்டுக்கு வனம். சரவனம்... - நாணல் காட்டில் பின் உருவானவன் - என்பதால் சரவணன் - இப்போது சரவணன் என்று அழைக்கப்படுகிறான் முருகன்.சமஸ்கிருதத்தின்படி, சரவணன் இப்படித்தான் அவதரித்தான். பெயர் தரித்தான்.

கந்தன் என்றால்...? அதை கந்தன் என்று சொல்லக்கூடாது. உண்மையான சரியான சமஸ்கிருதப் பெயர் ஸ்கந்தன்.சரி... ஸ்கந்தன் என்றால்? இப்போது ஒரு வடமொழி கதை வாசித்தீர்களே... அதற்குள் வரும் மூலப் பெயர்தான் இது.

அதாவது... ஆணுடைய உயிர்த்துளிகள் பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்... அதன் பெயர்தான் ஸ்கந்தன்.

இப்போது புரிகிறதா?

- Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்



READ:
http://thathachariyar.blogspot.sg/2010/12/blog-post_21.html


“புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,
“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”,
“மஹோ பாத்யாய”,
“மகா மஹோ பாத்யாய”
Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்னும் வைணவப் பெரியார் ஒரு இந்து மதப் பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக தாத்தாச்சாரியாருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கியிருக்கிறது.

suvanappiriyan said...

//பழங்கால மக்கள் அனைவருக்கும் தேவையான இரும்பை அவர்கள் விண்கற்களில் இருந்தே பெற்றனர் என்று சொல்ல வருகிறீரா? அப்படியானால் அவர்களின் இரும்பு தேவையை பூர்த்தி செய்ய உலகம் முழுவதும் தினமும் சராமாரியாக விண்ணிலிருந்து கற்கள் விழுந்துகொண்டு இருந்ததா? உங்களிடம் இதற்கு ஆதாரம் இருக்கிறதா?//

பழங்கால எகிப்திய மக்கள் இரும்பை 'சொர்க்கத்தின் உலோகம்' என்று குறிப்பிட்டுள்ளதை பண்டைய எகிப்து நூல்கள் தெரிவிக்கின்றன. விண்ணிலிருந்து உலகம் உருவான காலம் முதல் இரும்பு கீழ் நோகிக வந்துள்ளதை பல நாடுகளில் சென்று ஆய்வு செய்து புகைப்படங்களோடு வெளியிட்டுள்ளதை நான் கொடுத்த சுட்டியில் பார்த்துக் கொள்ளவும்.

suvanappiriyan said...

சரவணன், ஸ்கந்தன் என்ற பெயர்களுக்குள் இத்தனை அறிவியல் பூர்வமான கதைகள் உள்ளதை நினைத்து நான் மலைத்து போய் உள்ளேன். ஆனந்த் சாகர் மற்ற புராணங்களையும் படித்து இது போன்று பதிவுகளை எழுதி எங்களை எல்லாம் திரும்பவும் தாய் மதத்தை நோக்கி அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆனந்த் சாகர் said...

//சரவணன், ஸ்கந்தன் என்ற பெயர்களுக்குள் இத்தனை அறிவியல் பூர்வமான கதைகள் உள்ளதை நினைத்து நான் மலைத்து போய் உள்ளேன். ஆனந்த் சாகர் மற்ற புராணங்களையும் படித்து இது போன்று பதிவுகளை எழுதி எங்களை எல்லாம் திரும்பவும் தாய் மதத்தை நோக்கி அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.//

நண்பர் தமிழன் மேற்கண்ட பின்னூட்டத்தை இட்டுள்ளார். நான் அல்ல. எனக்கு புராண கதைகளில் நம்பிக்கை இல்லை. நீங்கள் எல்லாம் இஸ்லாத்தை விட்டு வெளியேறி ஆன்மீக பாதையில்(மதமல்ல) பயணிக்க வேண்டும் என்பதே என்னை போன்றவர்களின் விருப்பம். ஆன்மீகத்திற்கு மதம் கிடையாது. ஆனால் ஹிந்து மதம் பல ஆன்மீக உண்மைகளை போதிக்கிறது. குறிப்பாக அத்வைத சித்தாந்தம்.